Tuesday, April 28, 2009

தும்மல், ஒவ்வாமை - சில மருத்துவக் குறிப்புகள்

டாக்டர். எம். ரமணிராஜ்
[தும்மலை வரும்முன் காக்கமுடியாது. ஆனால் தும்மலால் ஏற்படும் பிரச்னைகளை வரும்முன் காக்கலாம்.]



தும்மல் என்பது ஒரு நோயல்ல. அது இறைவன் நமக்களித்த ஒரு அருட்கொடை. ஒரு பென்சிலைக் கொண்டு நம் கையை ஒருவர் குத்த வரும்போது குத்த வருகிறார்... கையை எடு என்று கட்டளையிடுகிறது நம் மூளை. அதுபோலத்தான் அந்நியப் பொருட்கள் அதாவது, நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள், நமது உடலுக்குள் குறிப்பாக, மூக்கின் வழி செல்கையில், அதை உடனே உணர்ந்து சுதாரிக்கும் மூளை, அந்த அந்நிய வஸ்துவை வெளியேற்ற தும்மலை பிரசவிக்கிறது. இந்தத் தும்மலானது ஓரிரு முறை வந்தால் எந்தப் பிரச்னையுமில்லை. மாறாக அளவு கடக்கும்போதுதான் ஆபத்து உண்டாகிறது.



தும்மலின் எஜமானன் ஒவ்வாமை
நமது உடல்நிலைக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள் உள்ளே நுழைகையில் அதனை தெரியப்படுத்த மனித உடலில் இரு உறுப்புகள் தான் உதவுகின்றன. ஒன்று தோல் பகுதி. இன்னொன்று மூக்கு. அதிலும் தோலைக் காட்டிலும் மூக்கானது மிக நுட்பானது. தோல் உடலில் தடிப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒவ்வாமையை அறிவிக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம். ஒரு சில மாத்திரைகள் ஒத்துக்கொள்ளாதபோது உடலில் தடிப்பு ஏற்படுவது. அதேபோல் மூக்கானது ஒவ்வாமையை தெரியப்படுத்த மூளையின் உத்தரவுபடி தும்மலை உண்டாக்குகிறது.



ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு தும்மல் என்பதே பெரும்பாலும் வரக்கூடாது. தும்மல் வருகிறதென்றாலே அவர் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என்றே அர்த்தம் கொள்ளவேண்டும். ஒருவருக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் தும்மல் வரத் தொடங்குகிறது. சிலருக்கு குளிர்ந்த பொருட்கள் ஒத்துக்கொள்ளாது. இன்னும் சிலருக்கு பெட்ரோல் வாசனை, பூக்களின் மகரந்தத் துகள்கள், தூசி, வாகனப் புகை, நாய், பூனை போன்ற பிராணிகளின் முடி போன்றவை ஒத்துக்கொள்ளாது. இப்படிப்பட்ட ஒத்துக்கொள்ளாத பொருட்களை ஒருவர் நுகர நேருகிறபோது, தும்மலானது ஆரம்பித்துவிடுகிறது.



தும்மலை நிறுத்த வேண்டுமெனில்..
தும்மலை நிறுத்த வேண்டுமெனில் உடனடியாக அந்த ஒத்துக்கொள்ளாத பொருள், நம் உடலை அண்டாது பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு ஒவ்வாமை என்று வந்துவிட்டால், அதற்கு சரியான சிகிச்சை, அந்த ஒவ்வாமை பொருளை விட்டு அம்மனிதன் ஒதுங்கியிருத்தலே, மற்றபடி ஒவ்வாமைக்கு நிரந்தரத் தீர்வென்பது கிடையாது. ஆங்கில மருத்துவத்தில் என்றில்லை... வேறு எந்த மருத்துவ முறையிலுமே ஒவ்வாமைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பது அரிதான விஷயம். ஆனால் சமீப காலங்களில் மருத்துவர்கள் ஒவ்வாமைக்கு ஒரு புதிய வகை ட்ரீட்மெண்ட்டை அளித்து வருகிறார்கள். அது கிட்டத்தட்ட வாக்ஸ'ன் போடும் முறையை ஒத்ததுதான். அதாவது, ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணியை கண்டறிந்து அதையே குறைந்த Concentration அளவை அதிகரித்து. ஒவ்வாமைக்கு எதிரான முழு நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உண்டாக்குகிறார்கள். ஆனால், இந்த மருத்துவ முறை இதுவரை வெறும் 50 சதவிகித வெற்றியையே தந்திருக்கிறது என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.



தும்மலால் உண்டாகும் நோய்கள்தும்மலை அலட்சியப்படுத்தும் பட்சத்தில் அது பல்வேறு துன்பங்களுக்கு வழிவகுத்துவிடும். மெல்ல மெல்ல ஆரம்பித்து அதன் பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் செல்லும். முதலில் Allergic Rhinitis எனப்படும் பிரச்னை உண்டாகிறது. அதாவது, மூக்கின் உள்சவ்வுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, மூக்கானது முழுவதுமாக அடைத்துக்கொள்ளும் இதை கவனிக்காமல் விட்டால் அடுத்த நிலையான பாலிப் என்னும் சதை வளர்ச்சியில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.



இதையும் அலட்சியப்படுத்தும் பட்சத்தில் பூஞ்சைக் காளான் தொற்று (Fungal Sinusitis) அபாயம் ஏற்படும். இந்த நிலையை ஒரு நோயாளி எட்டிவிடும் பட்சத்தில் அவரின் உயிருக்கேகூட ஆபத்து நேரிடலாம். இந்தப் பூஞ்சைக் காளான் தொற்றானது மெல்ல மெல்ல பரவி, மூளையைத் தாக்கும் பேராபத்து உள்ளது அத்தோடு நிற்காமல் ப்ரோப்டோசிஸ் (Proptosis) எனப்படும் கண் வெளித்தள்ளும் நோயை ஏற்படுத்தும். இந்நிலையில் நோயாளியின் கண்கள் உள்ளிருந்து வெளித்தள்ளப்பட்டுவிடும். நினைத்தாலே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் மோசமான நிகழ்வு இது. பாதிப்பு அத்தோடு முடிகிறதாவென்றால் அதுதான் இல்லை. மூளையிலுள்ள மிக முக்கிய 12 நரம்புகள் பாதிக்கப்பட்டு மூளை நரம்பு செயலிழப்பு ஏற்படலாம். மேலும், மூளையில் கட்டி, சைனஸ் அறைகளில் வீக்கமேற்பட்டு சிழ் நிறைந்த கட்டி என... கவனிக்காமல் விடப்படும் தும்மலின் இன்னல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.



தும்மல் அடுத்தவருக்கு பரவுமா?
ஒருவருக்கு தும்மல் இருவகைகளில் ஏற்படலாம். ஒவ்வாமையினால் ஏற்படும் தும்மல், அடுத்தவரை தொற்றாது. தும்மும் நபர் தவிர, இந்த வகையால் பிறருக்கு பாதிப்பில்லை. ஆனால் கவனிக்காமல்விட்டால் பிரச்னைதான். ஆனால் ஜலதோஷம் போன்ற வைரஸால் உண்டாகும் நோய்களின்போது தும்மல் வரும் பட்சத்தில், அது அடுத்தவரை நிச்சயம் பாதிக்கும். ஆனால், இப்படி வைரஸால் உண்டான ஜலதோஷ தும்மலின் ஆயுட்காலம் வெறும் ஏழு நாட்களே. காரணம், ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸின் வாழ்நாள் வெறும் ஏழு நாட்கள் என்பதால்தான். அதனால் வைத்தியம் எடுத்துக்கொண்டாலும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் ஒரு வாரத்தில் தானாக அது சரியாகிவிடும்.



குழந்தைகளைத் தாக்கும் தும்மல்
சில குழந்தைகள் பிறந்த முதல் நாளிலிருந்தே தும்மத் தொடங்கிவிடுகின்றன. உடனே அம்மாவின் ஒவ்வாமை பிரச்னையால்தான் இவ்வாறு உண்டானது என்று கூறுவது தவறு. ஏனெனில் ஒவ்வாமை பரம்பரை நோயன்று, இயல்பாகவே அக்குழந்தைக்கு ஒவ்வாமை பிறக்கும்போதே இருந்திருக்கலாம். இப்படி பிறக்கும்போதே ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்தான் பின்னாட்களில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இவற்றையெல்லாம் தவிர்க்க குழந்தைகளை மிகக் கவனத்துடன் வளர்க்க வேண்டும். தும்மலை அலட்சியப்படுத்தாது ஆரம்ப நிலையிலேயே மருதூதுவர்களிடம் காட்டி, அவர்களின் எதிர்காலத்தை பிரச்னையில்லாததாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.



தும்மலுக்கான மருந்துகள்
பொதுவாக ஜலதோஷம் தொடர்பான வைரஸ் தும்மலுக்கு மருந்து எடுத்துக்கொண்டாலும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அது ஒரு வாரத்தில் குணமாகிவிடும். ஆனால், இன்னொரு வகையான ஒவ்வாமையால் ஏற்படும் தும்மலுக்குத்தான் பல நிலைகளில் வைத்தியம் பார்க்க வேண்டும். ஆரம்பகட்ட நோயாளிகளுக்கு ஆன்ட்டி அலர்ஜி மருந்துகளான அவில், செட்ரிசைன் (Cetrizine) போன்றவை அளிக்கப்படுகின்றன. அதுவே நோயாளி பாலிப் என்னும் நோய் நிலையை அடைந்திருந்தால் அவருக்கு ஸ்டீராய்டு மருந்துகளை சிபாரிசு செய்கிறோம். இதனால் சில பின் விளைவுகள் உண்டென்றாலும் இதனைக் காட்டிலும் சிறப்பான மருந்துகள் வேறில்லை. அதிலும் நோய் கட்டுப்படாத பட்சத்தில் ஒரே வழி அறுவை சிகிச்சைதான்.



வரும்முன் காக்க...
தும்மலை வரும்முனை காக்கமுடியாது. ஆனால் தும்மலால் ஏற்படும் பிரச்னைகளை வரும்முன் காக்கலாம். உதாரணமாக, ஒவ்வாமையால் ஏற்படும் தும்மலை, நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளைத் தவிர்ப்பதன் மூலம் தடுக்கலாம். இந்தத் தும்மலுக்கு நிரந்தரத் தீர்வே இல்லையா? என்று சிலர் கேட்கலாம். இதற்குப் பதிலாக, தீர்வு தேவையில்லை. என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. ஏனெனில், தும்மல் ஒரு நோயல்ல, நோயின் அறிகுறி மட்டுமே. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? அறிகுறி தெரிந்தால்தானே நோயை குணப்படுத்த முடியும்
நன்றி: கூடல்.காம்

Sunday, April 19, 2009

இளமைக்கு ஏங்கும் இந்திய அரசியல்..!


இந்தியாவில் ஓய்வூதியத்துக்கான வயதையே அடையாத ஒரு கூட்டத்தினர் இருக்கிறார்கள் எனில் அவர்கள் அரசியல்வாதிகள்தாம். ஐம்பது வயதைக் கடந்தவர்கள் கூட இளைஞர் அணித் தலைவராக வலம் வரும் அதிசயம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்கும்.


வாக்காளர்களில் 25 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் இளைஞர்கள்தாம் எனினும் அவர்களை ஆட்சி செய்பவர்கள் 80 வயதை கடந்தவர்கள். பட்டறிவும் பக்குவமும் நிறைந்த ஒரு ஆட்சி அமைய வேண்டுமெனில் முதியவர்கள் இல்லாமல் முடியுமா எனும் கேள்வியின் அடிப்படையில் இதற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது.


விரல் விட்டு எண்ணக்கூடிய சில இளம் தலைவர்களைத் தவிர்த்து விட்டுப்பார்த்தால் அடுத்த தேர்தலுக்குப் பிறகு வரக்கூடிய மக்கள் நாயகர்களில் பெரும்பாலோர் முதியவர்களே..! விரைவில் ஓய்வு பெரும் எண்ணம் எதுவும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை.


பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராய் தேர்தெடுக்கப்பட்ட போது அவருக்கு வயது 46. டோனி பிளேர் முதன் முறையாக இங்கிலாந்தின் பிரதமராய் பதவிப்பிரமாணம் எடுத்தபோது அவருக்கு வயது 43 தான்.


மாற்றத்துக்கான வாக்குறுதி அளித்து அமெரிக்க மக்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டுள்ள பாரக் ஹுசைன் ஒபாமாவின் வயது 47. ஆனால் இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருக்கின்ற இளைஞர்களின் விருப்பங்களையும் வளர்ச்சிக் கனவுகளையும் நிறைவேற்றப் போகின்றவர்கள் 70 வயதைக் கடந்த முதியவர்கள்.
72 வயதான ஜான் மெக்கெய்னைப் புறந்தள்ளி விட்டு ஓர் இளமைத் துடிப்புள்ள தலைவரைத் தேர்தெடுக்கும் வாய்ப்பு அமெரிக்க மக்களுக்கு இருந்தது. ஆனால் பாவம், இந்திய வாக்காளர்களுக்கு அந்த வாய்ப்பே இல்லை.


நம் நாட்டில் அரசியல் தலைவர்களில் 80 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் 70 வயதைக் கடந்தவர்கள். ஆனால் இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதத்தினர் 40 வயது குறைவானவர்கள்.


பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 76 வயது. குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு 74. துணைக் குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரிக்கும் அதே வயது தான். 84 வயதான கருணாநிதி தான் தமிழகத்தை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார். கேரள முதல்வர் அச்சுதானந்தனின் வயது 85.


மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களின் சராசரி வயது 66.9. உலகின் எந்த ஓர் இடத்திலும் இப்படி ஒரு வயோதிக ஆட்சி நடைமுறையில் இல்லை. காபினெட் அமைச்சர்களில் 12 பேர் எழுபதைக் கடந்தவர்கள். ஏழு பேர் 65 வயதைத் தாண்டியவர்கள். ஐம்பது வயதாகும் அமைச்சர்கள் மூன்றே பேர்கள் தானாம். 40 வயதான அன்புமணி ராமதாஸ் தான் அமைச்சரவையிலேயே "இளையவர்". மற்றோர் இளம் அமைச்சர் ஏ.ராஜா. வயது 45.


வயதான தலைமை என்பதில் கட்சி வேறுபாடு எதுவும் இல்லை. தேசிய ஜன நாயக கூட்டணியின் பிரதம வேட்பாளரான அத்வானி 81 வயதை எட்டிப்பிடித்து விட்டார்.


ஏராளமான உடல் நலப்பிரச்சனைகளுடனும், முதுமையின் பலவீனங்களுடனும் மனித வள மேம்பாட்டுத் துறையை நிர்வகித்து வருபவர் 78 வயதான அர்ஜுன் சிங். ஏதோ இப்போது தான் அரசியல் வாழ்க்கையை துவங்கியவர் போல களத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான 68 வயது சரத் பவார்.


மக்களவையின் 'தலைமை ஆசிரியர்' சோம்நாத் சட்டர்ஜி 79 வயதைக் கடந்து கொண்டிருக்கிறார்.


2014‍இல் பிரதமர் நாற்காலியில் அமரும் கனவுகளுடன் காத்திருக்கும் லாலு பிர்சாத் யாதவுக்கு வயது 60.


மேற்கு வங்கத்தில் 86 ஆம் வயதில் ஓய்வு பெற்ற ஜோதிபாசுவின் அரசியல் வாரிசான புத்ததேவ் பட்டாச்சாரியாவும் தம் குருவின் பாதையைத் தான் பின்பற்றிக்கொண்டிருக்கிறார். புத்ததேவுக்கு வயது 64.


94 வயதான ஜோதிபாசு தான் இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்.


71 வயதான யஷ்வந்த் சின்ஹா, 70 வயதான ஜஸ்வந்த் சிங், 74 வயதைக் கடந்து விட்ட டாக்டர். முரளி மனோகர் ஜோஷி முதலிய கிழட்டு கதாநாயகர்கள் தாம் தேசிய ஜன நாயக கூட்டணியின் பிரமுகர்கள்.
78 வயதான முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் உடல் நலமில்லாமல் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். ஆனாலும் தேர்தலில் நிற்க தயார் என்கிறார்.


ராஜ்நாத் சிங், சுஷ்மா சிவராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் 56 வயதைக் கடந்தவர்கள்.


முதுமை அடைந்து விட்டாலும் நல்ல உடல் நலத்துடன் காணப்படும் முலாயம் சிங் யாதவுக்கு 69 வயதாகிறது. உ.பி. யில் ஓரளவு இளமையான அரசியல் தலைவர் யார் என்று பார்த்தால் மாயாவதி, அமர்சிங் ஆகிய இருவர் மட்டுமே தேறுகிறார்கள்.

இந்தியாவில் இளம் வயதில் பிரதமர் ஆனவர் ராஜிவ் காந்தி. 1984 ல் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த போது அவருக்கு வயது நாற்பதே தான். இந்திரா காந்தி தமது 49 ம் வயதில் பிரதமர் ஆனார்.


மிகவும் வயது முதிர்ந்த பிரதமர் மொரார்ஜி தேசாய். அவர் பிரதமர் ஆகும் போது வயது 81. இன்றைக்கு அத்வானிக்கும் அதே வயது தான்.


ஐ.கே. குஜ்ரால் 78 வயதிலும் கரண்சிங் 77 வயதிலும் பிரதமர் ஆனார்கள்.முதல் தடவை பிரதமர் ஆன போது வாஜ்பாய்க்கு 72 வயது.


இந்தியப் பிரதமர்களின் சராசரி வயது 65.2. அதே சமயம் 1945 குப் பிறகு வந்த அமெரிக்க அதிபர்களின் சராசரி வயது 57.27.பிரிட்டீஷ் பிரதமர்களின் சராசரி வயது 58.16.


ராகுல் காந்தி, சச்சின் பைலட், வருண் காந்தி,மிலிந்த் தேவ்ரா, ஜோதி ராதித்யா சின்டியா, போன்ற இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அரசியல் துடிப்புடன் இருந்தாலும் அவர்கள் முன்னணிக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. நேரு குடும்பம் என்பதால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.


சுருக்கமாக சொன்னால்.. இந்திய அரசியலில் முதுமை கொடிக்கட்டிப் பறக்கிறது.
நன்றி: சமரசம்

Saturday, April 11, 2009

ஓரினச்சேர்க்கை: விரிவான மருத்துவ அலசல்.

ஓரினச்சேர்க்கை விரிவான மருத்துவ அலசல்
Dr.S.ஜீவராஜன் M.D.,D.V.,

ஓரினச்சேர்க்கை என்றால் என்ன ?ஆண், ஆணுடன் அல்லது பெண் பெண்ணுடன் உடல்உறவு வைத்துக் கொள்வது தான் ஓரினச்சேர்க்கை என்பர். இவர்களை ஆங்கிலததில் “கே” (Gay) என்பர். பெண் குணம் கொண்ட நபர்களும் ஆணாக பிறந்து தன்னை பெண்ணாக மாற்றி வாழும் “அலிகளும்” ஓரினச்சேர்கையில் ஈடுபடு கின்றனர். “அலிகள்” என்று சொல்லும் போது பலருக்கு ஆண்குறியும் (Penis) விரைப்பையும் (Scrotum) இருக்கும். தன் வாழ்க்கையை பெண்மாதிரி பாவித்துக் கொண்டு உடல்உறவுக்கு அழைத்து, ஆணிடம் தன் ஆசனவாய் வழியே தான் உடல்உறவு வைத்துக் கொள்கின்றனர்.

சில அரவாணிகள், டாக்டர்களிடம் சென்று கொடூரமாக தனது ஆண்குறியையும், விரைப்பையையும் முழுவதுமாக வெட்டி சிறுநீர் கழிக்க மட்டும் ஒரு சிறு இடம் விட்டு தைத்துக் கொள்வர். இதில் 10 அலிகளுக்கு 8 அலிகள், பிறப்பு உறுப்பு பகுதியில் சீழ்வைத்து, உடல்நலம் கெட்டு இறந்து விடுவார்கள். ஒரு சிலர் பிழைத்து “நான் முழுவதுமாக” பெண்ணாகவே மாறி விட்டேன் என்று தன்னை அழைத்துக் கொள்வார். அவர்களுக்கு முறையான பெண்குறி இருக்காது. அந்த அலி தனக்கு பெண்குறி இருப்பதுபோல் நடித்து தன் வாடிக்கைக்காரர்களுடன் உடல்உறவு கொள்ள அழைத்து, பின் தனது ஆசனவாய் (Vagina) வழியில்தான் உடல்உறவு வைத்துக் கொள்வார்.

இப்படி ஆண் ஆணுடன் உடல்உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு பால்வினை நோய்கள் பல, விருந்து வைத்து விடுகின்றன. அதன்மூலம் HIV என்ற எய்ட்ஸ் பங்காளியையும் வரவழைக்க உதவுகின்றன.

இந்த ஓரினச்சேர்க்கை எங்கு எவரிடத்தில் அதிகம் நடைபெறுகின்றது?
1. ஒரே இடத்தில் தங்கி வாழும் ஹோட்டல் சர்வர்கள்.
2. ஹாஸ்டலில் ஒரே அறையில் பலபேர் தங்கிப் படிக்கும் மாணவர்கள்.
3. ஒரே ரூமில் தங்கி வாழும் பஸ் டிரைவர்கள் மற்றும் வேலையாட்கள்.
4. பெண்கள் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பள்ளி கல்லூரி தோழிகள்.
5. நீண்ட தூரத்தில் ஒரே இடத்தில் தங்கி வாழும், மனைவியைப் பிரிந்து பணியாற்றும் காவலாளிகள், இராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள், ஆபீசர்கள், மருத்துவ பிரதிநிதிகள்.
6. ஒரே சிறையில் அடைபட்டு கிடக்கும் சிறைக்கைதிகள்.
7. மனைவி குழந்தை பெற்றுவிட்டால் இப்போது உடல்உறவு அவளுடன் கொள்ளக் கூடாது என்ற தப்பான எண்ணத்தில் தன்னுடன் ஆபீஸில் வேலைபார்க்கும் நண்பர்களுடன் உடல்உறவு வைத்துக் கொள்பவர்கள்.
8. ஆண் கலைஞர்கள் நடனம், நாட்டியம், டிஸ்கோ, பாட்டு என்று ஊர் ஊராய் சென்று ஒரே இடத்தில் தங்கி நிகழ்ச்சி நடத்துபவர்கள்.
9. பெரிய செல்வந்தார்கள் உயர் மட்டத்தில் வாழும் ஆண்கள், பார்ட்டி, டின்னர், சீட்டாட்ட ‘கிளப்பில்’ ஆடிவிட்டு அதன்பின் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நபர்கள் என இந்த ஓரினச்சேர்க்கை வட்டம் விரிவடைந்து வருகின்றது.

ஓரினச்சேர்க்கை இனத்தில இரண்டு வகை உண்டு.ஒன்று ஆசனவாயை உடல்உறவுக்கு கொடுப்பவர்கள். இவர்களை “பாசிவ் ஹோமோ (Pasive-Homo) என்பர்.இரண்டாவது வகை தன் உடல்உறவுக்கு தன் ஆண்குறியை செலுத்த மற்றவர் ஆசனவாயை பயன்படுத்துவர். இவரை “ஆக்டிவ் ஹோமோ (Active-homo) என்பர்.
இயற்கைக்கு மாறாக இப்படி ஒரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபர்கள் வழியாக உலகம் ஒரு நாசத்தை நோக்கி அதாவது எய்ட்ஸ் என்ற நரகத்தை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது.

1. சிபிலிஸ் என்ற கிரந்திநோய் (Syphillis) :
இந்த நோயை தன்னிடம் வைத்து இருக்கும் ஒரு ‘கே’ யுடன் அதாவது ஓரினச் சேர்க்கையில் வாழும் ஒரு ஆணுடன், வேறுஒருவன் உடல்உறவை வைத்துக் கொள்ளும் போது அவனது ஆசனவாயில் 10 முதல் 90 நாட்களில் இந்த நோய் புண்களாகத் தோன்றும் இந்த நோய்க்குரிய கிருமியின் பெயர் டிரப்னிமா பாலிடம் (Treponema Palidum). இது மிக்க கொடிய நஞ்சுக்குணம் கொண்டது.ஆசனவாயின் உட்புறத்திலும் ரெக்டம் (Rectum) என்ற குதப்பகுதியிலும், புண்கள் தோன்றி இருக்கும். அதனால் மலம் கழிக்கும்போது வலி, எரிச்சல், சீழுடன் கூடிய திரவம் அல்லது ரத்தமும் வடிய ஆரம்பிக்கும். 6 மாதம் வரை வைத்தியம் மேற்கொள்ளாவிட்டால், இந்த வியாதி ஆசனவாயில் ஓரப்பகுதியிலும் காண்டிலோமோலேட்டா (Condylomata) என்ற கொடிய வியாதியை தோற்றுவிக்கும்.
இது புற்கள் மாதிரி முளைத்து வளர்ந்து இருக்கும்.வாய்வழிப்புணர்ச்சி இருந்தால் வாயிலும் புண்கள் தோன்றும். அரை இடுக்குகளில் வலிக்காத நெரிகட்டிகள் தோன்றும்.முறையான வைத்தியம் பார்க்கா விட்டால் இரத்தம் மூலம் உடலின் மற்ற இடங்களுக்கும் பரவி தோல் முழுவதும் தட்டையான கொப்பளங்கள், பத்துக்கள் தோன்றும். தீராத தொல்லைகளை கொடுத்து பரம்பரைக்கும் நோயை நீடிக்க வைத்துவிடும்.
பெண்கள் :
ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட பெண்களுக்கும், இந்த சிபிலிஸ் நோய் வரும்.ஆண்களுக்கு வரும் தொல்லைகள்மாதிரி இவர்களுக்கும் தோன்றி தொல்லை கொடுக்கும்.

2. கோனாரியா என்ற வெட்டை நோய் :
ஓரினச்சேர்க்கை மூலம் ஒருவனுக்கு கோனோரியா (Gonorheae) என்ற வெட்டை நோய் வரும். இதனால் ஆசனவாய் சுற்றி எரிச்சல், அரிப்பு அத்துடன் மலப்பாதையில் சீழ் திரவம் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் மலப்பாதையில் சீழ் திரவம் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் மலம் வரும் பாதையில் கட்டிகள் தோன்றி மலப்பாதையை அடைத்து தொல்லை கொடுக்கும். ஆசனவாய் உளபகுதியை (Prostocopy) உருப்பெருக்கி கருவி கொண்டு சோதிக்கும் போது, மலக்குடல் பாதை சிவந்தும், புண்கள் தோன்றியும், புண்ணில் இருந்து சீழ் கோர்த்து இருப்பதும் தெரிய வரும். இரத்தமும் வடியும் நிலை இருக்கும். சீழ் திரவத்தை எடுத்து பரிசோதனை செய்யும்போது வெட்டை கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்படும். கல்சர் டெஸ்ட் செய்யும்போது இந்த நோய் இருப்பது உறுதிசெய்யப்படும். வாய் வழி புணர்ச்சி கொண்டவனுக்கு தொண்டையில் இக்கிருமி பரவி தொண்டையில் புண் ஏற்பட்டு எச்சில் முழுங்க முடியாமை ஏற்படும். இப்படி பல தொல்லைகள் ஓரினச்சேர்க் கையில் ஏற்படும்.
பெண்கள் :
இது மாதிரி ஓரினச்சேர்க்கை கொண்ட பெண்ணுக்கும் ஆசனவாய் பாதையில் இந்த வெட்டை நோய் தொற்றி தொல்லை கொடுக்கும். ஆசனவாய்ப்பகுதி களில் கட்டிகள் தோன்றும், வெள்ளைபடும். (Trichomonas Vaginalis) நோயும் வெள்ளைபடும் நோயும் சேர்ந்து அவளுக்கு மிக துன்பம் கொடுக்கும். இரத்தமும் மஞ்சள் நிறத்திரவமும் ஆசனவாய் வழியே வடிய ஆரம்பிக்கும். முறையான பரிசோதனை செய்து தகுந்த மருந்து கொடுத்து நோயை குணமாக்க வேண்டும்.

3. ஹெர்பிஸ் என்ற அக்கிக் கொப்பளங்கள் :ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட ஒரு Gay ஆசனவாயைச் சுற்றிலும், அதன் உட்புற பாதையிலும் புண்ணாக வெடிக்கும்.மலம் கழிக்கும்போது எரிச்சல், ஆசனவாயைச் சுற்றிலும் அரிப்பும் (Mucoid) ஏற்படும். மூக்காய்டு என்ற சளித்திரவம் ஆசனவாயில் இருந்து வடிந்து கொண்டு இருக்கும் இந்தப் புண்கள் வரக் காரணமான HIV ஹெர்பிஸ் சிம்பிளக்ஸ் ஹோமினிஸ் என்ற நுண்கிருமி, கிருமியை சிநேகம் பிடித்து கூட்டிவரும்.வாய்வழிப்புணர்ச்சி கொண்ட நபருக்கு வாயில் உதட்டு ஓரங்கள் உதட்டின் உட்புறப்பகுதி, தொண்டைப்பகுதி என பல இடங்களிமல் இந்த நோய்க்கிருமி இடம் பிடித்து சிறு சிறு புண்களைக் கொடுக்கும். இந்த புண்கள் வலி கொடுக்கும் தொண்டை அழற்சி ஏற்பட்டு எச்சில் விழுங்க முடியாமல் அவதியுற நேரிடும். முறையாக வைத்தியம் மேற் கொள்ளாவிட்டால் இப்புண்கள் கடுகுகள் மாதிரி சிறு, சிறு புண்களாக பல மாதம், வருடங்கள் என திரும்ப திரும்ப தோன்றிக் கொண்டே இருக்கும். மிக கவலை தரும் நோயாக மாறும்.
பெண்கள் :
ஓரினச்சேர்க்ககையில் ஆசனவாய்ப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி கொண்ட பெண்களுக்கு, ஆண்களுக்கு வருவது மாதிரியே இப்புண்கள் ஆசனவாயில் வாயின் உதட்டுப்பகுதி தொண்டைக்குழி முதலிய இடங்களில் தோன்றி அவதியு வைக்கும்

4. ஜெனிட்டல் வார்ட்ஸ் (Gental Warts) :ஓரினச்சேர்க்கையில் ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட ஒருவனுக்கு ஜெனிட்டல் வார்ட்ஸ் என்ற விஷப் பருக்கள், ஆசனவாய்ப் பகுதியில் உடல்உறவு வைத்துக் கொண்டு சில வாரங்களில், ஏன் சில மாதங்களில் தோன்றக் கூடும். இந்த நோய் கிருமியின் பெயர் ஹீயூமன் பாப்பில் பாமா வைரஸ் (Human/ Papilloma Virus) என்பதாகும். ஆசனவாயை சுற்றிலும் பெரினியம் என்ற ஆண்குறிக்கும் மலத்து வாரத்துக்கும் இடையில் உள்ள இடத்திலும் இப்பருக்கள் தோன்றும். ஆசனவாய் உட்புறத்திலும், இந்த விஷச் செடி முளைக்கும். மலம் வரும்போது வலியும், எரிச்சலும், இரத்தமும் கலந்து வடிந்து தொல்லை கொடுக்கும். வாய்வழிப் புணர்ச்சி கொண்டவர்களுக்கு வாயின் ஓரங்களிலும் தொண்டைக்குழியிலும் இப்படி பருக்கள்தோன்றி மிக எச்சில் விழுங்க முடியாமல் தொல்லை கொடுக்கும். முறையாக வைத்தியம் மேற்கொள்ளாவிட்டால் புற்றாகவும் (Cancer) மாறக்கூடும்.
பெண்கள் :
ஆசனவாய் வழிப்புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி கொண்ட பெண்களுக்கும் விஷப் பருக்கள் தோன்றி தொல்லை கொடுக்கும்.

5. மஞ்சள் காமாலை வியாதி :ஓரினச்சேர்க்கையர், ஆசனவாய் வழி உடல்உறவு வைத்துக் கொள்பவருக்கு “ஹெப்படைடிஸ் பி வைரஸ்” (Hepatitiis B) என்ற நுண்கிருமி இரத்தத்தின் வழியே உள்ளே நோயை உண்டாக்கி விடுகின்றது. இந்த நோய் கண்ட “அலிக்கு” உடல் சோர்வு, களைப்பு, வயிறு, வீக்கம் சிறுநீர் மஞ்சளாக போதல், கண்ணின் வெள்ளைப்படலம், மஞ்சளாக மாறுதல் முதலியன ஏற்படும். ஜான்டிஸ் என்ற இந்த மஞ்சள் காமாலை நோய் மிக விஷத்தன்மை கொண்டது. நோய்க்கிருமி மிகக் கடுமையாக இருந்தால் பிழைப்பது அரிது.

6. அமீபியாசிஸ், சியார்டியாசிஸ் என்ற வயிற்றுக்கடுப்பு, வயிற்றாலை நோய்கள் :ஓரினச்சேர்க்கையில் அவனது ஆசனவாய் புணர்ச்சி மூலம் அமீபியாசிஸ் சியார்டியாசிஸ் போன்ற வியாதிகள் தோன்றி வயிற்றுக்கடுப்பு, வயிற்றாலை போன்ற நோய்கள் வரும். இதற்காரணமான பார சைட்டுகள் ள்(Parasites) என்ற கிருமிகள் என்டமிபாகிஸ்டோலிகா சியார்டியா லேம்லியா (Entamoeba/ Histolylica/ Giardia/ Lambia) என்பதாகும். இவைகளால் பலவிதமான வயிற்றுக் கோளாறு உண்டாகும் அடிவயிற்று வலி சளி மாதிரி நுரையுடன் கூடிய மலம் வெளி யேறுதல், மலத்துடன் இரத்தம் வருதல் என பலவித கஷ்டங்களைக் கொடுக்கும். அதாவது கழிசல் நோய் கொடுக்கும்.
பெண்கள் :
ஓரினச்சோக்கை மூலம் ஆசனவாய் வழியாக இந்த கழிசல் நோய்கள் குடல்களில் பரவி வயிற்றுவலி, வயிற்றாலை, வயிற்றுக் கடுப்பு என பெண்களும் துன்பப்படுவர்.இவ்விதம் ஓரினச்சேர்க்கை மூலம் வரும் பால்வினை நோய்களைப் பற்றி விரிவாக அறிந்தோம். எல்லா பால்வினை நோய்களும் எய்ட்ஸ் நோய்க்கு வழிகாட்டி நிற்கும் இது .

இல்லறமே நல்லறம் ! ஆபத்தில்லாதது!
மனநிலை தடம்புரள அனுமதிக்காதீர்கள்!வாழ்வு உயர்வானது !

நன்றி : ‘இல்லறம்’

ஓரினச்சேர்க்கையை தற்போது ஆதரித்துப் பேசுவது நாகரிகமான போக்காகவும், அறிவார்ந்த செயலாகவும் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. மன நல மருத்துவர்களும்,பால்வினை மருத்துவர்களும்,சமுதாய ஆர்வலர்களில் சில ஞாநிகளும் இதை பிரச்சாரமே செய்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும், கலாச்சார சீர்கேட்டையும் நாம் மனதில் இருத்தி, இதை ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

எப்படி வேண்டுமானாலும் வாழப்போகிறீர்களா..? இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரையரையுடன் வாழப்போகிறீர்களா..?