Thursday, March 18, 2010

மோடியை பின் தொடரும் நீதியின் நிழல்!



2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துள்ளத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், நெருப்பிலிட்டு கொளுத்தியும் கொல்லப்பட்டனர்.

கோத்ராவில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தை ஒரு சதியாக மாற்றி முஸ்லிம்களின் மீது பழிபோட்டு சமூக விரோதிகள் இந்தக்காரியத்தை செய்து முடித்தனர். கோத்ரா விபத்தை முஸ்லிம்களின் சதி என நிரூபிக்க முடியாமல் கெடுமதி படைத்த சங்பரிவார் “சர்மதி எக்ஸ்பிரசை எரிக்க நான் தான் பெட்ரோல் சப்ளை செய்தேன்” என ஒரு முஸ்லிம் இளைஞரை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்தது, உள்ளிட்ட படுபயங்கர சதித்திட்டங்களை இரு ஆண்டுகளுக்கு முன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்தியது.
அத்தோடு தீவிர ஹிந்துத்துவாதிகள் போல் வேடமிட்டு சட்டைபட்டன் அளவே உள்ள துல்லிய கேமராவோடு குஜராத் இனப்படுகொலையாளர்களை ரகசியமாக படம்பிடித்த தெஹல்கா செய்தியாளர்கள் வெளியிட்ட செய்திகள் உலகையே உலுக்கியது.

கோத்ரா ரயில் விபத்து, விபத்தாகவே அறியப்பட்ட சில மணி நேரத்தில் மோடி வந்து பார்வையிட்டபின் அது திட்டமிட்ட சதியாக மாற்றப்பட்டதும். உங்களுக்கு மூன்று நாள் மட்டும் தருகிறேன் இதற்குள் நினைத்ததை சாதித்துக் கொள்ளுங்கள் என மோடியே வன்முறையாளர்களுக்கு முழு ஆதரவை வழங்கியதும் விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள் அந்த கொடூரச்செயல் குறித்து சிறிதும் மன உறுத்தலின்றி வெறித்தனமாகக் கூறியதையும் இந்த உலகம் மறக்க முடியாதது.

ஏனென்று கேட்பார் யாருமற்ற நிலையில் முஸ்லிம்களின் அவலநிலை நீடித்தது.

முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்துப் பார்த்தோம் என்றான் ஒரு வெறிநாய்.

பள்ளிவாசல்களை பெட்ரோல் டாங்கர்களால் தரை மட்டமாக்கி னோம் என்றான் ஒரு மதவெறி மிருகம்.

நாங்கள் இங்கே ஆயுதத் தொழிற்சாலையே உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றான் ஒரு மனிதப்பதர்.

குறிப்பிட்ட நாளில் பயன்படுத்துவதற்காக பஞ்சாப்பிலிருந்து இரண்டு லாரிகள் நிறைய வாள்களை வரவழைத்தோம் என்றான் கோழை ரத்தம் ஓடும் ஓர் ஈனநாய்.

கடுமையாக தாக்கி படுகாயமடைந்ததோடு உயிருக்கு போராடிய அப்பாவிகளை உயிரோடு சாக்கடையில் போட்டு மூடிய கொடூரமும்.
கை கூப்பி என்னை கொன்று விடாதீர்கள் என கதறிய இளைஞர் அன்சாரியின் கோலமும் யார்தான் மறக்க முடியும்.

தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் மாளிகைக்குள் தஞ்சமடைந்த ஏழை மக்கள் உள்ளிட்ட 72 பேரையும் இரக்கமின்றி காவல்துறை உதவியுடன் கொன்று குவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தன் வீட்டில் அடைக்கலம் தேடி வந்த அப்பாவிகளைக் காப்பாற்ற முதியவர் இஹ்சன் ஜாஃப்ரி ஒவ்வொருவரிடம் தொலை பேசியில் கெஞ்சினார். காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், ஏன் அரசியல் தலைவர்களைக் கூட தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உதவி கோரினார், கெஞ்சினார், கதறினார் முதலமைச்சர் மோடியை கூட தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உயிர்களைக்காப்பாற்றக் கோரி கெஞ்சியதாகவும் தற்போதைய செய்திகள் வெளிவந்துள்ளன.

எத்தனைக்கெஞ்சியும், கதறியும் ஒரு நன்மையும் விளையவில்லை. இஹ்சன் ஜாஃப்ரி உள்பட 72 பேர் துள்ளத்துடிக்க கொல்லப்பட்டனர். முதியவர் ஜாஃப்ரி துண்டு துண்டாகக் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது ஆணுறுப்பையும் வெட்டிச்சிதைத்து நெருப்பிலிட்டு கொளுத்தினர். இஹ் சான் ஜாஃப்ரி வாழ்ந்த குல்பர்க் சொஸைட்டி பங்களா மயான அமைதி குடிகொண்ட சாம்பல்மேடாக மாறி விட்டது.

குஜராத் இனப்படுகொலைகளில் குறிப்பாக இஹ்சான் ஜாஃப்ரி கொல்லப்பட்ட குல்பர்க் படுகொலைகளில் மோடியின் நேரடிசதி இருப்பதாகவும் மோடியின் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்திய தண்டனைச்சட்டம் 120B 114r/w 302 IPC மற்றும் தவறாக தகவல்களை உருவாக்கி வழங்குதல் (177IPC) தவறான அறிக்கைகள், தவறான ஆதாரங்கள் கொடுத்தல் (199 IPC) குற்றம் இழைத்தவர்கள் குறித்த தவறான தகவல்களை வழங்குதல் (203 IPC), வழிபாட்டுத் தலங்களை சிதைத்தது தொடர்பான குற்றச் செயல் (295 IPC) உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி உள்ளிட்ட 62 பேர் மீதும் சுமத்தப்பட்டன.

2002 பிப்ரவரி 27 ஆம் தேதி தலைநகரில் மோடி தலைமையில் கூடிய உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் படுகொலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக உத்தரவிடப் பட்டதை முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் 2005&ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி தனது பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டார். இந்த பிரமாண வாக்குமூலம் உள் ளிட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஜாகியா ஜாஃப்ரி தனது 100 பக்க குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்துள்ளார்.

அந்த குற்றச்சாட்டுப்பட்டியலில் ஜாகியா ஜாஃப்ரி விடுத்திருக்கும் வினாக்கள் அனைத்தும் எரிமலை ரகத்தைச் சேர்ந்தவை.

கோத்ரா ரெயில் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உண்மை. அது மட்டுமின்றி பலியானவர்களின் சிலரின் உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருந்தும் எல்லா பிணங்களையும் வைத்து அகமதாபாத்தில் வெறியூட்டும் ஊர்வலம் நடத்தியது ஏன்? உள்ளிட்ட முக்கிய வினாக்களை ஜாக்கியா ஜாஃப்ரி தனது குற்றச்சாட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

2006 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் மோடி மீதான குற்றச்சாட்டுக்களை மோடியின் வீட்டுக்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஜாகியா ஜாஃப்ரி கோரினார். ஆனால் மோடியின் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்ய மறுத்தது.
மோடி, மீதான காவல்துறையின் புறக்கணிப்பைக் கண்டு சற்றும் அஞ்சாமல் ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றம் சென்றார். தனது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள், அரிஜித் பசாயத் மற்றும் ஏ.கே.கங்குலி இருவர் கொண்ட பெஞ்ச் ஜாகியாவின் கோரிக்கைகள் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்தது. இக்குழு மூன்று மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு (ஷிமிஜி) தனது விசாரணையின் முக்கியப் பகுதியாக குஜராத் முதல்வர் மோடியை விசாரிக்க அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு கொடுத்திருக்கும் அழைப்பாணையை ஏற்று மோடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையின் முன்பு நேர் நிற்பாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

குஜராத் இனப்படுகொலையின் சூத்ரதாரியே மோடி தான் என மனித உரிமை ஆர்வலர்கள் பல்வேறு மட்டங்களிலும் போராட்டக்குரல் எழுப்பியபடி இருப்பினும் மோடி நல்லவர்போல் வேடமிட்டு தருக்குடன் நடமாடினார்.
மோடி ரொம்ப நல்லவர் என ஊடகங்கள் பல (தமிழ் நாட்டின் சில பத்திரிக்கைகள் உள்பட) வலிந்து பொய்ப்பிரச்சாரத்தை பரப்பின.
இருப்பினும் மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையினை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மோடியை தங்கள் நாட்டின் உள்ளே நுழைய அனுமதி மறுத்தன.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு மோடியை நேரில் ஆஜராக அழைப்பாணை விடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மோடி சிறப்பு புலனாய்வுக்குழு முன்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அது ஆணையிட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழுவால் சம்மன் அனுப்பப்பட்ட மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் வலுத்து வருகிறது.
இந்தியா விடுதலைப் பெற்று 62 ஆண்டுகளாகியும் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு ஒரு முதலமைச்சருக்கு இனப்படுகொலைக் குற்றஞ்சாட்டி சம்மன் அனுப்பப்பட்ட நிகழ்வு இதுவே முதல் முறை. எனவே மோடி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ்திவாரி தெரிவித்தார்.

மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மோடி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் வலுத்து வருகிறது.

-apuusaalih
Thanks to TMMK

Monday, March 15, 2010

தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது!


இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் உலகமெங்கும் ஊடகத் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் அப்பொறுப்பை எடுத்துக் கொண்ட முதல் பத்திரிகை என்ற பெருமை தினமலரையே சாரும். முஸ்லிம் சமூகத்தை தனது ஊடகத்தின் மூலம் தனிமைப்படுத்த முயன்ற முன்னோடி பத்திரிகை தினமலர். தினமலர் முஸ்லிம்களுக்கு நண்பனா? பகைவனா? விடியோ காணவும்.

Monday, March 8, 2010

குஜராத்திலிருந்து முஸ்லிம்களை துடைத்தெறிய முயலும் மோடி!


குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடியை பயங்கரவாத முதலமைச்சர் என்றே அழைக்கின்றனர். இவர் தலைமையில் அரசு அமைந்த நாள் முதல், குஜராத்தில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கெல்லாம் வசித்து வருகிறார்கள் என்ற கணக்கெடுப்பை எடுத்து வருகிறார். இதற்கு முன்னர் 1999 ல் இவரது கணக்கெடுப்பை உயர்நீதி மன்றம் தடுத்து நிறுத்தியது. சட்டத்தை மீறுவது என்பது இந்துத்துவவாதிகளுக்கு வழமையான விடயம் என்பதால் இப்போது மீண்டும் துவங்கி விட்டார்.


இப்போது, முஸ்லிம்கள் எப்படி வாழ்கிறார்கள்? எங்கெல்லாம் பரவி வாழ்கிறார்கள் என்று கண்டறிய ஒரு விசாரணை கமிஷன் அமைத்து இருக்கிறார். இதேப் போல் மற்றொரு சிறுபான்மையினமாகிய கிறிஸ்தவர்களின் கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. இதனை 1949 ம் ஆண்டிலிருந்து துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த கணக்கெடுப்புகளின் நோக்கம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இல்லாத குஜராத்தை உருவாக்குவதே. மேலும் முஸ்லிம்களின் பொருளாதர நிலை குறித்து ஆய்வு செய்யவும் மோடி பணித்துள்ளார். நிலத்தை வாங்கி விற்பவர்களின் கூட்டமைப்பு கூட, முஸ்லிம்களுக்கு நிலத்தை விற்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இதுபோல அரசியல் சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லாமல் போனது ஏன்? என்று தெரியவில்லை. குஜராத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்களையும் கணக்கெடுக்கவும் மோடி அரசு தவறவில்லை.


இதற்காக மோடி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சேத்னா என்பவரை நியமித்துள்ளார். இந்த சேத்னா, 2004 ல் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை தீ வைத்து கொளுத்திய 21 பேரை ஒட்டு மொத்தமாக விடுதலை செய்தவர்.


குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜோஹ்புராவில் எந்த அடிப்படை வசதியும் செய்திடாமல் வதைத்து வருகிறார் மோடி. இந்துத்துவா சிந்தனையின் சோதனைக் களம் என்று வருணிக்கப்படும் காந்தி மண் காவிப் புழுதியால் மறைக்கப்பட்டு வருகிறது. குஜராத் முஸ்லிம்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் சூழ்நிலையில், தங்கள் இசுலாமிய அடையாளங்களை மறைத்து இந்து பெயர்களுடன் ஜீவித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். மேலும் சங் பரிவார்கள் ஊடகங்களில், குஜராத் சிறந்த நிர்வாகியால் ஆளப்படுவதாக பீலா விடுகின்றனர். ஆனால் உண்மை நிலை அதுவல்ல.


ஆதாரம். தி சண்டே இண்டியன்


Tuesday, March 2, 2010

அமெரிக்கா ஏற்படுத்தும் செயற்கை பூகம்பங்கள்!


ஹைதியில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை ரஷ்யாவின் கடற்படை ஆய்வு நிறுவனம், அமெரிக்காவின் தரப்பிலிருந்து எந்தவொரு நாட்டிலும் செயற்கையாகப் பூகம்பம் உண்டாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட நில நடுக்க ஆயுதம் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விளைவுகள் என்று வருணித்துள்ளது. அமெரிக்காவின் இந்நவீன ஆயுதத்தை ஈரானுக்கு எதிராக பயன்படுத்த முடியும். இத்தகைய ஆயுதத்தின் சோதனைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.

நில நடுக்க ஆயுதச் சோதனைப் பயன்பாட்டின் போது கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவாக பக்கத்து நாடான ஹைதியில் பெரும் விளைவுகளை உண்டாக்கிய பூகம்பம் ஏற்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலி கொடுத்த ஹைதியின் தலை நகரை தற்போது அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய ராணுவம் சுற்றி வளைத்திருக்கிறது. ஹைதியின் தலை நகர் போர்ட் அவ்பரன்ஸ் தெருக்களில் ராணுவத்தின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.

ரஷ்ய செய்தி நிறுவனத்தின்படி ரஷ்யாவின் கடற்படை வடக்குப்பிரிவு, பிரதமர் புதினுக்கு கொடுத்த ரகசியத் தகவலில் சில நாட்களுக்கு முன்பு ஹைதியில் ஏற்பட்ட பூகம்பம் அமெரிக்காவின் கடற்படை சோதித்து வந்த ஆயுதம், கட்டுப்பாட்டை மீறியதால் ஏற்பட்டது என்று கூறியுள்ளது. கேதர் நியூஸ் என்ற நிறுவனம் தொகுத்த ஆய்வறிக்கையில் ரஷ்யக் கடற்படை விஞ்ஞானிகளின் மேற்கோள்காட்டி சொல்லப்பட்டுள்ள செய்தியில் ரஷ்யாவின் வடக்கு கடற்படை பிரிவு 2008 ம் ஆண்டு கரீபியன் கடலில் அமெரிக்கக் கடற்படையின் சந்தேகமான செயல்பாடுகளை கண்காணித்து வந்துள்ளது. அப்போது அமெரிக்கா ஏதோ ஒரு முக்கிய ஆயுதத்தைச் சோதிப்பதற்காக இங்கு முகாமிட்டுள்ளது என்ற எண்ணம் ரஷ்யாவின் விஞ்ஞானிகளுக்கு உறுதியானது.

ரஷ்யாவின் கடற்படை விஞ்ஞானிகள் தொடர்ந்து அமெரிக்காவின் செயல்பாடுகளை கண்காணித்து வந்துள்ளனர். 1950 ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட கடற்படை பிரிவை மீண்டும் கடற்படையுடன் சேர்த்துக் கொண்ட அமெரிக்காவின் செயல்பாடுகள் ரஷ்யாவின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

கேதர் நியூஸ் தகவலின்படி கடந்த காலத்தில் ஈரானை இதே ஆயுதம் கொண்டு தாக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது. திசம்பர் 1978 ல் அமெரிக்க ஆதரவு ஷா மன்னர் ஈரானை ஆண்டுக்கொண்டிருந்தார். அவரை வீழ்த்தவே ரஷ்யா முயன்றது. வல்லரசு நாடுகளின் இவ்வகையான ஆயுதங்களால் சில நாடுகள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வந்துள்ளன.
கடந்த காலத்தில் வல்லரசாக விளங்கிய ரஷ்யா, அமெரிக்க ஆதரவு ஷா அரசை வீழ்த்துவதற்காக ஈரானின் எல்லைப்பகுதியில் பத்து மெகா டன் எடை கொண்ட குண்டை பூமியின் ஆழத்தில் வெடிக்கச்செய்தது. பால்ட் லயின் ஒன்று ஈரானின் பக்கம் போய்க்கொண்டிருந்தது. நவீன தொழில் நுட்பத்தின் மூலம் வெடிப்பின் அதிர்ச்சி திசையினை ஈரானின் பக்கம் திருப்பி விட்டார்கள். இதன் காரணமாக அமுங்கிக்கிடந்த பால்ட் லயின் செயல்பட்டு 7.4 அளவு பூகம்ப அதிர்வுகள் ஏற்பட்டன.

ரஷ்யாவின் இச்செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு ரஷ்ய ஆதரவு யூகோஸ்லாவியாவில் செயற்கை பூகம்பம் ஏற்படுத்தப்பட்டது. 7.2 அளவிற்கு அதிர்வுகள் ஏற்பட்டன. ரஷ்ய செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி ரஷ்யா 1970ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது. பூமிக்கு அடியில் அணு ஆயுத வெடிப்பின் மூலமாக செயற்கை பூகம்பத்தை நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக அமெரிக்கா இதனைச் செய்து வருகிறது.

புதிய தகவல்களின்படி அமெரிக்கா இத்தொடரில் "டெஸ்லா எலக்ட்ரோ மேக்னடிக் பல்ஸ்" ,பிளாஸ்மா, சோனிக் போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ரஷ்ய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி இம்மூன்று தொழில் நுட்பங்களில் ஒன்றின் மூலம் மார்ச் 2002 ஆம் ஆண்டு ஆப்கானிலும் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கு 7.2 அளவிற்கு பூகம்பம் ஏற்பட்டது.

ஆப்கன் மலைகளில் பதுங்கியிருக்கும் போராளிகளைக் கொல்லுவதற்காகவே அமெரிக்கா இத்தகைய ட்வைஸை பயன்படுத்துகிறது. இதன் விளைவாக இருபதாயிரம் அப்பாவி மக்கள் வீடிழந்தனர். சமீபத்தில் ஹைதியில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு காரணம் அமெரிக்காவின் டெஸ்லா டெக்னாலஜியின் மூலம் கரீபியன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தோல்வியின் வெளிப்பாடு தான். இத்தகைய ட்வைஸ் 1995 ஆம் ஆண்டு ஜப்பானிலும் பயன்படுத்தப்பட்டது. அதன் அளவு 6.8 ஆக இருந்தது.

அமெரிக்கா செய்து வரும் இத்தகைய சோதனைகளைப் பற்றி அமெரிக்கர்களுக்கு முன்பே தெரியும்.ஹைதியின் தலை நகரம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதால் அமெரிக்காவின் ஹை கமான்டர் பூகம்பத்தின் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தென்பகுதி கமாண்டரின் டெபுடி கமாண்டர் ஜெனரல் P.K. கீன் என்பவரை தீவின் பகுதியில் பணியமர்த்திவிட்டார். ஆச்சரியமான செய்தி என்னவெனில், ஜெனரல் கீன் அமெரிக்க ராணுவத்தினருடன் மீட்பு பணிகளுக்கான பெரியளவில் சாதனங்களை எடுத்துக் கொண்டு பணியமர்த்தப்பட்ட இடத்தின் அருகில் சென்று விட்டார். இப்படைத் தான் பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரத்திற்குப் பின் ஹைதியின் விமானத்தளம் மற்றும் துறைமுகத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இவர்கள் பூகம்பத்தை அளக்கும் கருவிகளையும் எடுத்து சென்று பல பகுதிகளில் பரிசோதித்துப் பார்த்துள்ளார்கள். இதற்கு முன் அமெரிக்க கடற்படை கலிபோர்னியாவின் சுற்றுப்புறத்திலும் இது போன்ற சோதனைகளைச் செய்து பார்த்துள்ளது. இதன் தாக்கம் 6.5 என்ற அளவிற்கு இருந்தது. எனினும் இதில் யாரும் கொல்லப்படவில்லை.
இதைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க ... கலையகம்
நன்றி ; சமரசம்