Monday, January 31, 2011

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதியின் மனதை மாற்றிய முஸ்லிம் பேசுகிறார்!!


ஹைதராபாத்,

ஜன.31:சிறையில் இரண்டு தடுப்புகளைத் தாண்டி தனிமையிலிருந்த முதியவரிடம் பேசத் துவங்கிய பொழுதும், அவருக்கு உணவும், குடிநீரும் கொண்டுவந்துக் கொடுத்த பொழுதும் எவ்வித குற்றமும் செய்யாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ள தான் விரைவில் இச்சிறையிலிருந்து விடுதலையாகி வெளியுலகை காணப் போகிறேன் என்பதை அப்து கலீம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்ட்டார்.
செய்யாத குற்றங்களுக்காக சித்திரவதைகளையும், சிறைவாசத்தையும் அனுபவித்து தளர்ந்துபோன அப்துல்கலீம் சமீபத்தில் விடுதலையான பொழுது தனது அனுபவத்தை நினைவுக் கூறுகிறார்:
"சஞ்சல்குடா சிறையில் நான் 'அங்கிள்' என்றழைத்த அஸிமானந்தாவின் மனமாற்றம், நான் மற்றும் அப்பாவிகளான இதர முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகளாக நிரூபிக்க உதவும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை."
ஷேக் அப்துல் கலீம் என்ற 19 வயது இளைஞர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்படுகிறார். 10 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை சேகரித்ததாகவும், குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய சிம் கார்டை பரிமாறினார் எனவும் போலீஸ் அப்துல் கலீம் மீது குற்றஞ் சுமத்தியது.தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அப்துல் கலீமுக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன. நிரபராதி என நீதிமன்றம் கூறிய பொழுதும் உள்ளத்தில் ஏற்பட்ட ஆறாத காயக்களுடன் அப்துல் கலீம் சிறையிலிருந்து விடுதலையானார்.
கடுமையான நிராசை, உதவுவதற்கு எவருமில்லாத சூழல் என்ற அப்துல் கலீமின் நிலைமை அஸிமானந்தாவின் உள்ளத்தை உருக வைத்தது.செர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது சகோதரன் காஜாவுக்கு மொபைல் ஃபோனை கொண்டு கொடுத்தார் எனக் குற்றஞ்சாட்டி மீண்டும் 2010 ஆம் ஆண்டு அப்துல் கலீம் சிறையிலடைக்கப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டி காஜாவை போலீஸ் கைதுச் செய்திருந்தது. ஆனால், சிறையில் போலீசாரே மொபைலைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு தன் மீது பொய்வழக்குப் போட்டதாக கூறுகிறார் அப்துல் கலீம்.என்னவாயினும், சஞ்சல்குடா சிறையில் என்னை அடைத்தது ஒருவகையில் எனக்கு அருள்தான் என அப்துல்கலீம் கூறுகிறார்.ஆறுமாத காலமாக நீண்ட இச்சிறை வாழ்க்கையின் போதுதான் அஸிமானந்தாவை அப்துல் கலீம் சந்தித்தார். சிறையில் வைத்து எப்பொழுதாவது முகமன் கூறுவதன் மூலம் இருவரும் அறிமுகமாகினர்.அஸிமானந்தாவுக்கு உணவும், குடிநீரும் கொண்டு கொடுத்துவிட்டு சிறைக் கம்பிகளுக்கு வெளியே நின்றுக் கொண்டு தனது கதையை கூறியுள்ளார் அப்துல் கலீம்.
அஸிமானந்தாவை அப்துல் கலீம் 'அங்கிள்' என அழைத்துள்ளார்.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில்தான் அப்துல் கலீமும் கைதுச் செய்யப்பட்டார் என அஸிமானந்தா அறிந்தபொழுது, அப்துல் கலீமின் வீட்டுச்சூழல் மற்றும் அவரது வாழ்க்கையைக் குறித்து விசாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார் அஸிமானந்தா.முஸாராம்பாகிலிருந்து கடந்த 2007-ஆம் ஆண்டு தானும் இதர முஸ்லிம் இளைஞர்களும் கைதுச் செய்யப்பட்ட நிகழ்விலிருந்து கூறத் துவங்கினார் அப்துல் கலீம். அங்கிருந்து ஒரு பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்றது, அங்கு வைத்து நான்கு தினங்களாக கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கியது, இரண்டுமுறை நார்கோ பரிசோதனைக்கு உட்படுத்தியது பின்னர் தான் உயிருள்ள சடலமாக மாறிய சூழல் வரை அனைத்தையும் அஸிமானந்தாவிடம் கூறியுள்ளார் அப்துல் கலீம்.
இதனைக் கேட்டு தலையை அசைத்துள்ளார் அஸிமானந்தா. பின்னர் கைதுச் செய்யப்பட்ட இதர இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப சூழல்களை குறித்து கேட்டறிந்துள்ளார். தனது சொத்துக்கள் அனைத்தையும் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப் போவதாக ஒருமுறை அஸிமானந்தா கூறியுள்ளார்.குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தனது தலைமையின் கீழ் செயல்பட்டவர்கள்தான் என அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை ஒரு சிறை அதிகாரி மூலமாக அறிந்துள்ளார் அப்துல்கலீம்.
"என்னைப் போன்ற நிரபராதிகளான இளைஞர்கள் பொய் வழக்குகளிலிருந்து விடுபட வழிவகுத்த இந்த ஒப்புதல் வாக்குமூலம் குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நான் இதற்கு காரணமல்ல, அல்லாஹ்தான் காரணம். என்னை நீதிமன்றம் குற்றமற்றவர் எனக்கூறி விடுவிக்கலாம். ஆனால், தீவிரவாதி என்ற முத்திரை எப்பொழுதும் எனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்"- தழுதழுத்த குரலில் கூறுகிறார் அப்துல்கலீம்.
செய்தி:தேஜஸ் நன்றி: பாலைவன துது

Sunday, January 30, 2011

நீதியின் பாதையை அழிக்கும் நீதிமன்றங்கள்!!

சொத்து தகராறாகத் தொடங்கி, பிறகு முழுமையான அரசியல் மற்றும் மத ரீதியான மோதலாக உருவெடுத்த, 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியின் மீதான கிரிமினல் தாக்குதலையும், சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் உடைமைகளுக்கு எதிரான குறிவைத்த தாக்குதலையும் நியாயப்படுத்தி இருக்கிறது, பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு.

இவ்வழக்கில் செப்டம்பர் 30, 2010 அன்று வெளியிடப்பட்ட தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியப் பிரச்சினைகளை எழுப்பி இருக்கிறது. இத்தீர்ப்பு, ஏற்றுக் கொள்ளப்படாத மத நம்பிக்கைகள் மற்றும் மறுக்கப்பட்ட வரலாறுகளின் அடிப்படையில் எல்லையற்று அமைந்திருக்கிறது.

‘சஹ்மத்' (SAHMAT), ‘சப்ரங் அறக்கட்டளை' (Sabrang Trust), ‘சோஷியல் சயின்டிஸ்ட்' (Social Scientist) ஆகிய அமைப்புகள், இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விளைவுகள் குறித்து முழுமையாக ஆராய, கல்வியாளர்கள், நீதிபதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை ஒன்றிணைத்து, புது தில்லியில் மூன்று நாள் (6, 7, 8 டிசம்பர் 2010) கருத்தரங்கை நடத்தின.

டிசம்பர் 6, 1992 இன் 18 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இருநூறுக்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் அயோத்தி தீர்ப்பின் அனைத்து விளைவுகள் குறித்தும் புரிந்து கொள்ள கூடினர்.

கருநாடகம், மகாராட்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆர்வலர்கள் ஏறக்குறைய 50 அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி, கருத்தரங்கில் பங்கேற்றனர்.

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் உள்ள பாபா போதாங்கிரி வழிபாட்டுத் தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் சுவாமி ஆதித்தியானாத் என்பவர், மக்களை பிளவுபடுத்தும் வகையில் மோசமாக பேசியதற்கு எதிரான போராட்டம் மற்றும் இதுபோன்ற பல போராட்டங்கள் இக்கருத்தரங்கில் ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன.

கருத்தரங்கில் மூன்று நாட்களாகப் பேசிய பல பேச்சாளர்கள், அண்மையில் வெளியிடப்பட்ட அயோத்தி தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் அடிப்படைக்கு எதிரானது என்ற கருத்தை முன்வைத்தனர்.

நீதிபதிகள் பி.பி. சாவந்த், ஹோஸ்பட் சுரேஷ், ஷா ரசா, ராஜிந்தர் சச்சார், பொருளாதாரப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், வரலாற்று அறிஞர்கள், பேராசிரியர் இர்பான் அபீப், பேராசிரியர் சிரீன் மூஸ்வி ஆகியோர் ‘மத நம்பிக்கை மற்றும் உண்மை', "அயோத்தி தீர்ப்புக்குப் பின்னர் ஜனநாயகம்",என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் உரையாற்றினர். மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில் பின்வரும் கருத்துகள் விவாதிக்கப்பட்டன :

கிரிமினல் நீதித்துறையின் தொடர்ச்சியான தோல்வி,
december 23, 1949 அன்று இரவில் பாபர் மசூதி மீது ஏவப்பட்ட தாக்குதல் தொடர்பான காவல் துறையின் முதல் தகவலறிக்கை மீது இன்று வரை நடவடிக்கை எடுக்காதது,
1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் கிரிமினல் சூழ்ச்சியினை தூண்டிய கயவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்தது,
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சின் முன் அயோத்தியா வழக்கு நிலுவையில் இருந்தபோது சாட்சியம் அளித்த வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் மீது பழிசுமத்தி, திட்டமிட்டு இழிவுபடுத்தியது உள்ளிட்டவை.

கருத்தரங்கின் தொடக்க நிகழ்வுகள் :
அதிகாரம், அச்சுறுத்தல், வன்முறை அடிப்படையிலான அரசியல் தலையீடின்றி ஜனநாயக அமைப்புகள் நீதி பிறழாமல் தீர்ப்பளிக்க வேண்டிய அவசியத்தை பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் வலியுறுத்தினார். முதிர்ச்சியான ஜனநாயகத்தில் நீதிமன்றங்களின் மீது செல்வாக்கு செலுத்தி, நீதி வழங்கப்படுவதை மாற்றும் செயல்பாடுகளின் மீதிருந்து நீதித்துறை தள்ளி நிற்க வேண்டும்.

தவறான வரலாற்று ஆய்வு, தவறான தொல்பொருள் ஆய்வு :
அயோத்தி தீர்ப்பில் நீதிபதி அகர்வாலின் 5000 வார்த்தைகள் கொண்ட தீர்ப்பினை விமர்சிக்கும் 96 பக்க விமர்சனக் கட்டுரையை ‘ராம ஜென்ம பூமியின் தீர்ப்பும் வரலாறும்' என்ற தலைப்பில், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் மூத்த வரலாற்று அறிஞரும், பண்டைய இந்திய வரலாற்றில் உலகப் புகழ் பெற்ற நிபுணருமான பேராசிரியர் இர்பான் அபீப் எழுதிய விமர்சனக் கட்டுரையை, ‘அலிகார் வரலாற்று அறிஞர்கள் கழகம்' சிறு நூலாக வெளியிட்டுள்ளது.

நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில், ‘பாபர் மசூதி 1528 இல் பாபரின் ஆட்சியின்போது கட்டப்படவில்லை ஆனால், 1707 ஆம் ஆண்டு பிறந்த அவுரங்கசீப் ஆட்சியில் கட்டப்பட்டது'என்று நிறுவ முனைகிறார். சிறிதளவே அறியப்பட்ட ஜோசப் டிபன்தேல் என்ற பாதிரியார் மற்றும் பயணி, அயோத்திக்கு 1740 லிருந்து 1765 வரையிலான இடைப்பட்ட காலத்தில் வருகை புரிந்ததை வைத்துக் கொண்டு, ஜோசப் டிபன்தேலின் எழுத்துகளிலிருந்து ‘ராம்கோட்' என்கிற இடிக்கப்பட்ட கோட்டையின் மீது ஒரு மசூதி கட்டப்பட்டது என்று கூறி, நீதிபதி அகர்வால் மசூதியில் உள்ள எழுத்துகளின் ஆதாரத்தைப் புறக்கணிக்கிறார்.

மசூதியில் உள்ள எழுத்துகளை நீதிபதி அகர்வால் போலியானவை என்று கூறி, 1760 மற்றும் 1810 ஆகிய ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் மசூதியில் இந்த போலி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதும் நீதிபதி அகர்வால், இந்த எழுத்துகள் உண்மையானவை என்று ஏறக்குறைய ஒவ்வொரு வரலாற்று அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளரும் கருதியிருப்பதை புறந்தள்ளுகிறார்.

இந்திய தொல் பொருள் ஆய்வுக்கழகம், 1965 இல் கல்வெட்டு ஆய்வு நூல் ஒன்றை அரேபிய மற்றும் பாரசீக துணைக் கையேடாகப் பதிப்பித்தது. நீதிபதி அகர்வால் அவருடைய நீளமான தீர்ப்பில் இக்கையேட்டை கடுமையான சொற்களைப் பயன்படுத்தி புறந்தள்ளுகிறார். ‘மன்னர் பாபரின் கல்வெட்டுக் குறிப்புகள்' குறித்து இந்த அதிகாரப்பூர்வ கையேட்டின் சாட்சியம், நீதிபதி அகர்வாலால் புறக்கணிக்கப்படுகிறது. இந்திய தொல் பொருள் ஆய்வுக் கழகத்தின் பாரசீக மற்றும் அரேபிய கல்வெட்டு குறிப்புகளின் தலைவராகப் பணியாற்றியவரும், அரேபிய மற்றும் பாரசீக கல்வெட்டு ஆய்வாளர்களில் தலைசிறந்தவருமான டாக்டர் இசட்.ஏ. தேசாய் என்பவரால் இக்கையேடு தொகுக்கப்பட்டது.

இக்கல்வெட்டுக் குறிப்பு, டிசம்பர் 6, 1992 அன்று கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்து தள்ளும் வரை, மசூதியின் நுழைவு வாயிலில் காணப்பட்டது. இக்கல்வெட்டு குறிப்பு இப்பொழுது இல்லையென்றால், அதற்கு காரணம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கிரிமினல் செயல்தான். டிபன்தேலின் எழுத்துகளில் இந்த கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து எதுவுமில்லாதது குறித்து கூறவேண்டுமென்றால், வரலாற்றில் இத்தகைய பயணிகளின் எழுத்துகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை.

இன்னொரு எடுத்துக்காட்டினை கூறவேண்டுமென்றால், தலைசிறந்த அறிஞர் என்றும் பன்மொழிப் பாவலர் என்றும் கருதப்படும் மார்க்கோ போலோ, சீனப் பெருஞ்சுவர் பற்றி தனது எழுத்துகளில் குறிப்பிடாமல் விட்டதைச் சொல்ல வேண்டும். நீதிபதி சுதிர் அகர்வால் தனது வாதத்தில் பயன்படுத்தியிருக்கும் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தினால், சீனப்பெருஞ்சுவர், மார்க்கோ போலோவின் பயணங்களுக்குப் பிறகு கி.பி. 1300 க்கு பிறகு கட்டப்பட்டது என்று தவறாக கூற வேண்டியிருக்கும்!

நீதிபதி அகர்வால் இன்னொரு உண்மையையும் மறந்து விடுகிறார். 1965 இல் கல்வெட்டுக் குறிப்புகளின் தொல் பொருள் ஆய்வுக் கழகத்தின் அரேபிய மற்றும் பாரசீக ஏடு பதிப்பிக்கப்படுவதற்கு 90 ஆண்டுகளுக்கு முன்னர், பாபர் மசூதி கதவு மற்றும் மேடையில் அமைந்திருந்த கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து ‘அவுத் மாநிலத்தின் கெஸட்டியர்' என்ற பெயரில் பென்னட் என்பவர் தொகுத்த வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெளியீடு 1877 – 78 ஆண்டில் பதிக்கப்பட்டு, மேற்கூறிய குறிப்பு அதன் முதல் இதழில் 6 மற்றும் 7 ஆவது பக்கங்களில் காணப்படுகிறது. படம் ஒன்று மற்றும் படம் இரண்டு என்ற தலைப்பின் கீழ் பாபர் மசூதி கல்வெட்டு குறிப்புகள் மற்றும் கட்டப்பட்ட நாள் என்ற தலைப்பின் கீழ் இக்குறிப்பு காணப்படுகிறது.

பாபர் மசூதியின் இரண்டு இடங்களில் அது கட்டப்பட்ட ஆண்டு கி.பி. 1528 ஆம் ஆண்டு என பொறிக்கப்பட்டு, பாபர் மாமன்னரின் புகழ் கூறும் மற்ற வாசகங்களோடு பொறிக்கப்பட்டுள்ளது. இது, இதற்குமுன் கூறப்பட்ட ஆண்டைவிட பழமையானது. ஆனால், இந்த செய்தி நீதிபதி அகர்வாலின் கல்வெட்டுக் குறிப்புகள் குறித்த சுருக்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பென்னட்டின் குறிப்பு எச்.ஆர். நெவில் என்பவர் தொகுத்த ‘பைசாபாத் மாவட்ட கெஸட்டியர்' என்ற 1905 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட வெளியீட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் 179 ஆம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :

“மசூதியில் இரண்டு கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஒன்று மசூதிக்கு வெளியே உள்ளது. மற்றொன்று மசூதியின் மேடையில் அமைந்துள்ளது. இந்த கல்வெட்டுக் குறிப்புகள் 935 ஹிஜ்ரி (கி.பி.1528) என்ற தேதியை கொண்டுள்ளன.'' இந்த கல்வெட்டுக் குறிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து எந்த சந்தேகமும் இருக்க முடியாது. பாபர் மசூதியின் வெளி வாயில் மற்றும் மேடை ஆகியவற்றில் உள்ள கல்வெட்டு குறிப்புகள், பாபர் மசூதி கட்டப்பட்ட ஆண்டாக 935 ஹிஜ்ரி (கி.பி.1528) இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதை, இரண்டு அரசாங்க அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த ஆண்டு, பாபர் ஆட்சியின் கீழ் வருகிறது. இந்த அரசாங்க அறிக்கைகள், இக்கல்வெட்டு குறிப்புகளின் சந்தேகமற்ற நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன".

பாபர் மசூதி பின்னர் கட்டப்பட்டது என்ற தவறான முடிவுக்கு வருவதற்காக நீதிபதி சுதிர் அகர்வால், கட்டுமான வடிவமைப்பு மற்றும் கட்டுமான பாணி போன்ற மசூதி கட்டப்பட்ட ஆண்டோடு நெருங்கிய தொடர்புடைய கருத்துகளைப் புறக்கணிக்கிறார். ஒரு நீதிபதி தனது அய்ந்தாயிரம் வார்த்தைகள் கொண்ட தீர்ப்பினை, மத நம்பிக்கையின் மிகக் குறுகிய அடிப்படையில் அமைத்திருப்பதோடு, வரலாற்று மற்றும் தொல்பொருள் சாட்சியங்களை தவறாக சித்தரித்து, குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்து மதவெறி அமைப்புகள் குறி வைத்து தாக்குகின்ற பண்டைய இந்திய வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளார் என்று அலிகார் வரலாற்று அறிஞர்கள் பதிப்பித்துள்ள விமர்சனக் கட்டுரையில் தெரிய வந்துள்ளது.

பண்டைய இந்திய வரலாறு குறித்த நீதிபதி அகர்வாலின் தவறான புரிதல், பாபர் பற்றிய அவரது குறிப்பிலிருந்தும் மற்றும் அவருடைய தீர்ப்பிலிருந்தும் தெரிய வருகிறது. பாபரை ‘ஒரு முழுமையான இஸ்லாமிய நபர்' என்றும் ‘அவர் சிலைகளை வணங்குபவர்களை சகித்துக் கொள்ளவில்லை' என்றும் பாபரை நீதிபதி அகர்வால் வர்ணிக்கிறார்.

மேலும், தனது தீர்ப்பில் நீதிபதி அகர்வால் பின்வருமாறு கூறுகிறார் : “இன்னொரு வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தியத் துணைக் கண்டம் மீது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வெளியாட்களின் தாக்குதல் மற்றும் ஊடுருவல் ஏவப்பட்டிருந்ததோடு, இந்த வெளியாட்களால் இந்தியத் துணைக் கண்டம் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டும் வந்தது. மிக அதிகளவிலான செல்வம் இந்நாட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டது.''
மேற்கூறப்பட்டுள்ள வரி, பண்டைய இந்திய வரலாற்றின் ஒருதலைப்பட்சமான புரிதலை வெளிப்படுத்துகிறது. பிரிட்டிஷாருக்கு முன்னால் இந்தியா வெளியிலிருந்தா ஆட்சி செய்யப்பட்டது? இந்த வெளியிடத்திற்கு செல்வம் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டதா?

யார் கொள்ளையடித்திருந்தாலும், அது சுல்தான்களாக இருந்தாலும், அரசர்களாக இருந்தாலும் அவர்கள் இந்தியாவுக்குள் வாழ்ந்தார்கள். அவர்களுடன் செல்வமும் இந்தியாவிற்குள்தான் தங்கியது.

டாக்டர் எஸ். அலி நதீம் ரசாவீ, பல நூற்றாண்டுக் கால மொகலாயர் ஆட்சிக் காலத்தில் மசூதி கட்டுமானப் பாணியின் பரிணாம வளர்ச்சியை மிகத் தெளிவாக விளக்கி, பாபர் ஆட்சிக் காலத்திற்கும் அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திற்கும் இடையே கட்டுமான பாணியில் இருந்த வேறுபாடுகளை விளக்கினார். கட்டுமான பாணி மற்றும் முறையை வைத்தே ஒரு கட்டடம் மொகலாயர் ஆட்சிக்கு முன் கட்டப்பட்டதா அல்லது மொகலாயரின் தொடக்க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதா அல்லது பிற்கால மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதா என்பதை எளிதாக அறிய முடியும்.

பாபரி மசூதி, ஷர்கி கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது ஜான்பூரில் காணப்படுகிறது. இந்த கட்டுமானப் பாணியில் வெளிவாயிலுக்கு ஒரு தனித்துவமான வடிவமைப்பு தரப்பட்டு, மசூதியின் குவிந்த கூரை பெரிதாகவும் கனமாகவும் காணப்படும். இந்த கட்டுமான பாணி பின்னர் வழக்கொழிந்து போனது. அவுரங்கசீப் காலத்திற்கு முன்னதாகவே கனமில்லாத குவிந்த கூரைகளும் தனியாக நிற்கும் மெல்லிய உயரமான கோபுரங்களும் மசூதியின் தனித்துவக் கூறுகளாயின.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கின் முக்கியமான தோல்விகளை டாக்டர் சிரீன் முஸ்வி எடுத்துரைத்தார். குறிப்பாக, வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் அறிஞர்கள் ஆகியோரது சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறை கேலிக்குரியதாக ஆக்கப்பட்டதை டாக்டர் முஸ்வி விளக்குகிறார். வரலாற்று அறிவியல் மற்றும் தொல்பொருள் ஆய்வுக்கூற்றுகள் இரண்டு வாக்கியங்களிலாவது விளக்கப்பட வேண்டியவை. ஆனால், இத்தகைய சாட்சியங்களை ‘உண்டு' அல்லது ‘இல்லை' என்று ஒரே சொல் மூலம்தான் வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வு சாட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும் என்று வரையறுத்ததன் மூலம், தேர்ந்த நிபுணர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறை கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிமினல் சட்டத்தில், ஒவ்வொரு சாட்சியாளரும் விளக்கங்களைக் கூற, அடிப்படை சட்ட உரிமை உள்ளது. இந்த அடிப்படை சட்ட உரிமையை மறுத்ததன் மூலம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நீதியின் பாதையையே அழித்திருக்கிறது. தொல்பொருள் ஆய்வாளர் டி. மண்டல் எழுதிய ‘இடிப்புக்குப் பிறகு தொல்பொருள் ஆய்வு'; ‘தோண்டுதலுக்குப் பிறகு தொல்பொருள் ஆய்வு' ஆகிய இரு நூல்களும் அயோத்தி தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற பெஞ்சினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்திருக்கின்றன. இது, சுதந்திரமான வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆகியோரது ஆய்வு சிந்தனைகளையும், கருத்து சுதந்திரத்தையும் திட்டமிட்டு உயர் நீதிமன்றம் முடக்கும் செயலாகும்.

இது, வாக்குகளுக்காக பெரும் உணர்ச்சிகரமாக தூண்டப்பட்ட ஓர் அரசியல் மதவெறி மோதலுக்காக செய்யப்படுவதும்; ஒரு பழமையான காலனியாதிக்க நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி செய்யப்படுவதும்; அயோத்தி வழக்கில் நீதித்துறை சீரழிவு மற்றும் நீதியின் அழிவுக்குப் பின்னால் உள்ள கொடூரமான அரசியலையும் சுட்டிக்காட்டுகிறது.

பாரதிய ஜனதா கட்சி தலைமையேற்று நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியால் அமைக்கப்பட்ட – பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு காணப்பட்ட விலை மதிப்பற்ற மசூதியின் பாகங்களை அழித்த – தொல்பொருள் ஆய்வுக் குழுவை, நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில் வெகுவாகப் பாராட்டுகிறார். மதவெறி கட்சியான பா.ஜ.க. வழிநடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆணையிட்ட தொல்பொருள் அகழாய்வுக்குப் பின்னால் உள்ள அரசியலை, நீதிபதிகள் ஆய்வு செய்ய மறந்துள்ளனர். தனது ரத்த வெறி மிகுந்த ரத யாத்திரையை நடத்தி, பிறகு இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் ஆன எல்.கே. அத்வானியும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷியும் – மதவெறி பா.ஜ.க. நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் முக்கியப் பங்கு வகித்தனர்.

இவ்வாறு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கீழ் நடந்த உள்நோக்கம் கொண்ட அகழாய்வுகளுக்குப் பின்னால் உள்ள அரசியலை கேள்வி கேட்காத நீதிபதிகள், தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் தவறான – ஜோடிக்கப்பட்ட அறிக்கையின் மீது முழு நம்பிக்கையை வைக்கின்றனர். இந்த ஜோடிக்கப்பட்ட அறிக்கை, இன்னும் அறிஞர்களின் ஆய்வுக்காக முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் ஆட்சியும், ஜோடிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வறிக்கையை உறுதிப்படுத்தியதில் சமபங்கு வகித்திருக்கிறது என்று பேராசிரியர் இர்பான் அபீப் குற்றம் சாட்டினார்.

1949 – 1992 சட்டத்திற்கு புறம்பான குற்றச் செயல்களுக்கு, இந்தியத் துறைகளின் மோசமான பதில் நடவடிக்கைகள் :
டிசம்பர் 23 1949 அன்றிரவு, பாபர் மசூதிக்குள் கிரிமினல் தாக்குதலாக நுழைந்து ராமன் சிலைகளை வைத்து, சட்டத்திற்குப் புறம்பாக செய்யப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக அயோத்தி வழக்கின் வரலாறு ஒன்றும் செய்யாமல் தோல்வியடைந்திருப்பதை, லிபரான் ஆணையத்தின் பல்லாண்டு கால வழக்குரைஞரான அனுபம் குப்தா உணர்ச்சியுடன் எடுத்துரைத்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, காவல் துறை அதிகாரி கே.கே. நய்யார் என்பவருக்கு கடிதங்கள் மற்றும் ஆணைகள் பிறப்பித்தும் கூட, மேற்கூறிய டிசம்பர் 23, 1949 அன்றிரவு நடைபெற்ற குற்றச் செயல் மாற்றப்பட முடியவில்லை. இந்த காவல் துறை அதிகாரி, இப்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி அகர்வால் தன்னுடைய தீர்ப்பில் ராமனின் பிறப்பு குறித்த புராணக் கதைகளுக்கு அய்ந்தாயிரம் பக்கங்கள் ஒதுக்கியுள்ள அதே நேரத்தில், 1949 மற்றும் 1992 இல் நடந்த பாபர் மசூதி மீதான கிரிமினல் தாக்குதல்களுக்கு எந்தவொரு கவனத்தையோ, இடத்தையோ ஒதுக்கவில்லை. மசூதிக்குள் கிரிமினல் முறையில் நுழைந்ததற்கான முதல் தகவல் அறிக்கை, மிகுந்த தயக்கத்துடன் வேண்டா வெறுப்பாக காவல் துறை கண்காணிப்பாளரால் பதிவு செய்யப்பட்டதும், பின்னர் மசூதி இடிப்புக்கான அரசியல் வெறித்தனத்தில் பங்கேற்ற மாவட்ட நீதிபதி பி.பி. பாண்டேயின் நடத்தையும் சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகளால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதை அனுபம் குப்தா சுட்டிக் காட்டினார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங்கால் தரப்பட்ட உறுதிமொழிகள் மீறப்பட்டு, டிசம்பர் 6, 1992 அன்று மிகுந்த விளம்பரத்துடன் பலரும் பார்க்க செய்யப்பட்ட கரசேவையில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் தலைமையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வெறித்தனமானது, அங்கிருந்த சந்தன் மித்ரா மற்றும் சுவபன்தாஸ் குப்தா போன்ற பத்திரிகையாளர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், மசூதி இடிக்கப்பட்ட போதும் 1949 இல் மசூதிக்குள் வைக்கப்பட்ட சிலைகள் இடிக்கப்படவில்லை. அவை கவனத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகு, மசூதி இடிப்பு முடிவடைந்த பிறகு மீண்டும் அந்த சிலைகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன.

அப்போதைய பிரதமராக இருந்த நரசிம்மராவ், சம்பவ இடத்திற்கு மத்திய துணை ராணுவப்படைகளை அனுப்பியிருந்தும் அவை ஒன்றும் செய்யாமல் – வெறிக்கூட்டம், கிரிமினல் தாக்குதல்களை மசூதி மீது ஏவிவிட்டதை வேடிக்கை பார்த்ததும், இதில் நரசிம்மராவ் பங்கு குறித்தும் பேச்சாளர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்குகள் திட்டமிட்டு நீர்த்துப் போக செய்யப்பட்டதை பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா விரிவாக விளக்கினார். மசூதி இடிப்பு நடைபெற்ற நேரத்தில் 49 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன; இவற்றில் 47 பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பானதாகும். மீதம் இருக்கும் 2 முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்று, மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான கிரிமினல் சூழ்ச்சி மற்றும் வெறிக் கூட்டத் தாக்குதல் பற்றியதாகும். இதில் எல்.கே. அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் வெறிக்கூட்டத் தாக்குதலின் முதன்மையான சூழ்ச்சியாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரண்டாவது முதல் தகவல் அறிக்கை எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களால் மசூதி இடிப்புக்கு முன்னும், மசூதி இடிப்பின்போதும், மசூதி இடிப்புக்குப் பின்னும் பேசப்பட்ட வெறித்தனமான வெறுப்பைக் கக்கும் பேச்சுகள் தொடர்பானவையாகும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அய்ந்தாண்டு ஆட்சியில் மத்திய அரசு திட்டமிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் மூன்று உச்சத் தலைவர்கள் மசூதி இடிப்பின் தலைமை சூழ்ச்சியாளர்களாகப் பதிவு செய்யப்பட்டதை நீக்கினர். இதை செய்து, ஏதோ தலைமை இல்லாத வெறிக்கூட்டம் மசூதி இடிப்பை செய்ததாக பொய்யாக வாதிட்டனர். அந்த இரண்டு வழக்குகளும் இப்போது தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவ்விரு வழக்குகளும் மத்திய அரசின் மேற்கூறப்பட்டுள்ள பாரபட்ச தலையீட்டால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. வின் உச்ச தலைமையும் தேசிய மற்றும் மாநிலத் தலைமையும் கொடுத்த உறுதிமொழிகளை பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டு வெட்கமின்றி மீறியும் கூட, உச்ச நீதிமன்றம் பா.ஜ.க.வினருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட இயக்குநர் ஆனந்த் பட்டவர்த்தனின் ‘ராம்கே நாம்' என்ற திரைப்படம், மக்கள் மத்தியிலிருந்தும் மற்ற கிரிமினல் சட்டத் துறை நடவடிக்கைகளிலிருந்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்ட செய்திகளை பார்வையாளர்கள் முன் கொண்டு வந்தது. நீதிமன்றத்தால் சர்ச்சைக்குரிய இடத்திற்கு மத குருவாக நியமனம் செய்யப்பட்ட பாபா லால்தாஸ், 1993 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் திடீரென்று கொலை செய்யப்பட்டது, இந்த செய்திகளில் ஒன்றாகும். இதேபோன்ற இன்னொரு மர்மமான கொலை, பைசாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விலை மதிப்பற்ற ஆவணங்களை லிபரான் ஆணையத்திற்கு கொண்டு சென்ற ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி கொலை செய்யப்பட்டதாகும். இந்தக் கொலைக் குற்றங்கள் எவையும் விசாரிக்கப்படவில்லை.

பைசாபாத் மற்றும் அயோத்தியிலிருந்து குரல்கள் :ஜனநாயக எதிர்ப்பும் பல்மத வழிபாடும் அயோத்தியில் ஒடுக்கப்பட்டுள்ளது பற்றி ஆச்சாரிய ஜுகல் கிஷோர் சாஸ்திரியும் ‘மெக்செசே' விருதை வென்ற சந்திப் பாண்டேயும் விளக்கமாகப் பேசினர். டிசம்பர் 6, 1992 அன்று மசூதி இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்ட 17 முஸ்லிம்கள் மற்றும் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட 300 முஸ்லிம் வீடுகள் மற்றும் கடைகள் குறித்து எந்த விசாரணையயும் நடத்தப்படவில்லை.

நீதித்துறையின் அரசியல்
உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி. சாவந்த், பம்பாய் உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ், அலகாபாத் மற்றும் லக்னோ உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி எஸ்.எச்.ஏ. ரஸா ஆகியோர் உயர் நீதிபதிகள் வட்டாரத்தில் பாபர் மசூதி அயோத்தி பிரச்சனை குறித்து நிலவிவரும் அரசியல் பற்றியும், பெரும்பான்மை இந்துத்துவ அரசியல் நீதிபதிகள் மற்றும் அரசின் மீது செலுத்தும் செல்வாக்கு குறித்தும் விளக்கமாகப் பேசினர்.

1980–களின் இறுதியில், மகாராட்டிர பம்பாய் நீதிமன்றங்களிலிருந்து வந்த தேர்தல் தொடர்பான வழக்குகள் குறித்த விளைவுகளை ஆய்ந்த குழுவொன்று பின்வரும் செய்தியை தெரிவித்தது: இந்த வழக்குகளில் ஒன்றில் உச்ச நீதிமன்ற பெஞ்ச், இந்துத்துவா அரசியல் மத இயக்கத்தை நியாயப்படுத்தி, அதை இந்து மதத்தோடு குழப்பி, அதன் மூலம் பெரும்பான்மை மதவெறி அரசியலுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நீதிமன்ற அங்கீகாரத்தை கொடுத்தது. இப்பெரும்பான்மை மதவெறி அரசியலின் வெளிப்பாடாகத்தான் பா.ஜ.க. தோன்றி, இந்திய நாடாளுமன்றத்தில் 90 இடங்களை வென்றது.

மாநிலத் தேர்தலின்போது சிவசேனா தலைவர்கள் சுபாஷ் தேசாய், ரமேஷ் பிரபு மற்றும் மனோகர் ஜோஷி ஆகியோர் பேசிய பேச்சுகள் – அரசியல் ரீதியான வெறித்தனம் மிகுந்த இந்துத்துவாவை வெளிப்படுத்தியதோடு, மதசிறுபான்மையினருக்கு எதிராக இழிவான வெறுப்பினையும் வெளிப்படுத்தின. இந்தப் பேச்சுகள் பம்பாய் உயர் நீதிமன்றத்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாகக் கருதப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்தும் தன்மை கொண்டவையாகும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் இரண்டில் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தாலும், கெடுவõய்ப்பாக அப்போது நாடாளுமன்ற அவைத் தலைவராக ஆகிவிட்டிருந்த மனோகர் ஜோஷியின் தேர்தலை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

அதற்குப் பிறகு இருவேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இந்துத்துவா இயக்கத்தை நியாயப்படுத்தும் தீர்ப்பினை, அரசியல் சாசன அமர்வு (பெஞ்ச்) முன் வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாலும், இந்த வழக்குகளுக்காக பெரிய அரசியல் சாசன அமர்வுகளை ஏற்படுத்த உச்ச நீதிமன்றத்திற்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. இந்த வழக்குகளில் ஒன்றை அரசியல் சாசன அமர்வுக்கு கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்த மும்பையைச் சேர்ந்த வழக்குரைஞர் பி. ஏ. தேசாய் இக்கருத்தரங்கில் பங்கேற்று, இந்துத்துவா மற்றும் இந்து மதம் ஆகியவற்றிற்கு உள்ள வேறுபாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்.

‘கம்யூனலிசம் காம்பட்' இதழின் இணை ஆசிரியரான தீஸ்தா செடல்வாட் தனது முடிவுகளை – ‘வெறித்தனமான வெறுப்புப் பேச்சும் இந்திய நீதிமன்றங்களும்' என்ற கட்டுரையாகப் படித்தார். அதில் பொதுவாக நீதித்துறை குறிப்பாக உயர் நீதிபதிகள் வெறித்தனமான வெறுப்பு பேச்சு குறித்த சட்டவரையறைகளை தெரியப்படுத்துவதில் கவனக்குறைவாக இருந்து வருவதாகக் கூறினார். இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதப்படும் பிரிவுகள் 153 ஏ, 153 பி, 505 மற்றும் 295 ஆகியவை மக்களில் ஒரு சாராருக்கு எதிராக வன்முறை மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையில் எழுதுவது மற்றும் பேசுவது குறித்ததாகும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற வன்முறையின் போது பால்தாக்கரே தனது ‘சாம்னா' இதழில், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக கக்கிய வெறித்தனமான வெறுப்புப் பேச்சை பம்பாய் உயர் நீதிமன்றம், ‘இந்த வார்த்தைகள் தேசத்திற்கு எதிரான முஸ்லிம்களை நோக்கி பயன்படுத்தப்பட்டன' என்ற அடிப்படையில் நியாயப்படுத்தியதை இந்திய உச்ச நீதிமன்றம் சரி செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதிலுமிருந்து 30 ஆயிரம் கையெழுத்துகள் கொண்ட தேசிய இயக்கம் நடத்தப்பட்ட போதும் உச்ச நீதிமன்றம் அதை கண்டு கொள்ளவில்லை. மே 2007 வருண் காந்தி உத்தரப் பிரதேச தேர்தலின் போது விஷத்தனமான பேச்சுகளை பேசிய பிறகு, அதற்கெதிராக குடிமக்களால் இயக்கம் நடத்தப்பட்டபோதும், தேர்தல் ஆணையம் வேட்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வேட்பாளர் உத்தரப்பிரதேச மாநிலம், பில்பிட் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி, அரசியல் வர்க்கமோ, அரசோ, நீதித்துறையோ, தலைமை தேர்தல் ஆணையரோ விஷமத்தனமான பேச்சுகளை 2007 தேர்தலின் போது பேசிய வேட்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய விஷயங்களில் நீதித்துறை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், பம்பாய் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் மிஹிர் தேசாய், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ரவி கிரண் ஜெயின் ஆகியோர் விளக்கமாகப் பேசினர்.

டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் மத சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெடித்த பிறகு பா.ஜ.க. அரசுகள் மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறித்த வழக்கில் – 1994 இல் 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், மதச்சார்பின்மையே இந்திய அரசியல் சாசனத்தின் மாற்ற முடியாத அடிப்படைக் கூறாக இருக்கிறது என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இந்த முக்கியத் தீர்ப்பு ஓராண்டுக்குப் பிறகு 1995 இல் உச்ச நீதிமன்றத்தில் வெளிவந்த, இந்துத்துவாவை நியாயப்படுத்திய தீர்ப்பால் அலட்சியப்படுத்தப்பட்டது.

மதவெறி அரசியலின் விளைவுகள் :

கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராட்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த துடிப்பான பேச்சாளர் குழுக்கள், மதவெறி அரசியலால் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து இத்தெளிவான புரிதலை ஏற்படுத்தினர்.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா போதாங்கிரி கோயில் தொடர்பான ஆபத்தான மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் ‘கர்நாடகா மத நல்லிணக்க அமைப்பு' துடிப்பான பங்கினை வகித்தது. பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் திரட்டிய வன்முறை கும்பலுக்கெதிராக மாவட்டத்தில் மக்களை திரட்டி மேற்கூறிய அமைப்பும் ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்' என்ற அமைப்பும் செயல்பட்டு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வமைப்புகள் உள்ளூரில் நடந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

உச்ச நீதிமன்றம் இச்சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு எதிராக தடை விதித்தாலும், அதன் பிறகு கர்நாடக அரசின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள் நீதிமன்றத்தை அவமதித்திருந்தாலும், இது குறித்து உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மேற்கூறப்பட்டுள்ள பிரச்சனையோடு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட மற்ற வழக்குகள் ஒரு தெளிவான சட்ட வரையறையை வெளிப்படுத்த தவறியுள்ளது மட்டுமின்றி, உயர் நீதி மன்ற நீதிபதிகள் கிரிமினல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவோ, தண்டிக்கவோ தயங்குகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. நாடு முழுவதும் மதச் சிறுபான்மையினர் கோயில்களாக அல்லது பன்மத வழிபாட்டுத் தலங்களாக இருக்கும் 30 ஆயிரம் கோயில்களை சட்டத்திற்கு புறம்பாக கைப்பற்றுவதற்கு – பாரதிய ஜனதா கட்சியும் வி.எச்.பி.யும் திட்டமிட்டுள்ளன என்பதை மே 2003 இல் ‘கம்யூனலிசம் காம்பட்' இதழ் வெளிப்படுத்தி, அந்த 30 ஆயிரம் கோயில்களின் பெயர்களைப் பதிவு செய்ததை தீஸ்தா செடல்வாட் குறிப்பிட்டுப் பேசினார்.

பஜ்ரங்தள் மூலம் தனது அரசியல் வாழ்வை வளர்த்துக் கொண்ட பா.ஜ.க., நாடாளுமன்ற உறுப்பினர் வினய் கத்தியார், டிசம்பர் 29, 2002 அன்று வாரணாசியில் முஸ்லிம்கள் காசி மற்றும் மதுரா மசூதிகளை வி.எச்.பி., பஜ்ரங் தள் அமைப்புகளிடம் கொடுத்து விடவேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். அதற்குப் பிறகு மார்ச் 1, 2003 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் படோஹியிலும் அதே ஆண்டு மார்ச் 10 அன்றும், வி.எச்.பி.யின் சர்வதேச செயலாளர் பிரவின் தொகாடியா இதே மிரட்டல்களை மிகுந்த விஷத்தனமான வெறித்தனத்துடன் மீண்டும் வலியுறுத்தினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தனது பேச்சாளர் எம்.எஸ். வைத்யா மூலம் காசி மற்றும் மதுரா கோயில்கள் ‘விடுதலை' பெறுவதற்கான வி.எச்.பி.யின் விஷத் திட்டத்திற்கு, தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்தியது.

ராஜஸ்தானில் உள்ள பாபா ராம்தேவ் கோயில், வலதுசாரி பெரும்பான்மை இந்துத்துவ அரசியல், மதப் குழுக்களால் எடுத்து கொள்ளப்பட்டதை சிறந்த வரலாற்று அறிஞர் கே.எம். சிறீமலி விளக்கினார். இதேபோன்று குஜராத் மாநிலத்தில் உள்ள பியாரானா முஸ்லிம் தர்கா, இந்து மதவெறி அமைப்புகளின் பொறியில் சிக்கியிருப்பதை தீஸ்தா செடல்வாட் குறிப்பிட்டார்.

துடிப்பான குடிமக்கள் முனைப்பு, சிறுபான்மை மக்களிடமிருந்து வெளிப்பட்டு 2005 இலிருந்து கோரக்பூரில் சுவாமி ஆதித்யாநாத்தின் வெறித்தனமான பேச்சுகளை கட்டுப்படுத்தியிருக்கிறது. வழக்குரை ஞர்கள் ஆசாத் அயாத் மற்றும் பர்வேஸ் பர்வாஸ் ஆகியோர் ஆதித்யாநாத்திற்கு எதிராக, வெற்றிகரமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்காக நீதிமன்ற உத்தரவு பெற்றதை குறிப்பிட்டனர். இந்த வெறித்தனமான மதகுரு, அதற்குப் பிறகு தடை உத்தரவைப் பெற உச்ச நீதிமன்றத்திற்கு ஓட வேண்டியிருந்தது.

வரலாற்று அறிவியல், தொல்பொருள் ஆய்வு, மனித உரிமைகள் முனைப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை கோட்பாடுகள் என்று அறிவைத் தூண்டிய வளமான உரையாடல்கள் மூன்று நாட்கள் கருத்தரங்கில் இடம் பெற்றன. ராம ஜென்ம பூமி இயக்கத்தின் அரசியலுக்குப் பின்னால் உள்ள குறிக்கோள் ராமனுக்கு கோயில் கட்டுவது அல்ல. ஆனால், மதத்தின் மொழியையும், பிரசங்கத்தையும் தவறாகப் பயன்படுத்தி – இந்தியாவை அரசியல் ரீதியாக ஒரு பெரும்பான்மை சர்வாதிகார நாடாக ஆக்குவதே ஆகும்.

தமிழில் : இனியன் இளங்கோ
Thanks to keetru.com

Thursday, January 27, 2011

தாராசிங்கிற்கு ஆயுள் தண்டனை-நீதிக்கு மரண தண்டனை



1998ல் சங்பரிவார் பயங்கரவாதி தாராசிங், பாதிரியார் கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு பச்சிளம் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் கீழ் நீதிமன்றம் தாராசிங் மற்றும் 11 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தாராசிங் தரப்பு ஒரிஸ்ஸா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் உயர்நீதி மன்றம் தாராசிங்கிற்கான மரண தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்தும் இதர 11 பேரை விடுவித்தும் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் அநீதியை உச்சநீதிமன்றமும் வழிமொழிந்துள்ளது நிச்சயம் வேதனைக்குரிய ஒன்றுதான்.
கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை எரித்துக்கொன்ற கையோடு சபீக் ரஹ்மான் என்ற வியாபாரியையும் எரித்துக் கொன்றது தாராசிங் தலைமையிலான காவி தீவிரவாதிக் கும்பல். இந்தக் கொடூரம் உலகமே அறிந்த ஒன்றுதான். ஆனால் நீதிமன்றமோ, ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட்ட சம்பவம் அரிதிலும் அரிதானதொரு சம்பவம் என்றது. சங்பரிவாரங்களுடன் தாராசிங்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால் இந்தப் படுகொலையில் எந்த அமைப்புக்கும் தொடர்பில்லை என்று கூறி, அந்தக் கொடிய பயங்கரவாதியைக் காப்பாற்ற முயன்று, அதன் பின்னணியில் உள்ள அமைப்புகளுக்கும் புனிதர் பட்டத்தினைக் கொடுத்துள்ளது.

2005&ல் ஒரிஸ்ஸா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு நீதியை எள்ளி நகையாடுவதைப் போன்றே உள்ளது. தாரா சிங்கின் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 11 பயங்கரவாதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

தாரா சிங்கின் கொடிய குற்றங்களுக்காக அவர் மீது மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும், ஆயுள் தண்டனை ரத்து செய்து விடுவிக்கப்பட்ட அனைவர் மீதும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் நோக்கி முறையீடு செய்த சி.பி.ஐ.யின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொடிய கொலைக் குற்றவாளி தாராசிங் வெறும் ஆயுள் தண்டனை மட்டுமே பெற்றுள்ள நிலையில் நீதி பரிபாலனத் துறையைக் கண்டு காவி பயங்கரவாதிகள் ஏளன சிரிப்பு சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பில் ‘அந்நிய மதமாற்றம் மலைசாதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதால்தான் இந்தக்கொலை நடந்துள்ளது. ஒருவனை ஏமாற்றியோ, பொய் வாக்குறுதி கொடுத்தோ, பணம் கொடுத்தோ, அல்லது ஒருவன் சார்ந்திருக்கும் மதம் மோசமானது, எங்கள் மதமே உயர்ந்தது என மட்டமாகப் பேசியோ மதம் மாற்றுவது இறையாண்மைக்கு விரோதமானது’ என்றெல்லாம் கைதேர்ந்த சங்பரிவார் கொள்கை பரப்புச் செயலாளர் போன்றே நீதிபதி சதாசிவம் தீர்ப்பு வழங்கியுள்ளார். இது உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களின் வேதனையை அதிகப்படுத்தி வருகிறது.

தாராசிங்கின் வாதங்களை நியாயப்படுத்தி இந்தியாவின் மதச்சார்பின்மை மாண்புகளை நிராகரிக்கும் இந்தத் தீர்ப்பு நிச்சயம் மெச்சத்தகுந்தது அல்ல.

தாராசிங் திட்டமிட்டு படுகொலைகள் செய்கிறவன் என்பதும், காவி பயங்கரவாதிகளின் தலைவன் என்பதும் மறுக்க இயலாத அளவு நிரூபிக்கப்பட்டுள்ள போதும் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதேநேரத்தில் பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகளுக்கு அவர் அரசின் அயோக்கியத்தனத்தை அமைதி வழியில் தட்டிக் கேட்டார் என்பதற்காகவே அவருக்கெதிராகக் கொடுக்கப்பட்ட எல்லாமே பொய் ஆதாரங்கள் என்றபோதும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமே இந்திய மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்து வரும்நிலையில் இதுபோன்ற தீர்ப்புகள் நாட்டின் மதச்சார்பின்மை மாண்புகளுக்கும் அரசியல் சாசன நெறிகளுக்கும் நிச்சயம் பெருமை சேர்க்காது.

அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு அயோத்தி பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பாக வழங்கிய கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பினால் மனம் நொந்து போயுள்ள இந்திய மக்கள் நம்பிக்கை ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத்தையே நம்பியுள்ள நிலையில் ஒரிஸ்ஸா ஸ்டெயின்ஸ் பாதிரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கொடூரக் கொலையாளி தாராசிங் மீது மரண தண்டனை விதிக்கப்படாததோடு அவர் செய்த படுகொலை செயலையும் நியாயப்படுத்தும் அளவு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்றிருப்பது நீதி நாடும் மக்களை அதிருப்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. அதிருப்தியினைக் களைந்து நம்பிக்கை ஏற்படுத்துவது நீதித்துறையின் கடமை.

என்ன செய்யப் போகின்றன மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் ?

-அபுசாலிஹ்

நன்றி: த.மு.மு.க .


காவிக் கறை படிந்த தீர்ப்புகள்

ஒரிசா கந்தமால் பகுதியில் 2007 டிசம்பரில் தொடங்கி 2008 இறுதி வரை கிருத்தவர்கள் மீது இந்துவெறியர்கள் நடத்திய பாசிச பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவிக் கிருத்துவர்கள் பலரும் கொல்லப்பட்டனர்; பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகினர்; வீடுகள் கிராமங்கள் சூறையாடப்பட்டன் ஆயிரக்கணக்கானவர்கள் அகதி முகாம்களில் தஞ்சடைந்தனர்.
இந்த வழக்குகளை விசாரிக்க இரு விரைவு நீதிமன்றங்கள் 2008இல் அமைக்கப்பட்டன. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 123 வழக்குகளில் 63இல் தீர்ப்பு அளிக்கப்பட்டு 89 பேருக்கு தண்டனையும் 303 பேருக்கு விடுதலையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புகளின் இலட்சணத்தை சிறிது சுரண்டிப் பார்த்தால் நீதிமன்றங்களின் இந்துத்துவ பா(சி)சம் அப்பட்டமாகத் தெரிகிறது. விடுவிக்கப்பட்டவர்கள் கொலை வன்புணர்வு தீயிட்டுக் கொளுத்துதல் போன்ற பயங்கரகுற்றங்களில் ஈடுபட்டவர்கள். பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பிரதான் அவர்களில் முக்கியமானவன். இவன் மீதுள்ள 8 வழக்குகளிலும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டுள்ளான்.

அந்த வழக்குகளில் ஒன்று பிரா என்ற பெண்ணின் கணவனைக் கொன்றது ஆகும். கட்டிய கணவனை பிரதானும் அவனது ஆட்களும் பிடித்து இழுத்துச் சென்றதைத் தடுக்க வழியின்றிக் கதறிய இந்த அபலைப் பெண் நீதி கிடைத்து விடுமென்றே கடைசிவரை நம்பியிருந்தார். ஆனால் சம்பவம் நடந்த அன்றுதான் பிரதானை முதல்முறையாக அந்தப் பெண் சந்திக்கிறாள் என்றும் எனவே அத்தனை பெரிய கும்பலில் அவள் சரியாக அவனை அடையாளம் கண்டுகொண்டாள் என்பது நம்பக்கூடியதாக இல்லை என்றும் கூறி விரைவு நீதிமன்ற நீதிபதி தாஸ் அவனை விடுதலை செய்துவிட்டார். இதன் நேரடிப்பொருள் எம்.எல்.ஏ.வின் முகம்கூட அந்தப் பெண்ணுக்குத் தெரியாது என்பதுதான். ""இன்னார்தான் ராகுல் காந்தி என அடையாளம் காட்டுவதற்கு நான் ராகுல் காந்தியை முன்பே சந்தித்திருக்க வேண்டுமா என்ன?'' என்று மனமுடைந்து போய் பிரா கேட்கிறார்.

வீடுகளைக் கொளுத்திய இன்னொரு வழக்கில் பிரதான்தான் வீட்டை எரித்தான் என்ற வீட்டு உரிமையாளர்களின் சாட்சிகளை நீதிபதி தாஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. சம்பவம் இரவிலே நடந்துள்ளதால் குற்றவாளிகளின் முகத்தை சாட்சிகளால் சரியாகப் பார்த்திருக்க முடியாது என்கிறார் நீதிபதி. எரியும் நெருப்பு வெளிச்சத்தில் முகங்கள் பளிச்சென்று தெரியுமென்பதைக்கூட நீதிமன்றங்களின் இந்துத்துவக் கொழுப்பு ஏற்க மறுத்துவிட்டது. ஒரு சாட்சியின் வயதை விசாரணை அதிகாரி தவறாகப் பதிவு செய்திருப்பது சாட்சிகள் எந்தப்புதருக்குப் பின்னே மறைந்திருந்தனர் என்ற விவரமின்மை போன்ற மிகவும் அற்பமான பிழைகளைக் காட்டியும் விடுதலை செய்துள்ளார் நீதிபதி.

போலீசுத் துறையானது வழக்குகளை பலவீனமாக்கும் சதிகளை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்போதிலிருந்தே தொடங்கியுள்ளது. பிராவின் கணவன் இழுத்துச் செல்லப்பட்டதை "காணாமல் போய் விட்டார்' என்றே பதிவு செய்துள்ளனர். மேலும் சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள் என்று முறையிடப்பட்டதை நீதிமன்றம் கண்டுகொள்ளவேயில்லை. பொடிமுண்டா கிராமத்தில் வழக்குகளைத் தொடர்ந்து முன்னெடுத்த கிருத்துவர்களைத் தாக்கி அகதிகளாக அவலத்தில் உழன்ற அவர்களின் பிளாஸ்டிக் குடில்களை ஆர்.எஸ்.எஸ். கிரிமினல்கள் கிழித்தெறிந்துள்ளனர். அந்த ஊர் போலீசு ஆய்வாளரோ ஆர்.எஸ்.எஸ்.க்காரர்கள் மீது எந்த வழக்கு போட்டாலும் அவர்கள் வெளியே வந்துவிடுகிறார்கள் என்று கூறி கையை விரிக்கிறார். இந்து வெறியர்கள் எதிர்பார்த்தபடியே பொடிமுண்டா கிராம வழக்குகள் நீதிமன்றத்தால் கைவிடப்பட்டன.

கந்தமால் இந்துவெறி பாசிசப் படுகொலை வழக்குகளின் நிலை இதுவென்றால் 1998இல் பஜ்ரங்தள் கிரிமினல் தாராசிங்கால் பாதிரியார் ஸ்டெயின்ஸ{ம் அவரது இரு பச்சிளம் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கின் நிலை அதைவிடக் கேவலமானது. தாராசிங்கிற்கு மரணதண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2003 இல் தீர்ப்பளித்தது சி.பி.ஐ. நீதிமன்றம். பாதிரியை எரித்த கையோடு சையிக் ரஹ்மான் என்ற வியாபாரியை எரித்துக் கொன்றது பாதிரியார் அருள்தாஸை வெட்டிக் கொன்றது ஆகிய வழக்குகளும் தாராசிங்கின் மீது உள்ளன. ஆனால் சி.பி.ஐ. நீதிமன்றமோ ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட்ட சம்பவம் அரிதிலும் அரிதானதொரு சம்பவம் என்றது. சங்கப் பரிவாரங்களுடன் தாராசிங்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால் இந்த படுகொலையில் எந்த அமைப்புக்கும் தொடர் பில்லையென்று கூறியது சி.பி.ஐ. நீதிமன்றம்.

இந்த விளக்கங்களுக்குப் பொருத்தமானதொரு தீர்ப்பாக தாராசிங்கின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் 11 பேரை விடுதலை செய்தும் 2005இல் தீர்ப்பு வழங்கியது ஒரிசா உயர்நீதிமன்றம். பாதிரியாரைக் கொலை செய்யும் வகையில் தாராசிங் தாக்கியதற்கு ஆதாரமில்லை என்று வேறு உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இப்பொழுது உச்சநீதி மன்றத்தில் பிணை கேட்டுள்ள தாராசிங்கிற்கு மேற்சொன்ன உயர்நீதி மன்றத்தின் கூற்று உதவக்கூடும்.

இந்திய நீதிமன்றங்கள் இந்துத்துவத்திற்குப் பக்கமேளம் வாசிப்பவையாகவே உள்ளன என்பதை இந்த வழக்குகள் அப்பட்டமாகக் காட்டுகின்றன. நீதிமன்றங்களின் பாசிசத்தை வீதிகளில் இறங்கி முறியடிக்க வேண்டும்; மக்கள் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு பாசிச பயங்கரவாதிகளைத் தண்டிக்க வேண்டும்; இல்லையேல் அநீதி மன்றங்களின் ஆசியோடு இந்துவெறி பாசிசம் வெளிப்படையாகவே கொட்டமடிக்கும் என்பதையே இவை எச்சரிக்கையாக உணர்த்துகின்றன.

• கந்தசாமி

நன்றி: தமிழரங்கம்


Saturday, January 15, 2011

காவி பயங்கரவாதிகளுக்கு டிஆர்பி மதிப்பீடு இல்லை!




இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள காவி பயங்கரவாதம், குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டவுடன் எப்படி மூடி மறைக்கப்பட்டது அல்லது எப்படி திசை திருப்பப்பட்டது என்பதை அறிய, பழைய அதாவது குண்டு வெடிப்பு நிகழ்ந்த அன்றைய தினங்களில் வெளிவந்த ஊடகங்களின் கட்டுரைகளைப் படித்தால் விளங்கும். இந்துத்துவாவின் ஊடக தீவிரவாதிகள் எல்லா பத்திரிகைகளும் ஊடுருவியுள்ளாதால் அவர்களின் கற்பனைக்கு வந்ததை எல்லாம் எழுதி வைத்திருந்ததைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி!

அஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்ததை முஸ்லிம்களோடு தொடர்பு படுத்தி எழுதிய ஒரு கட்டுரையாளர் " முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான வஹ்ஹாபிகள் தர்கா வழிபாட்டை எதிர்ப்பவர்கள் அவர்கள் தான் இதனை செய்துள்ளனர்" என்று தன் கற்பனையை விவரித்துள்ளார்.

சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பை செய்தவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று சத்தியம் செய்யாத குறையாக எழுதியவர்களும் உண்டு. இவர்கள் எல்லாம் தன்னை உற்பத்தி செய்த சங்பரிவருக்கு விசுவாசமாக உழைத்துள்ளார்கள். ஆனால் காலம் எல்லா கேள்விகளுக்கும், பொய் குற்றச்சாட்டிற்கும் பதில் சொல்லி விட்டது. இனி... என்ன செய்யப்போகிறது அரசாங்கம்.?


(அப்போதைய ப்ரண்ட்லைன், அவுட்லுக் இதழ்களின் கட்டுரையை இங்கு படித்துப்பார்போம்...)

காவி பயங்கரவாதத்தின் கதை:
மகாராஷ்ட்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் 2002 முதல் 2008 வரை பல குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இவற்றுக்கு, இந்து தீவிரவாத அமைப்புகள் மீது குற்றம் சாட்டப்பட்டாலும் ‘உறுதியான ஆதாரம்’ இருக்கவில்லை. இதன் பிறகு 2008, செப்டம்பர் 29ல் மாலேகான் குண்டு வெடிப்பு நடந்தது.

முஸ்லிம்களை அடர்த்தியாகக் கொண்ட இப்பகுதியில் நடந்த குண்டு வெடிப்புக்கு 6 பேர் பலியாயினர். மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்புப் படை சந்தேகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து இறுதியில் இந்து அடிப்படை வாதத்திற்கும் குண்டு வெடிப்புக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தினர். இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலருக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் முறியடித்து ‘இந்து அரசாங்கத்தை’ உருவாக்குவது அவர்கள் திட்டம்.

ஜவுளி நகரமான மாலேகானின், மக்கள் நெருக்கமான பிகு சவுக் பகுதியில் குண்டு வெடிப்பு நடந்த சில வாரங்களுக்குள் ஏ.டி.எஸ். 11 பேரை கைது செய்தது. அவர்களில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாகூர் முக்கியமானவர். இவர்களுக்கு வேறு சில குண்டு வெடிப்புகளிலும் தொடர்பிருந்திருக்கிறது. அவற்றில் நான்டெட், பிரபானி, ஜால்னா உள்ளிட்ட பகுதிகளில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளும் உண்டு. இவற்றில் அவர்களின் தொடர்பு குறித்து காவல்துறை இன்னும் இறுதியான முடிவுக்கு வரவில்லை.

2010, ஜூலை 19ஆம் தேதி, மும்பை நீதிமன்றம், ஒருங்கிணைந்து செய்த குற்றங்களுக்கான மகாராஷ்ட்ரா மாநில கட்டுப்பாட்டு சட்டப்படி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கலோனியில் ஸ்ரீகாந்த் புரோகித் மற்றும் சிலர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

தேச விரோத செயல்களுக்காகவும், குண்டு வெடிப்புகளுக்காகவும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் குற்றம் சாட்டப்பட்டது இதுவே முதல் முறை. பாபர் பனி (2003), ஜால்னா (2004), பூர்ணா (2004) ஆகிய நகரங்களின் பள்ளிவாசல்களில் குண்டுகள் வெடித்தபோது இந்துத்துவா அமைப்புகள் மீது சந்தேகம் வலுத்த போதிலும், 2006ஆம் ஆண்டில் நான்டெட் நகரில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது வெடித்தது. இச்சம்பவம் இந்து தீவிரவாதிகள் மீதான சந்தேகத்தை உறுதிபடுத்தியது. தொடர்ந்து மாலேகான் குண்டுவெடிப்பு அவ்வமைப்புகளின் மறைமுக செயலை உறுதி செய்தது.

2009 அக்டோபரில் கோவாவில், மர்ம கோவா பகுதியில் இரண்டு நபர்கள் வெடிகுண்டை எடுத்துச் செல்லும் வழியில் அது வெடித்து இருவரும் பலியானார்கள். விசாரணையில் அவர்கள் இருவரும் சனதன் சாஸ்தா என்ற இந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள் என தெரிய வந்தது. கோவாவின் சன்காவோல் பகுதியில் சோதனையிட்டபோது காவல்துறை வெடிக்காத இரண்டு ஐ.ஈ.டி. வகை குண்டுகளை கண்டெடுத்தனர். இவை, சன்ஸ்தா அல்லது அது போன்ற அமைப்புக்கு உரியதாக இருக்கும் என்று காவல்துறை நம்பியது.

குற்றப் பத்திரிக்கை
இந்து தீவிரவாதம் தொடர்பாக விரிவான ஆய்வுகள் செய்த கே.பி. ரகுவன்ஷி தலைமையிலான புலனாய்வுக் குழு 4,528 பக்கம் கொண்ட குற்ற அறிக்கையை, மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு எதிராக தாக்கல் செய்தது.

குற்றவாளிகளுக்கு இடையே பல மணி நேர தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளதற்கான குறிப்புகள், குண்டு வெடிப்பு தகவல்களின் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தொகுக்கப்பட்டது.
11 குற்றவாளிகள்:
1. சாத்தி பிரக்யா சிங் தாகூர்
2. ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித்
3. சுதாகர் திவேதி என்ற தயானந்த பாண்டே
4. ராகேஷ் தாவேதி
5. சமீர் குல்கர்னி
6. சுதாகர் சதுர்வேதி
7. ஷிவ் நாராயண் கல்சங்கரா
8. ஷியாம் சாகு
9. மேஜர் ரமேஷ் உபாத்யாய் (ஓய்வு ராணுவம்)
10. அஜய் ராகிர்ஜர்
11. ஜகதீஷ் மாத்ரா

தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள்
1. ராம்ஜி
2. சந்தீப் விஷ்வாஷ் டாங்கே
3. பிரவீன் முத்தலிக்
இவர்களில் ராம்ஜி கைது செய்யப்பட்டால் இக்குழுவின் பல்வேறு நடவடிக்கைகளின் புதிர்கள் அவிழ்க்கப்படும் என்கிறது காவல்துறை.

//சுவாமி அஸிமானந்த் என்றழைக்கப்படும் மற்றுமொரு சந்தேகத்திற்குரிய நபரும் தலைமறைவாக இருந்து வருகிறார். இவர் கைதானால் தான் மேற்படி குண்டு வெடிப்புகளில் இவ்வமைப்புகளுக்கான தொடர்பு வெளிச்சத்துக்கு வரும் என்கிறது காவல்துறை.//

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிகப் பெரிய சதிகளைச் செய்ய திட்டமிட்டிருந்ததை குற்றப் பத்திரிக்கை சுட்டிக்காட்டுகிறது. மாலேகான் அவர்களின் முதலாவதும் மிகப் பெரியதுமான திட்டம். முஸ்லிம்களை மிக அடர்த்தியாகக் கொண்ட நகரம் மாலேகான் என்பதால் அவ்வூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், 2006ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டு வெடிப்புக்கு சிமி அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது என வெளியான செய்தியின் அடிப்படையில், இந்த குண்டு வெடிப்பு (2008ல்) விசாரணையையும் புலனாய்வுத் துறை சிமியை நோக்கியே நகர்த்தும் என்று அவர்கள் நம்பினார்கள்.

குற்றப் பத்திரிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி உரையாடல்களை பார்க்கும்போது, மாலேகான் குண்டு வெடிப்பு சேதம் குறித்து சாத்வி ஏமாற்றம் அடைந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

குற்றவாளிகளில் ஒருவரிடம் சாத்வி தொலைபேசியில் பேசியபோது,
‘‘ஏன் மிகவும் சொற்பமான அளவில் மக்கள் பலியாகியுள்ளனர். ஏன் நீங்கள் கூட்ட நெரிசலான பகுதியில் (வாகனத்தை) நிறுத்தவில்லை’’
என்று கேட்டுள்ளார்.

ஐபியின் தலையீடு:

மகாராஷ்ட்ரா காவல்துறையின் முன்னாள் ஐ.ஜி.பி. யான எஸ்.ம். முஷ்ரிஃப், கார்கரேயை கொன்றது யார்- என்ற நூலை எழுதினார். இந்துத் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில் ஐபியின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். ஐபி என்ற புலனாய்வு அமைப்பு பிராமணர்களின் பிடியில் உள்ளதாகவும், குறிப்பாக நான் அவர்களை இந்துக்கள் என்று அழைக்கமாட்டேன் என்றும் கூறுகிறார். இந்தியாவில் பிரபலமான ஊடகங்கள், காவல்துறை, அரசுகள் என அனைத்தும் அவர்களது பிரச்சாரங்களுக்கு பலியாகியிருப்பதாகவும் முஷ்ரிஃப் கூறுகிறார்.

ஊடகங்களின் ஒருதலைபட்சம்:
ஊடகங்களும் எப்போதும் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கின்றன. குண்டு வெடிப்பு நடக்கும் போதெல்லாம் அதே நாளில் சில முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களோடு ஊடகங்கள் வெளிப்படுகின்றன. ஒரு சமூகத்தைப் பற்றிய தப்பெண்ணம் உருவாகவே ஊடகங்கள் வேலை செய்கின்றன. முஸ்லிம் தீவிரவாதிகள், தாலிபான்களை காட்சிப்படுத்தும் போது தங்களது டிஆர்பி மதிப்பீடு உயர்வதாகவும், அதுவே இந்துத் தீவிரவாதிகளுக்கு டிஆர்பி மதிப்பீடு இல்லை என்பதையும் பிரபல ஆங்கில மற்றும் பல்மொழி ஊடகங்கள் ஒத்துக் கொள்கின்றன.

எனவே, முஸ்லிம் இளைஞர்கள் குற்றவாளிகளாக பிடிக்கப்படும்போது, அவர்கள் நிரபராதிகள் என்று தெரிய வரும் வரை நாம் அவர்களை குற்றவாளிகளாகவே கருத வேண்டியுள்ளது என்கிறார் வரலாற்றாசிரியர் கிறிஸ்டோப் ஜெபர் லாட்.

இவை தான் இந்தியாவை ஆட்டிப் படைக்கும் காவி பயங்கரவாதம்.

நன்றி: பிரெண்ட் லைன் 2010, ஆகஸ்ட் 13
அவுட் லுக் 2010, ஜூலை 19

Thursday, January 13, 2011

காங்கிரஸின் கரசேவை!! பறிக்கப்படும் பள்ளிவாசல்!!

ஹஸ்ரத் நிஸாமுத்தீன் ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகிலுள்ள ஜங்புராவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மஸ்ஜித் ஒன்றை டெல்லி வளர்ச்சி ஆணைய(டி.டி.எ) அதிகாரிகள் அநியாயமாக இடித்துத் தள்ளியுள்ளனர்.

இச்சம்பவத்தைக் கேள்விபட்டு கொதித்துப்போன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. போலீசார் மக்கள் கூட்டத்தின் மீது கண்ணீர்புகையை உபயோகித்து லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி மஸ்ஜிதை இடிக்க பெரும் போலீஸ் படையுடன் வந்த டி.டி.எ அதிகாரிகள் வந்ததனர். ஆனால், மஸ்ஜித் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்படவில்லை என போராட்டத்திற்கு தலைமை வகித்த தர்வீந்தர் சிங் மார்வே எம்.எல்.ஏ தெரிவித்தார்.

இந்த அராஜகத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் நிஸாமுத்தீன் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னால் நடுஇரவிலும் தர்ணாவில் ஈடுபட்டனர்.டி.டி.எவின் நடவடிக்கையை கண்டித்து டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதிலும், ஜாமிஆ நகரிலும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன.சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக்கூறி ஏற்கனவே நான்கு தடவை மஸ்ஜிதை இடிக்க டி.டி.எ அதிகாரிகளும் போலீசாரும் முயன்ற பொழுதும் மக்களின் எதிர்ப்பின் மூலம் அவர்களின் திட்டம் நிறைவேறவில்லை.

நேற்று காலை ஆறுமணிக்கு பெரும் போலீஸ் படையுடன் வந்த அதிகாரிகள் மஸ்ஜிதை இடித்துத் தள்ளினர். தடையரண்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்த பொழுதிலும் தடை அரண்களை தகர்த்த மக்கள் கூட்டம் முன்னேறியது. போலீசார் கண்ணீர்புகையை வீசி லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது எனவும், நீதிமன்ற உத்தரவின்படி இதுத்தொடர்பாக ஆய்வு செய்த கமிட்டியின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து மஸ்ஜிதை இடிக்க தீர்மானித்ததாக டி.டி.எவின் துணை இயக்குநர் மார்கத் சிங் தெரிவித்தார்.ஆனால், இதனை மறுத்த டெல்லி இமாம் அஹ்மத் புகாரி, மஸ்ஜித் கட்டப்பட்டது வக்ஃப் நிலத்திலாகும். அரசு கெஜட்டில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என இமாம் அஹ்மத் புகாரி தெரிவித்தார்.

இரண்டு தினங்களுக்குள் டி.டி.எ இப்பிரச்சனைக்கு பரிகாரம் காணாவிட்டால் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் வருகிற வெள்ளிக்கிழமை என் தலைமையில் ஜும்ஆ தொழுகை நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தற்பொழுதும் மோதல் சூழல் நிலவுகிறது.

-நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆதாரம்: "மில்லி கேஜெட்"

Tuesday, January 11, 2011

காவி பயங்கரவாதிகளிடம் கரிசனம் ஏன்?

""டேய்.. மாப்ள இங்க பார்ரா பேப்பர.. மறுபடியும் வட நாட்டுல குண்டு வெடிச்சிருக்கு.".
"வச்சது யாராம். முஸ்லிம்கள் தானே?"
"ஆமாண்டா.. முஸ்லிம்கள் தான் வச்சதுன்னு உடனே நம்ம நாட்டு போலிசு கண்டுபிடிச்சிருச்சி.."
"ஏதாவது ஒரு இ-மெயில் வந்துருக்குமே?"
"அதே தாண்டா.. ஏதோ ஒரு முஸ்லிம் அமைப்பு பேரிலே இ-மெயில் அனுப்பப்பட்டிருக்கு. அதிலே நாங்கள் தான்டா வச்சோமுன்னு எழுதியிருக்காம்."
"அப்படியா! யாரையாவது அரெஸ்ட் பண்ணியிருக்காங்களா? இல்லையா?"
"உடனே நம்ம போலிசு துப்பறிஞ்சு நாலஞ்சு தாடி வச்ச ஆட்கள அரெஸ்ட் பண்ணிட்டாங்க...எல்லா பத்திரிகையிலும்.. அதிலும் தினமலரிலே மொத பக்கத்துல வந்துருக்கு.

சில வருடங்கள் கழித்து... டொய்..டொடாய்ங். (காலம் உருளுகிறது)

காலமும் காட்சியும் மாறி விட்டது. கர்கரேயின் புலனாய்வின் மூலம் புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டு "நிஜ" குற்றவாளிகள் அமுக்கப்படுகின்றனர். அதிலே ஒரு பெண் துறவியும் அடங்குவார். அவர் குற்றவாளியாக இருக்க முடியாது என்று அத்வானி தேசபக்தி தலைக்கேறி தலை தெறிக்க ஓடி வக்காலத்து வாங்குகிறார். இதே போல முஸ்லிம்களை அரெஸ்ட் செய்த போது அவர்கள் அப்பாவிகள் என்று வக்காலத்து வாங்கியவர்களின் தேசபக்தி சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அத்வானிக்கு சந்தேகிக்கப்படவில்லை. ஏன்?

இந்த செய்திகள் எல்லாம் பத்திரிகைகளில் ஒரு மூலையில் கட்டம் கட்டப்படாமல் வந்து போனது. பல குண்டு வெடிப்புகளிலும் தாங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆர்.எஸ்.எஸ். ஸை சார்ந்த ஒரு தீவிர பிரச்சாரகரே போலிஸ் கஸ்டடியில் வாக்கு மூலம் கொடுத்த போதும், அந்த செய்தியை சட்டை செய்யவில்லை ஊடகங்கள். குறிப்பாக தினமலர், செய்தி வெளியிடாமலே ஆர்.எஸ்.எஸ்.ஸின் மீதுள்ள கரிசனத்தைக் காட்டியது.

ஆர்.எஸ்.எஸ். என்ற பயங்கரவாத இயக்கம் உற்பத்தி செய்தவர்கள் தான் "தினமலரில் தங்களது அஜென்டாவை நிறைவேற்றி வருகின்றனர். எனும்போது அவர்களால் எப்படி ரத்த வெறி அமைப்பான சுயம் சேவக்கை எதிர்க்க முடியும். இந்தியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் விசாரணையை மீண்டும் தோண்டியெடுத்து மறு விசாரணை செய்தால், ஆர்.எஸ்.எஸ். என்ற வேதம் ஓதும் சாத்தானின் சுயரூபம் தெரியவரும். பூனைக்கு மணி கட்டுவது யார்?.

இவர்கள் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்ற மத வெறியர்களை உற்பத்தி செய்து சாதுக்களைப் போல் பல்வேறு துறைகளில் ஊடுறுவ விட்டுள்ளனர். அவர்களின் நெட்வொர்க் என்பது அல்காயிதா வின் நெட்வொர்க்கை விட அபாயகரமானது. அதை வெளியில் கசிய விடாமல் ஊடகங்கள், மற்றும் காவல், நீதி, உளவு, போன்ற துறைகளில் உள்ள ஆர்.எஸ்.எஸ். விசுவாசிகள் தடுத்தும் பாதுகாத்தும் வருகின்றனர். அவர்கள் நடத்தும் பள்ளிகளும்,கல்லூரிகளும் தான், துவேசத்தையும், மதவெறியையும், முஸ்லிம் வெறுப்பையும் மாணவர்களின் உள்ளத்தில் பதிய வைக்கின்றன. இதிலிருந்து வெளிவரும் மாணவர்கள் மத வெறியராக இல்லாமல் இருந்தால் தான் வியப்பு. முஸ்லிம் வெறுப்பும், இந்துத்துவம் என்ற இந்தியாவிற்கு பொருந்தாத வறட்டு தத்துவமும் இந்த "டவுசர் பாண்டிகளின்" நாடி நரம்புகளிலும் சிந்தையிலும் விதைக்கப்பட்டு மூளை சலவை செய்யப்பட்ட உற்பத்தி பொருளாக வெளி வந்து தன் கடமையை ஆற்றுகின்றனர்கள். முடிவாக.. ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார்கள் என்னும் விஷம் இந்தியாவின் ரத்த நாளங்களில் கலந்து விட்ட ஒன்று. அதனை தனியே பிரித்து எடுக்க யாராலும் முடியாது. இதை செய்ய அவர்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக "உழைத்துள்ளனர்". ஆனால் இந்த பயங்கரவாதத்தை எதிர்க்க எந்த அரசும் ஒரு துரும்பை கூட கிள்ளி எறியவில்லை. எறியவும் முடியாது. இது தான் நிதர்சனம். ஆர்.எஸ்.எஸ். நிச்சமாக ஒரு மனித விரோத இயக்கமே.


தொடர்புடைய பதிவுகள்: http://www.sinthikkavum.net/2011/01/blog-post_1868.html
மறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்!

சங்பரிவாரின் அம்பலமாகும் சூழ்ச்சிகள்!

இந்துத்துவ தீவிரவாதத்தை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது ஏன்?

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் "ஆர்.எஸ்.எஸ்". ஸுக்கு பங்குண்டா?

தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது!

ஹிந்துத்துவப் பயங்கரவாதத்தின் முதல் பலி!

ஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்!

ஊடகங்கள், முஸ்லிம்கள் மற்றும் முஜாஹிதீன்!

Saturday, January 8, 2011

"குண்டு வெடிப்பை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ். தான்" காவி பயங்கரவாதி வாக்குமூலம்


புதுடெல்லி,ஜன.8: மலேகானில் இரண்டு குண்டுவெடிப்புகள், ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆகியவற்றை நடத்தியது நானும், எனது கூட்டாளிகளும்தான் என கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளான்.


ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கட்டளையின்படிதான் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாகவும், அதற்கு தேவையான பணத்தை அளித்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் எனவும் அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி தீஸ்ஹஸாரி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் தீபக் தாபாஸின் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான் சுவாமி அஸிமானந்தா.

வாக்குமூலம் 42 பக்கங்களைக் கொண்டதாகும். இந்த குற்றத்தின் பெயரில் எனக்கு மரணத்தண்டனை கிடைக்கும் என தெரியும், ஆனாலும் எனக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிக்கவேண்டும் என அஸிமானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எவருடைய மிரட்டலோ, தூண்டுதலோ இல்லாமல் சுயமாகவே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பதாக அஸிமானந்தா தெரிவித்துள்ளான்.

அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்போது மாஜிஸ்ட்ரேட்டும், ஸ்டெனோ கிராஃபர் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் இருந்தனர்.

சுவாமி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலம்: "இந்திரேஷ்குமாரும், நானும் எனது தாங் சபரிதாம் ஆசிரமத்தில் வைத்து கடந்த 2005 ஆம் ஆண்டு சந்தித்தோம்.
ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவர் என்னைக் காண வந்திருந்தார். குண்டுவெடிப்புகளை ஒன்றும் நீங்கள் நடத்த தேவையில்லை எனவும், ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடையே நலப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என அவர் என்னிடம் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புகளை நடத்த சுனில் ஜோஷியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சுனில் ஜோஷிக்கு பணமும், ஆட்களையும் அளித்தது இந்திரேஷ்குமார் ஆவார்.

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், மலேகானிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தூண்டியது நான் தான். 2002 ஆம் ஆண்டு ஹிந்துக்கோயில் ஒன்றின் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனைக் குறித்து பரத் ரிதேஷ்வர், சுனில் ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியவர்களுடன் விவாதித்தேன்.

குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு மற்றும் சிலரின் உதவியை கோருவதற்காக சுனில் ஜோஷியிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் அளித்தேன்.

பா.ஜ.க எம்.பி ஆதித்தியானந்தை அணுகினார் ஜோஷி. ஆனால், போதிய உதவி ஒன்றும் அவர் செய்யவில்லை என சுனில் ஜோஷி என்னிடம் தெரிவித்தார்.

2005 ஜூன் மாதம் முதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பல்வேறு ரகசிய கூட்டங்களை நடத்தினோம். 80 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பதால் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தலாம் என நான் ஆலோசனைக் கூறினேன்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்ததால் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென தெரிவித்தேன்.

அஜ்மீர் தர்காவில் ஏராளமான ஹிந்துக்களும் வந்து செல்கின்றனர். அதனை முடிவுக்கு கொண்டுவர அங்கேயும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டுமென நான் அவர்களிடம் தெரிவித்தேன்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால் அந்த ரெயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆலோசனை தெரிவித்தது சுனில் ஜோஷியாவார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைப்பதற்கான பொறுப்பை சுனில் ஜோஷியே ஏற்றுக்கொண்டார். 2006 ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு என்னைக் காண வந்தார். அப்பொழுது அவர் நாம்தான் மலேகானில் குண்டுவெடிப்பை
நிகழ்த்தினோம் என தெரிவித்தார்.
அன்றைய பத்திரிகையில் குண்டுவெடிப்புத் தொடர்பாக முஸ்லிம்களை கைதுச் செய்த செய்தி வெளியாகியிருந்தது.

மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்த 40 ஆயிரம் ரூபாய் ஜோஷிக்கு அளித்தேன். காலம் தாழ்த்தாமல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது
." இவ்வாறு அஸிமானந்தா தெரிவித்துள்ளார். அவர் தற்பொழுது என்.ஐ.ஏவின் கஸ்டடியில் உள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆதாரம்: http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne150111Coverstory.asp

வினவுக்கு நன்றி, மருதையனுக்கு பாராட்டுக்கள்!


“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40 க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலீசு கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்து கொண்டு அதனை வணங்கினேன்.”


பாபர் மசூதிக்குள் 1949இல் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை, இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்திரவை 1986இல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991இல் வெளியிட்ட தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ள சம்பவம் இது.

செப், 30, 2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூரையிலும் நிச்சயமாக அந்தக் கருங்குரங்கு இருந்திருக்க வேண்டும் என்பதை தீர்ப்பிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் குரங்குகளின் எண்ணிக்கை ஒன்றா மூன்றா என்ற தெய்வீக உண்மை, பின்னாளில் இந்த நீதிபதிகள் சுயசரிதை எழுதும்போதுதான் நமக்குத் தெரியவரும்.
“ஒரு குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தமானது” என்று தீர்மானிப்பதற்கான உரிமை மூல வழக்கில், பட்டா பத்திரம் போன்ற சான்றாதாரங்களைச் சார்ந்து நிற்காமல், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இராமன் பிறந்ததாக இந்துக்கள் நம்புவதால், அவர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அந்த இடத்தை இராமபிரானுக்குச் சொந்தமாக்குவதாகத் தீர்ப்பளித்திருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம்.


ஒரு உரிமை மூல வழக்கில் மனுதாரரின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு சொத்துரிமை வழங்கமுடியுமா என்பதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக எழுப்பப்படும் மையமான கேள்வி. மனுதாரரின் நம்பிக்கை கிடக்கட்டும். நீதிபதியின் நம்பிக்கைதான் 1986 தீர்ப்பையே தீர்மானித்திருக்கின்றது என்பதையல்லவோ குரங்கு கதை நமக்குக் காட்டுகிறது!

அலகாபாத் தீர்ப்பு: இந்து பாசிச அரசியலுக்கு சட்டரீதியான அங்கீகாரம்!


அலகாபாத் தீர்ப்புக்கு முன் இந்துக்களின் நம்பிக்கையாக மட்டுமே இருந்த இராமஜென்மபூமி, இன்று சட்ட அங்கீகாரம் பெற்று விட்டதாகவும், இத்தீர்ப்பின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் புதியதொரு அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார் அத்வானி. “இதுதான் இராமன் பிறந்த இடம் என்று நிரூபிக்கும் பட்சத்தில், அந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிடுவதாக வக்பு வாரியம் ஏற்கெனவே கூறியிருந்தது. இதோ இன்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவர்களுடைய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. வக்பு வாரியம் தனது வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும். அந்த இடத்தின் மீதான தனது கோரிக்கையைக் கைவிட வேண்டும்” என்று மிரட்டியிருக்கிறார் தொகாடியா. “அயோத்தியில் இராமனுக்கு பிரம்மாண்டமானதொரு ஆலயம் அமைக்கும் பணியில் இந்துக்களுடன் கைகோர்த்து நிற்க முஸ்லிம்கள் முன்வரவேண்டும். இரு சமூகங்களும் இணைந்து வலிமையான இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்குக் கிடைத்திருக்கும் இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று முஸ்லிம் சமூகத்தை இந்து தேசியத்துக்கு அடிபணிந்து விடுமாறு அறிவுரை கூறியிருக்கிறார் அசோக் சிங்கால்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் தற்போது ஒதுக்கியிருக்கும் மூன்றில் ஒரு பங்கு நிலத்தையும் இந்துக்களிடம் ஒப்படைத்து விடவேண்டுமாம். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாதாம். இசுலாமிய மக்களின் உள்ளத்தில் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கும் காயத்தின்மீது உப்பை வைத்துத் தேய்த்துக் கொண்டே, பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறது இந்து மதவெறிக் கும்பல். “சுமுகமான தீர்வு வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினால், நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள இயலும்” என்று பா.ஜ.க வின் கருத்தையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் காங்கிரசு கட்சியின் சத்யவிரத சதுர்வேதி. 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மசூதியை மீண்டும் கட்டித்தரவேண்டும் என்று கூறிய திமுக, இன்று இத்தீர்ப்பை விமரிசித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

“தீர்ப்பினால் மகிழ்ச்சியடைந்தோரும் சரி, ஏமாற்றமடைந்தோரும் சரி இதனைத் தெருவுக்குக் கொண்டு செல்லக்கூடாது. தீர்ப்பு யாருக்கேனும் திருப்தி அளிக்கவில்லையென்றால், அவர்கள் மேல் முறையீடு செய்யலாம்” என்றிருக்கிறார் வலது கம்யூ கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா.

“நமது மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பில், பிரச்சினையைத் தீர்த்துக் கொள்தற்கான ஒரே வழி உச்ச நீதிமன்றத்தை அணுகுவதாகத்தான் இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறது மார்க்சிஸ்டு கம்யூ கட்சி.

மொத்தத்தில் எந்த ஓட்டுக் கட்சியும் இத்தீர்ப்பினை அரசியல் ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ விமரிசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பின் மீதான விமரிசனங்களும்விமரிசனங்களிலிருந்து எழும் கேள்விகளும்!

ராஜீவ் தவான், பி.வி.ராவ், பிரசாந்த் பூஷண் போன்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சச்சார் போன்ற துறைசார் வல்லுநர்கள் மற்றும் சிவில் உரிமை அமைப்புகள்தான் இத்தீர்ப்பு குறித்து கீழ்க்கண்ட விமரிசனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்:
“தந்தையைக் கொலை செய்கின்ற மகன், தந்தையின் சொத்தில் பங்கு கோரும் உரிமையை இழக்கிறான் என்பது சட்டம். இங்கோ 1992 இல் மசூதியை இடித்த குண்டர்களுக்கோ இத்தீர்ப்பு அவர்கள் கேட்டதைக் கொடுத்திருக்கிறது’’.

“ 1949 இல் திருட்டுத்தனமாக இராமன் சிலையை உள்ளே வைத்ததை ஏற்றுக் கொள்ளும் நீதிமன்றம், மசூதியை அவர்களுக்கு வழங்கியதன் மூலம் அந்த திருட்டுத்தனத்தை அங்கீகரித்திருக்கிறது.”

“ஒரு உரிமை மூல வழக்கில், நம்பிக்கையின் அடிப்படையில் சொத்தை வழங்க முடியாது. நம்பிக்கை என்பது பக்தனுக்கு வழிபாட்டு உரிமையைத்தான் வழங்குகிறதேயன்றி, இடத்துக்கு சொந்தம் கொண்டாடும் உரிமையை அல்ல. ஆயின் பிற மதத்தினருக்கும் இதே உரிமை வழங்கப்படுமா?”

“ பாபர் காலத்தில் இந்து வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக கூறும் இத்தீர்ப்பு, நம் கண்முன்னே நடந்த மசூதி இடிப்பு குறித்து மவுனம் சாதிப்பதன் மூலம் அந்த கிரிமினல் நடவடிக்கையை நியாயப்படுத்தியிருக்கிறது.”
— இவையெல்லாம் தீர்ப்பின்மீதான இவர்களது விமரிசனங்கள்.
இவ்விமரிசனங்களிலிருந்து நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. மதச்சார்பின்மைக் கோட்பாடு குறித்த இந்திய அரசியல் சட்டத்தின் பார்வையிலிருந்து வழுவி, இந்து மதவாதப் பார்வையிலிருந்து நீதிபதிகள் இத்தீர்ப்பை வழங்கியிருப்பதுதான் இந்த அநீதிக்கு அடிப்படையா, அல்லது மதச்சார்பின்மை குறித்த இந்திய அரசியல் சட்டத்தின் பார்வையே இந்த அநீதியான தீர்ப்புக்கு இடமளிக்கிறதா?

குறிப்பிட்ட இடத்தில் இராமன் பிறந்தான் என்ற நம்பிக்கையோ, அல்லது பிறந்தானா இல்லையா என்பது குறித்த ஆதாரங்கள், சாட்சியங்களோ ஒரு உரிமையியல் வழக்கின் எல்லைக்குள் வருகின்ற, நீதிமன்றம் தலையீட்டுத் தீர்ப்புக் கூறத்தக்க பிரச்சினைகளா அல்லது இப்பிரச்சினையில் அலகாபாத் நீதிமன்றம் அத்துமீறி மூக்கை நுழைத்திருக்கிறதா?

வரலாறு, மதநம்பிக்கை, அரசியல், சட்டம் என்ற வெவ்வேறு வகைப்பாடுகளின் கீழ் அணுகப்பட வேண்டிய இப்பிரச்சினையில், தனது நோக்கத்துக்கு ஏற்ப ஒன்றை மற்றொன்றோடு சேர்த்துக் குழப்பும் சதித்தனமான உத்தியை பார்ப்பன பாசிசக் கும்பல் துவக்கமுதலே கையாண்டு வருகிறது. ‘பாசிசக் கும்பலின் சதி’ என்று நாம் எதைச் சாடுகிறோமோ, அதையே சட்டபூர்வமான அடித்தளத்தின்மீது நிற்க வைத்திருப்பதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

அரசியல் வரலாறு மதநம்பிக்கைசட்டம் இந்து பாசிசத்தின் கண்ணாமூச்சி ஆட்டம்!
இப்பிரச்சினையில் பார்ப்பன பாசிசக் கும்பல் கையாண்டு வரும் உத்திகளை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியம்.

13 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் திரேதா யுகத்தில் பிறந்த விஷ்ணுவின் அவதாரமே இராமன் என்று கூறி, மத நம்பிக்கையின் அடிப்படையில் இந்துக்களைத் திரட்டியது சங்க பரிவாரம். “இராமஜென்மபூமி குறித்த தொன்மை வாய்ந்த இந்துக்களின் மதநம்பிக்கையை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தவோ, தீர்ப்பளிக்கவோ நீதிமன்றத்துக்கு அதிகாரமே கிடையாது” என்றும் வாதிட்டது.

அதே இராமனை இந்து ராஷ்டிர அரசியலின் தேசிய நாயகனாக சித்தரிக்கும் வேளையில், மொகலாயப் படையெடுப்பு, பாபர் இடித்த இராமன் கோயில், அதற்கான தொல்லியல் ஆதாரம் என்று சங்க பரிவாரம் வரலாற்றைத் துணைக்கழைத்துக் கொண்டது.

1949 ஆம் ஆண்டில், சட்டவிரோதமான முறையில் இராமன் சிலையை மசூதிக்குள் வைத்து, உரிமையியல் வழக்கு தொடுப்பதற்குத் தேவையான தாவாவை திட்டமிட்டே உருவாக்கியது. இது தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், “அந்த இராமன் சிலை, பூமியை வெடித்துக் கிளம்பிய சுயம்பு விக்கிரகம் என்று இந்துக்கள் நம்புவதால், அதற்கு வழிபாடு நடத்துவது அரசியல் சட்டரீதியாக இந்துக்களின் மத உரிமை” என்று கூறி நீதிமன்றத்தில் பூசை நடத்தும் உரிமையை நிலைநாட்டிக் கொண்டது. 1986இல் பக்தர்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையையும் நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்டது.
டிசம்பர் 1992இல் வழிபாட்டு உரிமை என்ற அடிப்படையில், பஜனை பாடும் உரிமையை உச்ச நீதிமன்றத்திடம் பெற்று, மசூதியை இடிப்பதற்கு அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொண்டது. மசூதி இடிப்பு என்ற அந்த நடவடிக்கை கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டாலும், அந்தக் கிரிமினல் நடவடிக்கையின் மூலம் மசூதியின் இடிபாடுகளின் மீது நிறுத்தி வைக்கப்பட்ட இராமன் சிலைக்கு வழிபாடு நடத்துவது தமது மத உரிமை என்று கூறி நீதிமன்றத்திடம் வழிபாட்டு உரிமையையும் பெற்றுக் கொண்டது.
மசூதி இடிக்கப்பட்டு விட்டதால், “தொல்லியல் ஆய்வு, இந்துக் கோயில் இடிக்கப்பட்டதற்கான ஆதாரம்” என்று கூறி தனது முஸ்லிம் எதிர்ப்பு இந்து தேசிய அரசியல் கண்ணோட்டத்தில் வரலாற்றைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, தொல்லியல் சான்றுகளுக்கு வியாக்கியானம் தரத்தொடங்கியது. இருந்த போதிலும், “அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற இந்துக்களின் மதநம்பிக்கை, நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது” என்ற தனது அறுதியான துருப்புச் சீட்டை சங்க பரிவாரம் கீழே போட்டுவிடவில்லை.

“எந்த இராமனின் பிறப்பிடம் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது” என்று சங்க பரிவாரம் வாதிடுகிறதோ, அதே இராமனின் சிலையை (ராம் லல்லா) உரிமை மூல வழக்கில் ஒரு மனுதாரராக்கி, தான் பிறந்த இடத்தைத் தனக்கு கிரயம் செய்து தருமாறு அதே நீதிமன்றத்தின் முன்னால் முறையிடச் செய்து, அலகாபாத் தீர்ப்பின் மூலம் மசூதியின் மையப்பகுதி நிலத்தையும் பெற்றுவிட்டது.

இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போதுதான், அரசியல் சட்ட உரிமை, மதநம்பிக்கை, வரலாறு, இந்துப் பாசிச அரசியல் ஆகியவற்றை வாளாகவும் கேடயமாகவும் தேவைக்கேற்ப எப்படியெல்லாம் சங்க பரிவாரம் பயன்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நாடகத்தில், சங்க பரிவாரத்தின் ஒவ்வொரு காய் நகர்த்தலுக்கும் நீதித்துறை உடந்தையாகவே இருந்து வந்திருக்கிறது. இந்து மதவெறியை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ‘மதச்சார்பற்ற’ சக்திகள், பார்ப்பன பாசிசத்தை அரசியல் ரீதியாகவும், பார்ப்பனியத்தை சித்தாந்த ரீதியாகவும் எதிர்க்கவில்லை என்பதுடன் இப்போதும் கூட “உச்சநீதிமன்றத்தை அணுகினால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைத்துவிடும்” என்று கூறி, இந்திய அரசியல் சட்டம் குறித்த பிரமையை வளர்க்கின்றனர்.

அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையான சில அம்சங்களைப் பரிசீலித்தோமானால், பார்ப்பனப் பாசிசத்தின் பித்தலாட்டங்கள் அனைத்துக்கும் சட்ட அங்கீகாரம் தரும் சாத்தியத்தை “மத நம்பிக்கைக்கான சுதந்திரம்” என்ற பெயரில், இந்திய அரசியல் சட்டத்தின் 25, 26ஆவது பிரிவுகள்தான் வழங்கியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.
பாபர் மசூதி வழக்கின் வரலாறு!


இந்த வழக்கின் மனுதாரர்கள் மொத்தம் 28 பேர். சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, குழந்தை இராமன் விக்கிரகத்தின் (ராம் லல்லா விராஜ்மன்) சார்பில் ராமனது நெருங்கிய நண்பர் திரிலோக் நாத் பாண்டே ஆகிய மூன்று மனுதாரர்களே இதில் முக்கியமானவர்கள். இவர்களுக்கு இடையில்தான் பாபர் மசூதி வளாகம் மூன்று பங்காகப் பிரிக்கப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்விவரங்களுக்குள் செல்லுமுன் சுருக்கமாக இந்த வழக்கின் வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்.

1949 டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவில் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமன் சிலை வைக்கப்பட்டதுதான் இந்த உரிமை மூல வழக்கின் தொடக்கம் என்று கருதப்பட்டாலும் இப்பிரச்சினைக்கான விதை முந்தைய நூற்றாண்டிலேயே போடப்பட்டுவிட்டது.


17ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் இன்றைய உத்தரப் பிரதேச மாநிலத்தின் எந்த ஊரிலும் ராமனுக்கு கோயில் எதுவும் இருந்ததில்லை என்றும், 1788இல் ஒரு கிறித்தவ ஜெசூட் பாதிரியார்தான் “இது இராமன் பிறந்த இடம்” என்று ஒரு குறிப்பினை போகிற போக்கில் குறிப்பிட்டு செல்கிறார் என்றும் கூறுகிறார் வரலாற்று ஆய்வாளர் டி.என்.ஜா. பாபர் மசூதியோ 1528ஆம் வாக்கில் கட்டப்பட்டிருக்கிறது.


1855ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக இப்பிரச்சினை இந்து தரப்பினரால் எழுப்பப்படுகிறது. அப்போது அயோத்தியை உள்ளடக்கிய பைசலாபாத் சமஸ்தானத்தின் மன்னனாக இருந்த வாஜித் அலி ஷா, பதற்றைத் தணிக்க ஒரு மூவர் குழுவை அமைக்கிறார். இந்த காலகட்டத்தில்தான் பைசலாபாத் சமஸ்தானத்தை விழுங்குவதற்கு கும்பினி ஆட்சி சதி செய்து கொண்டிருந்தது. வட இந்திய சுதந்திரப் போர் வெடிப்பதற்குக் காத்திருந்த காலம் இது. வாஜித் அலி ஷாவின் மனைவி பேகம் ஹசரத் மகல்தான் கும்பினிக்கு எதிரான போரைத் தலைமையேற்று நடத்தியவர் என்பதும், இந்தக் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க அளவில் பைசலாபாத் சமஸ்தானம் முழுவதும் இந்து முஸ்லிம் ஒற்றுமை நிலவியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


பைசலாபாத் சமஸ்தானம் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் வந்தபின், 1885இல் இது தொடர்பான முதல் உரிமையியல் வழக்கை மகந்த் ரகுவர் தாஸ் என்பவர் தொடர்கிறார். அன்றைய சப் ஜட்ஜ் பண்டிட் ஹரி கிஷன் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கவே, அதனை எதிர்த்து முஸ்லிம்கள் மாவட்ட நீதிமன்றத்துக்கு முறையிடுகின்றனர்.

“இந்துக்கள் புனிதமானதாகக் கருதும் ஒரு இடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்பது துரதிருஷ்டவசமானதுதான். எனினும் சம்பவம் நடந்து 356 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டபடியால், தற்போது இதற்கு நிவாரணம் கோருவது மிகவும் காலம் கடந்ததாகும்” என்று மகந்தின் மனுவைத் தள்ளுபடி செய்து தற்போது உள்ள நிலையே நீடிக்கவேண்டும் என்று உத்தரவிடுகிறார் மாவட்ட நீதிபதி சேமியர்ஸ்.

“இந்துக்களின் புனிதமான இடம்” என்று அவர் கருதுவதற்கான ஆவணங்கள் எதுவும் அந்த வழக்கில் தரப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி போகிறபோக்கில் சொல்லப்பட்ட கூற்றே அது. எனினும் மசூதி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதுதான் அந்த தீர்ப்பின் சாரம். உரிமையியல் வழக்குகளில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஏற்றுக் கொள்வது என்பதுதான் இந்திய அரசியல் சாசனத்தின் நிலை. அந்த வகையில் இந்திய அரசியல் சட்டத்தின்படி இந்த வழக்கு ஏற்கெனவே விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்ட ஒன்று.

1855க்குப் பின்னர் 1948இல்தான் மீண்டும் அங்கே பிரச்சினைகள் எழுகின்றன. அது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி வட இந்தியா முழுவதும் கலவரம் நடைபெற்ற காலம். 1948இல் மசூதியில் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் மீது இந்து வெறியர்கள் கல்லெறிவதாக புகார்கள் வருகின்றன. அயோத்தியைச் சேர்ந்த காந்தியவாதியான அட்சய பிரம்மச்சாரி என்பவர், நகரம் முழுவதும் முஸ்லிம் மக்களை இந்துவெறியர்கள் அச்சுறுத்துவதாக லால் பகதூர் சாஸ்திரிக்கு கடிதம் எழுதுகிறார்.

அக்டோபர் 1949இல் அம்மாவட்ட ஆட்சியர், மசூதியின் ஒரு புறத்தில் கோயில் கட்டிக் கொள்ளுமாறு இந்துக்களுக்கு அனுமதி அளிக்கிறார். டிசம்பர், 22, 1949 இரவில் 50 பேர் கொண்ட கும்பல் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே சிலைகளை வைக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

உடனே சிலைகளை அகற்றுமாறு உ.பி முதல்வருக்கு தந்தி அடிக்கிறார் நேரு. முதல்வர் பந்த் அகற்ற மறுக்கிறார். உள்ளே வைக்கப்பட்ட சிலைகளுக்கோ யாருமே உரிமை கோரவில்லை. பிறகு 1950 இல் “சுயம்புவாகத் தோன்றியிருக்கும் ராமபிரானுக்கு வழிபாடு நடத்த தங்களை அனுமதிக்க வேண்டும்” என்று கோபால்சிங் விசாரத், பரமஹன்ஸ் என்ற இருவர் மனு தாக்கல் செய்கின்றனர். “சிலைகளை அங்கிருந்து அகற்றவோ, பூசை நடத்துவதைத் தடுக்கவோ கூடாது” என்று மாவட்ட நீதிபதி நாயர் (பின்னாளில் ஜனசங்க கட்சியில் சேர்ந்தவர்) இடைக்காலத்தடை பிறப்பிக்கிறார்.

மேலும் 9 ஆண்டுகள் கழித்து, 1959இல்தான் மேற்படி சொத்தின் மீது (அதாவது பாபர் மசூதி அமைந்துள்ள 1500 சதுர கெஜம் அளவிலான நிலம்) உரிமை கோரி, நிர்மோகி அகாரா உரிமை மூல வழக்கை தொடுக்கிறது. இது அனுபவ பாத்தியதை அடிப்படையில் சொத்தின் மீது உரிமை கோரிய ஒரு சிவில் வழக்கு மட்டுமே. அந்த இடம் இராமன் பிறந்த இடம், மத நம்பிக்கை என்ற வாதங்களெல்லாம் நிர்மோகி அகாராவின் மனுவில் கிடையாது. இதற்கு எதிராக வேறு வழியில்லாமல் சன்னி வக்பு வாரியம் 1961 இல் எதிர் மனு தாக்கல் செய்கிறது.

1980களின் பிற்பகுதியில், ஷா பானு பிரச்சினையில் முஸ்லிம்களை தாஜா செய்வதாக ராஜீவ் காந்தி மீது பாரதிய ஜனதா குற்றம் சாட்டியவுடனே இந்து வாக்குகளைக் கவர்வதற்காக, பூட்டியிருந்த மசூதியின் கதவுகளைத் திறக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டது ராஜீவ் அரசு. 1986இல், எதிர் தரப்பான சன்னி வக்பு வாரியத்துக்கே தெரியாமல், யாரோ ஒரு பக்தர் பெயரில் மனு தாக்கல் செய்யவைத்து, ராமன் சிலையை வழிபட இந்து பக்தர்களை அனுமதிக்கும் உத்தரவை ஒரு தலைப்பட்சமாகப் பிறப்பித்தார், ‘கருங்குரங்கை விழுந்து கும்பிட்ட’ நீதிபதி பாண்டே.

இதனைத் தொடர்ந்து ராம ஜென்மபூமி பிரச்சினையை அரசியல் ரீதியில் அறுவடை செய்வதற்கான இயக்கத்தை பாரதிய ஜனதா நாடெங்கும் கட்டத்தொடங்கியது. 1989இல் தேர்தலுக்கு சில நாட்கள் முன் பாபர் மசூதி வளாகத்தில் ராமன் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பூசை நடத்த சங்கபரிவாரத்தை அனுமதித்தது ராஜீவ் அரசு.

வழக்கில் மனுதாரராக நுழைக்கப்படுகிறான் இராமன்!
ஆனால் வழக்கைப் பொருத்தவரை, ‘ராமன் பிறந்த இடம் என்ற அடிப்படையில் பாபர் மசூதி நிலத்தின் மீது உரிமை கோரும் மனு’ எதுவும் 1989 வரை தாக்கல் செய்யப்படவில்லை. “வெறும் உரிமையியல் வழக்கின் மூலம் முஸ்லிம்களிடமிருந்து இந்த இடத்தை சட்டரீதியில் கைப்பற்ற முடியாது; இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையின் கீழ் இந்த வழக்கைக் கொண்டு வருவதன் மூலம்தான் சட்டப்படியே இதனைக் கைப்பற்ற முடியும்” என்ற சூட்சுமம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தேவகி நந்தன் அகர்வாலுக்கு மட்டுமே அன்று புரிந்திருந்தது. நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனே, குழந்தை இராமனையே மனுதாரர் ஆக்கி, குழந்தை இராமனின் நெருங்கிய நண்பர், காப்பாளர் என்ற முறையில் 1989 இல் மேற்கூறிய வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டார் தேவகி நந்தன் அகர்வால். அடுத்த சில ஆண்டுகளில் தேவகி நந்தன் அகர்வால் இறந்து விடவே, அவருக்குப் பதிலாக ‘ராமனின் நண்பனாக’ திரிலோக்நாத் பாண்டே என்பவர் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் இறுதித்தீர்ப்பு, பாபர் மசூதி வளாகத்தை மூன்றாகப் பிரித்து மூன்று மனுதாரர்களுக்கும் தரவேண்டும் என்று கூறியிருக்கிறது எனினும், சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா ஆகிய இருவரது மனுக்களும் உரிமையியல் வழக்குக்கு உரிய கால வரம்பு (Limitation Period) கடந்து தாக்கல் செய்யப்பட்டவை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. மசூதி அமைந்துள்ள இடத்தின் மீது உரிமை கோரும் ராமபிரானது மனு மட்டுமே நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பட்டா, பத்திரம் போன்ற ஆவணங்களின் அடிப்படையிலோ, அனுபோக பாத்தியதை குறித்த ஆதாரங்களின் அடிப்படையிலோ பரிசீலித்து தீர்ப்பு வழங்க வேண்டிய ஒரு உரிமை மூல வழக்கில், அவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு, கடவுளின் சொத்துரிமை மற்றும் கடவுள் குறித்த இந்து பக்தனின் நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இத்தீர்ப்பில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகள் குறித்து வேறு பல கேள்விகளை எழுப்ப இயலுமெனினும், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 (மத நம்பிக்கை தொடர்பான உரிமை), பிரிவு 26 (மத நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பான உரிமை) ஆகியவைதான் அநீதியான இந்தத் தீர்ப்புக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன. எனவே அவை குறித்து புரிந்து கொள்வது அவசியம்.

சிவில் வழக்கில் இராமன் (கடவுள்) ஒரு மனுதாரர் ஆக முடியுமா?
இந்த வழக்கில் ‘குழந்தை இராமன் சிலை’ ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டிருப்பது குறித்து ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். உரிமையியல் சட்ட விதி 32 இன் படி (Order 32 of the civil procedure code) இந்துக் கோயிலின் கடவுள் சிலை சட்டரீதியான ஒரு நபராகவும், நிரந்தரமான மைனராகவும் கருதப்படுகிறது. ஒரு சிலை என்ற முறையிலும் மைனர் என்ற முறையிலும் அது தானே தனக்காகப் பேசும் ஆற்றலற்றது என்பதால், ஒரு காப்பாளர், அறங்காவலர் அல்லது பக்தர் மூலமாக மற்றவர்கள் மீது வழக்கு தொடுக்கும் உரிமை கடவுள் சிலை பெற்றிருக்கிறது. அரசியல் சட்டரீதியான இந்த உரிமையை கடவுள் சிலை பெற்றிருப்பதால், அரசியல் சட்டத்துக்கு முரணாக அந்தக் கடவுள் இழைத்திருக்கக் கூடிய குற்றங்களுக்காக அந்தக் கடவுளுக்கு எதிராக சிவில் அல்லது கிரிமினல் வழக்குகளை யாரும் தொடர முடியாது. சொத்து தொடர்பான வழக்குகளை மட்டுமே கடவுளுக்கு எதிராகத் தொடரமுடியும்.


இந்திய அரசியல் சட்டம் இந்துக் கடவுளுக்கு வழங்கியிருக்கும் இந்த உரிமை இசுலாமிய, கிறித்தவ கடவுளர்களுக்கோ பிற மதக் கடவுளர்களுக்கோ கிடையாது. உலகின் வேறு எந்த நாட்டிலும் கடவுளுக்கு இப்படிப்பட்ட சட்டரீதியான உரிமை கிடையாது.


கடவுளின் பெயரில் சொத்தை பதிவு செய்து விட்டு அதிகாரத்தில் இருக்கும் மன்னனோ, நிலப்பிரபுவோ, அறங்காவலரோ அதனை அனுபவிக்கும் வசதிக்காக பாரம்பரியமாக செய்யப்பட்டிருக்கும் இந்த ஏற்பாட்டை அரசியல் சட்டம் அங்கீகரித்திருக்கிறது. தில்லை நடராசனுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலத்தை நடராச தீட்சிதர் கையெழுத்துப் போட்டு விற்கும் முறைகேடுகள் இந்த ஏற்பாட்டின் மூலம்தான் சாத்தியமாகியிருக்கின்றன.


“உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது, கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர், மந்திரம் பார்ப்பானுக்கு கட்டுப்பட்டது, எனவே உலகம் பார்ப்பானுக்கு கட்டுப்பட்டது” என்று கூறப்படும் சமஸ்கிருத சுலோகம் இதற்கும் பொருந்தும்.
சட்டப்பிரிவு 25 இந்துக் கடவுளுக்கு வழங்கியுள்ள இந்த தனிநபர் என்ற சட்டரீதியான அந்தஸ்தை, கார்ப்பரேஷன்களுக்கு (முதலாளித்துவ கூட்டுப்பங்கு நிறுவனங்கள்) வழங்கப்பட்டுள்ள உரிமையுடன் ஒருவகையில் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம்.


போபால் வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சன் மீது மட்டுமின்றி யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் மீதும் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும் சட்டப்படி ஆண்டர்சனைத்தான் கைது செய்ய முடியுமேயன்றி, கார்ப்பரேஷனைக் கைது செய்ய முடியாது.

இந்துக் கடவுள் விசயத்தில், கடவுளின் குற்றத்துக்காக கடவுள் மீது மட்டுமல்ல, கடவுளின் காப்பாளர் மீதும் வழக்கு தொடர இயலாது. அதே நேரத்தில் கடவுள் சிலை நிரந்தரமான மைனர் என்ற சட்ட அந்தஸ்தைப் பெற்றிருப்பதால், உரிமையியல் வழக்கில் வக்பு வாரியத்துக்கும், நிர்மோகி ஆகாராவுக்கும் விதிக்கப்பட்டுள்ள கால வரம்பு என்பது கடவுளுக்குக் கிடையாது. இந்த அடிப்படையில்தான், 1949 இல் எழுந்த பிரச்சினைக்கு 1961 இல் தாக்கல் செய்யப்பட்ட அவர்களது மனுக்கள் காலம் கடந்தவை என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. அதே நேரத்தில் 1989 இல் இராமபிரானின் சார்பில் தேவகி நந்தன் அகர்வால் தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்துக் கடவுள் பெற்றிருக்கும் இந்த சிறப்புரிமையை அரசியல் சட்டத்தின் 25, 26 வது பிரிவுகளே வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இராமன் பிறந்த இடம் என்பதனாலேயே அது இராமனின் சொத்தாகிவிட முடியுமா? பக்தனின் வழிபாட்டு உரிமை சொத்துரிமை ஆகிவிட முடியுமா?
இத்தீர்ப்புக்கு எதிரான விமரிசனங்கள் மற்றும் கேள்விகளில் இவை இரண்டும் மிகவும் முக்கியமானவை.

‘மசூதியின் மையப்பகுதியில்தான் இராமன் பிறந்தான்’ என்று இந்துக்கள் நம்புவதாக மூன்று நீதிபதிகளுமே ஏற்றுக்கொள்கிறார்கள். அயோத்தியிலேயே சுமார் 5,6 இடங்கள் இராமன் பிறந்த இடங்களாக கருதப்பட்டு வந்தன. பாபர் மசூதிதான் இராமன் பிறந்த இடம் என்ற கருத்து இந்து பாசிஸ்டுகளால் 80 களில் தொடங்கி உருவாக்கப்பட்ட கருத்தேயன்றி, இந்துக்கள் அனைவரின் நம்பிக்கை அல்ல. இராமன் கடவுள் என்பதும் எல்லா இந்துக்களின் நம்பிக்கை அல்ல, இராவணனைக் கடவுளாக வழிபடும் இந்துக்களும் உண்டு. இந்துக்கள் மத்தியிலேயே நிலவும் இத்தகைய மாற்றுக் கருத்துகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, சங்கபரிவாரம் உருவாக்கிய கருத்தையே இந்து சமூகத்தின் தொன்மையான, அத்தியாவசியமான நம்பிக்கை என்று வழிமொழிகிறது இத்தீர்ப்பு.

ஒரு குறிப்பிட்ட மதத்தின் சாராம்சமான நம்பிக்கை எது என்று வியாக்கியானம் அளிக்கவும், அதன் அடிப்படையில் அரசியல் சட்டத்தின் 25 வது பிரிவின் கீழ் அந்த மதத்தினரின் உரிமைகளை அனுமதிக்கவுமான அதிகாரத்தை உயர்நீதி மன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியே இது இந்துக்களின் நம்பிக்கை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறுகிறது.
அது இந்துக்களின் நம்பிக்கைதான் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அத்தகைய மத நம்பிக்கையின் அடிப்படையில் மாற்றான் சொத்தின் மீது உரிமை கோரமுடியுமா என்ற கேள்விக்கு இத்தீர்ப்பு கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறது.

இராமன் மட்டும்தான் கடவுள், அவன் பிறந்த பூமி என்பது ஒரு அசையாச் சொத்து என்று பார்ப்பது தவறு என்றும், இராமன் பிறந்த அந்த இடமே (பூமியே) வாயு பகவானைப் போல தன்னளவில் அங்கே விரவி நிற்கின்ற கடவுளாகும் என்று கூறி ஸ்மிருதிகளை மேற்கோள் காட்டி விளக்கம் அளிக்கிறது இத்தீர்ப்பு.

ஒரு கோயில் இடிக்கப்பட்டு விட்டாலும், அங்கே கடவுள் சிலையே இல்லாமல் போனாலும், அந்த இடம் தனது தெய்வீகத்தன்மையை இழந்து விடுவதில்லை என்றும், கோயில் இருந்த அந்த இடமே ஒரு கடவுளாகவும், வழக்காடும் உரிமை பெற்ற நபராகவும் இருக்கிறது என்று கூறுகின்றது இத்தீர்ப்பு. இதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அலகாபாத் நீதிமன்றம் மேற்கோள் காட்டுகிறது.

எனவே, இந்தத் தீர்ப்பின் படி, குறிப்பிட்ட அந்த இடத்தில் இராமன் சிலை இருந்தாலும் இல்லாமல் போனாலும் அவன் பிறந்த பூமி என்பதே சுயம்புவான கடவுளாகிவிடுகிறது. நிலம் என்ற முறையில் அது ஒரு சொத்துக்கான தன்மையைப் பெற்றிருப்பது உண்மையே என்றாலும், அந்த நிலமே கடவுளாகவும் இருப்பதால் அந்த இடத்தை (இராமனைத் தவிர) வேறு யாரும் தமது சொத்தாக ஆக்கிக் கொள்ள முடியாது.


இறையாண்மை கொண்ட அரசாங்கத்துக்கே கூட அந்த நிலத்தை (கடவுளை) கையகப்படுத்தும் அதிகாரம் கிடையாது என்கிறது இந்தத் தீர்ப்பு.



கோயில் இடிக்கப்பட்டாலும் கோயிலின் கடவுள் தன்மை அகன்றுவிடுவதில்லை என்ற அடிப்படையிலும், ராம ஜென்மபூமியே கடவுளாக இருப்பதாலும், மசூதியைக் கட்டிய பின்னர்கூட அந்த இடம் பாபருடைய சொத்தாகி விட்டதாகக் கருத முடியாது; அது இராமனுடைய சொத்தாகவே இருக்கிறது என்று விளக்கமளிக்கிறது இத்தீர்ப்பு. மேலும் உரிமையியல் சட்டப்படி இந்துக் கடவுள் நிரந்தர மைனர் என்று கருதப்படுவதால், மைனரின் சொத்தை எதிர் அனுபோகத்தின் மூலம் (adverse possession) பிறர் கைப்பறிக் கொள்வது செல்லத்தக்கதல்ல என்று, உரிமையியல் சட்டத்தின் அடிப்படையிலும் இதற்கு விளக்கமளிக்கிறது அலகாபாத் தீர்ப்பு.

அந்த இடத்தில் ஒரு மசூதி இருந்தது என்ற உண்மையையே நிராகரிக்கும் இந்த வாதத்துக்கும், பக்தனின் மத நம்பிக்கை வழியாக கடவுள் தன்னுடைய சொத்துரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் ஏற்பாட்டுக்கும் அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவுதான் அடித்தளமாக இருக்கிறது.

இந்து மதவெறி பாசிஸ்டுகளால் இடிக்கப்படும் பாபர் மசூதி
இராம ஜென்மபூமி புனிதம் என்றால், மசூதி புனிதமில்லையா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா?


எதார்த்தமாக சிந்திக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் எழக்கூடிய நியாயமான கேள்வி இது. எல்லாக் குடிமக்களுக்கும் சமமான மத உரிமை இருப்பதாக நாம் கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால் நமது அரசியல் சட்டம் அவ்வாறு கூறவில்லை. மதம் என்பது ஒரு தனிமனிதனின் நம்பிக்கை சார்ந்த விசயம் மட்டுமே என்று வரையறுக்கப்படும் இடத்தில்தான் இந்த உரிமை சமமானதாக இருக்க முடியும். நமது அரசியல் சட்டம் மதநிறுவனங்களின் உரிமையையும் அங்கீகரிப்பதால், தனிநபரின் மத உரிமை என்பது நிறுவனத்தின் உரிமைக்கு உட்பட்டதாகிறது.

மத உரிமைகளைப் பொருத்தவரை “ஒவ்வொருவருக்கும் அவரவர் மதக் கோட்பாட்டுக்கு ஏற்ப” என்றுதான் அரசியல் சட்டத்தின் பிரிவு 25 கூறுகிறது. இந்த அடிப்படையில்தான் இந்து மதத்தில் பார்ப்பனரல்லாதாரும், பெண்களும் அர்ச்சகராக முடியாமல் தடுக்கும் ஆகமவிதிகளும், இசுலாமிய ஆண்களுக்கு நிகரான உரிமைகளைப் பெண்களுக்கு மறுக்கும் ஷரியத் சட்டமும் சட்டப்பிரிவு 25இனால் நியாயப்படுத்தப் படுகின்றன.

ஒரு மதத்தின் உறுப்பினர்களுக்குள் ஏற்றத்தாழ்வை அனுமதிக்கும் இந்த சட்டப்பிரிவுதான், இரு வேறு மதத்தினருக்கு இடையிலான உரிமையிலும் ஏற்றத்தாழ்வைக் கொண்டுவருகிறது. இந்திய விமானப்படையில் பணியாற்றும் சீக்கியர்கள் தாடி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதைப் போல, தன்னையும் அனுமதிக்க வேண்டும் என்ற ஒரு முஸ்லிம் விமானப்படை அதிகாரி தொடுத்த வழக்கை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஒரு சீக்கியர் தாடி வைத்துக் கொள்வது சீக்கிய மதக் கோட்பாடுகளின் படி அத்தியாவசியமானது என்றும், ஆனால், ஒரு முஸ்லீமுக்கு தாடி அத்தியாவசியம் என்று இசுலாமிய மதக் கோட்பாடுகள் கூறவில்லை என்றும் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

‘கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம், குறிப்பிட்ட இடம் இராமன் பிறந்த இடம்’ என்ற நம்பிக்கைகள் இந்து சமூகத்தின் புனிதமான, புராதனமான, அத்தியாவசியமான நம்பிக்கைகள் என்று அங்கீகரிக்கும் அலகாபாத் தீர்ப்பு, “இசுலாமியக் கோட்பாடுகளின் படியே மசூதி என்பது புனிதமானதோ, இறைவனின் இருப்பிடமோ இல்லை” என்றும் விளக்கம் கூறுகிறது. ‘தொழுகை நடத்துவதற்கான ஒரு இடம்’ என்பதற்கு மேல் மசூதிக்கு மதம் சார்ந்த புனிதத்தன்மை எதுவும் கிடையாது என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றமும் (இஸ்மாயில் பரூக்கி வழக்கு) இது குறித்து தீர்ப்பளித்துள்ளது.

இன்னும் ஒரு படி மேலே போய், இசுலாமியக் கோட்பாடுகளின் படியே ஒரு மசூதிக்குரிய இலக்கணங்கள் பாபர் மசூதிக்கு இல்லை என்பதை தனது தீர்ப்பில் விளக்குகிறார் நீதிபதி சர்மா. தனிநபரின் நம்பிக்கை, வழிபாட்டு உரிமை ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மதக் கோட்பாடுகளை முன்நிறுத்தும் இந்த அணுகுமுறைதான் அரசியல் சட்டப்பிரிவு 25 இன் சாரமாகவும் இருக்கிறது.

1949 இல் திருட்டுத்தனமாக ராமன் சிலை வைக்கப்பட்டதா இல்லையா? 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதா இல்லையா? இவை குறித்து தீர்ப்பு என்ன கூறுகிறது?
திருட்டுத்தனமாக சிலை வைக்கப்பட்டதை மூன்று நீதிபதிகளும் ஏற்கின்றனர். ஆனால் அது பற்றி தீர்ப்பு கருத்து எதுவும் கூறவில்லை. ஒரு வேளை சிலை வைக்கப்பட்டிராவிட்டாலும், இராமஜென்மபூமி என்ற அடிப்படையில், அந்த இடமே கடவுள்தான் என்பதே பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து. மசூதிக்குள் சிலை வைக்கப்பட்டதன் காரணமாக, சிலை வணக்கத்தை மறுக்கும் முஸ்லிம்கள் அங்கே தொழுகை நடத்தவில்லை. அதே நேரத்தில் அங்கே பூசைநடத்த நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. தொழுகை நடத்தவில்லை என்பதை, முஸ்லீம்களது அனுபோகத்தில் மசூதி இல்லை என்பதற்கான சான்றாக நீதிமன்றம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

1992 மசூதி இடிப்பைப் பற்றி இத்தீர்ப்பு எதுவுமே கூறவில்லை. மசூதி என்பது முஸ்லிம் மதத்தைப் பொருத்தவரை புனிதமான இடம் என்று கருதப்படுவதில்லை என்பதால், பாபர் மசூதி இடிப்பு என்பதை ஒரு வழிபாட்டுத் தலத்தை இடித்ததாக சித்தரிக்க முடியாது என்றும், சட்டவிரோதமாக ஏதோ ஒருகட்டிடம் இடிக்கப்பட்டது என்பதற்கு மேல் டிசம்பர் 6ஆம் தேதி நிகழ்வில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும், இஸ்மாயில் பரூக்கி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காட்டி சுப்பிரமணியசாமி கருத்து கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அலகாபாத் தீர்ப்பும் இந்த கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கிறது.

1949 சிலை வைப்பும், 1992 மசூதி இடிப்பும் குற்றச்செயல்கள். குற்றத்தில் பிறந்தது எப்படி கோயில் ஆக முடியும், புனிதமானதாக முடியும்?

சட்டப்படி குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகள், மத ரீதியில் புனிதமாக்கப்பட்டிருக்கின்றன. அவை மத உரிமைகளாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. பால்ய விவாகம் என்பது சட்டப்படி குற்றம். ஆனால் பால்ய விவாகம் நடந்து முடிந்து விட்டால், அதனை நடத்தி வைத்தவர்களைத் தண்டிக்க முடியுமே அன்றி, அந்தத் திருமணம் செல்லாது என்று ஆகிவிடாது. இதுதான் சட்டத்தின் நிலை.

அதே போல, மசூதியை இடித்ததும், திருட்டுத்தனமாக சிலையை வைத்ததும் குற்ற நடவடிக்கைகளே என்றபோதிலும், அவ்வாறு வைக்கப்பட்ட சிலை புனிதமற்றது ஆகிவிடுவதில்லை. பக்தர்களும் வழிபாட்டு உரிமையை இழந்து விடுவதில்லை. சட்டவிரோதமானவை எனினும், சட்டப்பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையால் இந்த குற்றங்கள் புனிதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தொகுத்துக் கூறினால்,
1992 மசூதி இடிப்பு என்பது இந்து பாசிஸ்டுகள் நிகழ்த்திய ஒரு கிரிமினல் நடவடிக்கை. தற்போதைய தீர்ப்பு அந்த மசூதி இடிப்பை சட்டரீதியாக நியாயப்படுத்துகிறது. ஒருவேளை 1992இல் மசூதி இடிக்கப்பட்டிராவிட்டால், தற்போதைய தீர்ப்பை அமல்படுத்துவதற்காக மசூதியை இடிக்கச்சொல்லி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்திரவிட்டிருக்குமா என்றுகூட தீர்ப்பை விமரிசிக்கும் சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அரசியல் சட்டப்பிரிவு 25 இந்து பாசிஸ்டுகளின் கருத்தை அரசியல் ரீதியாக வழிமொழிகிறது. 1949இல் திருட்டு சிலைக்கு வழிபாடு நடத்த அனுமதித்தது முதல், 1992 டிசம்பர் 6 அன்று பஜனை பாட உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி வரையில் அனைத்தும் சட்டப்பிரிவு 25ந்தால்தான் நியாயப்படுத்தப்படுகின்றன.

வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், இந்து பாசிஸ்டுகள் கடப்பாரை ஏந்தும் உரிமையை வழிபாட்டுரிமை என்ற பெயரில் உத்திரவாதப்படுத்தியது சட்டப்பிரிவு 25.


தற்போது மசூதி இடிப்பை நியாயப்படுத்தியிருப்பதும் சட்டப்பிரிவு 25 தான். இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளியில் நிகழ்ந்த சம்பவம்தான் மசூதி இடிப்பு.
எனவே, இனி ஒரு மசூதி இடிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், மசூதி இடிப்பின் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமானால், அலகாபாத் தீர்ப்பை முறியடிக்க வேண்டுமானால், பார்ப்பனியத்தையும், பார்ப்பன பாசிசத்தையும், எல்லா வகையான மதப் பிற்போக்குகளையும் பாதுகாத்து நிற்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26ஐ நாம் இடித்துத் தள்ள வேண்டும்.


தற்போதைய அரசியல் சட்டத்தின் வரம்புக்குள் நின்று பார்ப்பனியத்தையோ, பார்ப்பன பாசிசத்தையோ ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சில அம்சங்களில் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஆனால் பார்ப்பனியம் மற்றும் மதப்பிற்போக்கின் ஆன்மாவைப் பாதுகாக்கும் கவசங்களாகவே மேற்கூறிய இரு சட்டப்பிரிவுகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.


அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு அதனை இன்னொருமுறை நிரூபித்திருக்கிறது. இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற உண்மையை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பையும் அளித்திருக்கிறது.



நன்றி: வினவு

Monday, January 3, 2011

பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கை

அயோத்தி பயணம் மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய பேராசிரியர் அ.மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு), கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) ஆகியோர் இன்று (02.11.2010), மாலை 4.00 மணியளவில், சென்னையிலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளார்களைச் சந்தித்தனர். அப்போது பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை குறித்த நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கையை வெளியிட்டனர்.

அதன் முழு விபரம் இங்கே அழுத்தவும்