Tuesday, March 31, 2009

கர்நாடகா: இந்துத்துவாவின் மூன்றாவது சோதனைக் களம்

கர்னாடகா: மூன்றாவது சோதனைக் களம்


“முதலில் கொல்; காரணங்களைப் பிறகு உருவாக்கிக் கொள்ளலாம்”. இதுதான் தற்போது சங்பரிவாரத்தைச் சேர்ந்த இந்து வெறியர்களின் பிரகனப்படுத்தப்படாத தாரக மந்திரம். ஒருவனைக் கொல்வதற்கு அல்லது கொலை வெறியுடன் தாக்குவதற்கு அவன் ‘இந்து அல்லாதவன்’ என்ற ஒரு காரணம் மட்டும் போதும் எனும் முடிவுடன் தங்கள் அழிப்பு வேலைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். குஜராத், ஒரிசாவைத் தொடர்ந்து இவர்களுடைய பார்வை தற்போது கர்னாடகாவின் மீது விழுந்திருக்கிறது.


மதப் பிரச்சினைகள் பெரிய அளவில் தலை தூக்காத தென் மாநிலங்களில் தங்கள் அமைப்புகளைப் பலப்படுத்த சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த இந்துத்துவ அமைப்புகளுக்கு கர்னாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் பெரிய உத்வேகம் கிடைத்துள்ளது. இதுதான் சரியான நேரம் என்று முடிவுகட்டி தீவிரமாகக் களத்தில் குதித்துள்ளனர். தென் மாநிலங்களை இந்துத்துவப்படுத்தும் முயற்சிகளுக்கு உரிய புதிய களமாக கர்னாடக மாநிலம் கிடைத்து விட்ட உற்சாகம் இவர்களிடம் சமீபகாலமாகவே தென்படுகிறது.பொதுவாகவே கடந்த இருபதாண்டுகளில் கர்னாடகாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் இந்து வெறியர்களின் பார்வை கர்னாடகாவின் மீது திரும்பியிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். பா.ஜ., ஆட்சியின் முதல் இரண்டு மாதங்களில் கிறித்தவர்கள் மீது மட்டும் இந்துத்துவ அமைப்புகள் 56 முறை தாக்குதல் நடத்தியிருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்தத் தாக்குதல்களின் போது காவல் துறையும் வன்முறையாளர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளது.


ஒரிசாவில் கிறித்தவர்கள் மீதான தாக்குதலையடுத்து, கர்னாடகாவில் சிறுபான்மைச் சமூகத்தினர் மீதான தாக்குதல் அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதல்களை கர்னாடக அரசு கண்டு கொள்ளாது என்னும் அபரிமிதமான நம்பிக்கை சங் பரிவாரங்களிடம் வேரூன்றியுள்ளது. இந்த நம்பிக்கையை அவர்களிடம் உண்டாக்கும் விதமாக எடியூரப்பா பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்து மதவாத அமைப்புகளைச் சேர்ந்த பலர் மீதான காவல்துறை வழக்குகள் பலவற்றைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார். காவல் துறை மற்றும் ஆட்சித்துறையில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு எந்தத் தடையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகச் செய்யப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் இவை.


கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி பெங்களூருவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை முன்வைத்து இந்துத்துவ அமைப்புகளால் மதவெறிப் பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன. கர்னாடகாவில் தங்களுடைய செயல்பாடுகளுக்குத் தலைமையகமாக இந்து வெறி அமைப்புகள் தேர்வு செய்திருப்பது மங்களூர் மாவட்டத்தை. கடந்த சில மாதங்களாகவே இந்த மாவட்டம் மதப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறது.


சமீபத்தில் மங்களூர் அருகே புத்தூர் எனும் இடத்தில் பேருந்தில் சென்று கொண்டிருந்த 3 மாணவர்களை பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த இந்து வெறிக் கும்பல் ஒன்று வழிமறித்து கொலை வெறியுடன் தாக்கியுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளுடன் பயணம் செய்த அந்த மாணவர்களை இஸ்லாமியர்கள் என்று நினைத்து அவர்கள் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மதக் கலவரமாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து பஜ்ரங் தளம் பந்த் நடத்தியது. இதனால் அந்தப் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.


மங்களூர் எனும் பனிப்பாறை முனை:
இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களுடன் பழகும் பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது கொஞ்சகாலமாகவே மங்களூரில் அதிகரித்து வருகிறது.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ஏழு முறை இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. வடமாநிலங்களில் பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளைப் போன்று கர்னாடகாவில் சங் பரிவாரங்களின் பிரதிநிதியாக ‘ஸ்ரீராம் சேனை’ எனும் இந்துத்துவ பாசிஸ அமைப்பு உருவெடுத்துள்ளது. இந்த அமைப்பு மிகத் தீவிரமாக செயல்படுவது மங்களூரில்தான். சமீபகாலமாக கர்னாடகாவில், குறிப்பாக மங்களூர் வட்டாரத்தில் இந்து மத அமைப்பினர் நடத்தி வந்த அடாவடித் தனங்களின் தொடர்ச்சியாகவே மாணவர்கள் மீதான தாக்குதல் நிறைவேறியுள்ளது. இந்த தாக்குதல்களில் முன்னிலை வகிப்பது ஸ்ரீராம சேனை.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தங்களுக்கும் ராம சேனை அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்திருந்தாலும் இவர்கள் எல்லோருமே இந்துத்துவம் எனும் ஒரே குட்டையில் ஊறியர்வகள்தான்.


கடந்த மாதம் மங்களூரில் ‘அம்னீசியா’ எனும் உற்சாக விடுதியில் ஆபாச நடனமாடியதாக இளம் பெண்களைக் கொலை வெறியுடன் தாக்கினர் ஸ்ரீராமசேனை அமைப்பினர். உடனடியாக எழுந்த பலத்த கண்டனங்களையடுத்து இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை மாநில அரசு கைது செய்தது. இதனையடுத்து அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்துகளும் லாரிகளும் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டன. பின்னர் எதிர்பார்த்தது போலவே இந்த சட்ட விரோத வன்முறைச் சம்பவத்தில் கைதான அனைவரும் நான்கைந்து நாட்களுக்குள்ளாகவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இத்தகைய வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


இந்தச் சம்பவம் தொடர்பாக கர்னாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அறிக்கை சேனையின் செயலை நியாயப்படுத்துவது போலிருந்தது. எல்லோரும் ஸ்ரீராமசேனையின் செயலைக் கண்டித்துக் கொண்டிருக்க, அவர் மட்டும் ‘இத்தகைய ஆபாச நடனங்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது’ என்றார். அதாவது சிக்கலுக்கு முக்கியக் காரணம் ஸ்ரீராமசேனையினர் அல்ல; ஆபாச நடனமாடிய பெண்கள்தான் என்பதே அவருடைய வாதம். ஸ்ரீராமசேனையின் தலைவரான பிரமோத் முதாலிக், ‘கர்னாடக முதலமைச்சர் என்னுடைய நல்ல நண்பர்’ என்று கூறி தனக்கும் மாநில அரசுக்குமான உறவை தன் வாயாலேயே காட்டிக் கொடுத்தார்.தங்களை இந்தியக் கலாச்சாரக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் இந்துத்துவ அமைப்பினர் உண்மையில் கலாச்சாரம், பண்பாடு போன்ற கற்பிதங்களையெல்லாம் பெண்கள் மீதே திணித்துப் பார்க்கின்றனர். நடனமாடிய பெண்கள் குற்றவாளிகள் என்றால், அதைப் பார்த்து ரசித்த ஆண்கள் எல்லோரும் உத்தம புருஷராக இவர்களால் வணங்கப்படும் ஸ்ரீராமரின் அவதாரங்களா? இந்த நடனத்தை ஏற்பாடு செய்து நடத்திய விடுதி நிர்வாகம் மீது ஏன் இவர்களுக்குக் கோபம் உண்டாக வில்லை. காரணம் வெளிப்படையானது. இவர்கள் பெரும்பாலும் முதலாளிகளைப் பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. கர்னாடக மாநில உள்துறை அமைச்சர் இந்தச் சம்பவத்தில் ஸ்ரீராம சேனைக்கு உள்ள தொடர்பையே முதலில் மறுத்தார். விடுதி நிர்வாகம் மாமூல் தர மறுத்ததால் கோபப்பட்டு வன்முறையில் இறங்கிய சில ரவுடிகளின் செயல் என்று சப்பைக்கட்டு கட்டினார். பின்னர் உண்மைகள் வெளியானவுடன் மவுனமானார்.


சங் பரிவாரங்களால் பொறுத்துக் கொள்ளவே முடியாதவர்கள் யாரென்றால் சிறுபான்மையினரும் பெண்களும்தான். ‘பெண்களை அடக்கப்பட வேண்டியவர்கள்; சிறுபான்மையினர் அழிக்கப்பட வேண்டியவர்கள்.’ இதுதான் இந்து மதவெறியர்களின் அடிப்படைக் கொள்கை. சங் பரிவாரத்தின் கோபம் உண்மையில் நடனப் பெண்கள் மீதல்ல; ஒட்டு மொத்தமாக வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதே அவர்களுக்கு உள்ள கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் நடனப் பெண்களைத் தாக்கி எச்சரித்துள்ளனர்.


கலாச்சாரச் சீரழிவுக்கு எதிராக அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் போது வீட்டு வேலைகள் செய்யும் பெண்களின் படங்களை ஏந்தி வந்துள்ளனர். அதாவது பெண் என்பவள் தன்னுடைய பொருளாதாரத்துக்கு தந்தை அல்லது கணவனை நம்பி மட்டுமே இருக்க வேண்டியவள் என்பதே அவர்கள் முன்வைக்கும் சித்தாந்தம். கலாச்சாரத்தின் பெயரால் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களின் மூலமே தங்களுடைய இருப்பையும் வளர்ச்சியையும் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள்.நடனப் பெண்கள் மீதான தங்களுடைய தாக்குதலுக்கு மாநில அரசு வக்காலத்து வாங்கியதையடுத்து அடுத்த நடவடிக்கையில் இறங்கியது ஸ்ரீராம சேனை. காதலர் தினம் கொண்டாடுவதைத் தடுக்கப் போவதாகக் கிளம்பினார்கள். பிப்ரவரி 14 அன்று பொது இடங்களில் நடமாடும் காதலர்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப் போவதாக அறிவித்தனர். கல்யாணத்திற்கு வழியின்றி ஏராளமான ஏழைப் பெண்கள் நரைத்த தலையுடன் காத்திருக்கும் நம்நாட்டில் காதலர்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைப்பதுதான் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதன் லட்சணமா? காதல் போன்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் இது போன்ற மதவாத அமைப்புகள் தலையிடுவது மிகவும் ஆபத்தானது.காதலர் தினம் கொண்டாடுபவர்கள் மட்டுமின்றி, தங்களுக்குப் பிடிக்காத விதத்தில் உடையணியும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் போவதாக ராம சேனை அமைப்பு அறிவித்தது. இத்தகைய மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பது ஒட்டுமொத்த பாசிஸ சமூத்திற்கே இட்டுச்செல்லும். கடும் எதிர்ப்புகளையடுத்து கர்னாடக அரசு வேறு வழியின்றி காதலர் தினத்துக்கு முன் ஸ்ரீராமசேனையின் தலைவர் முதாலிக் உள்ளிட்ட பலரையும் கைது செய்தது. இதையடுத்து அந்த அமைப்பு தன்னுடைய போராட்டங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.


ஸ்ரீராம சேனையின் அடாவடித்தனங்கள் அத்துடன் நிற்கவில்லை. சிறுபான்மையினருக்கு அடுத்தபடியாக அவர்களுடைய முதல் எதிரி கம்யூனிஸ்டுகள் தான். மங்களூர் அருகே கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,வான குன்னம்பு என்பவரின் மகளான சுருதியை அவருடைய நண்பரான ஷபீப் என்பவருடன் கடத்திச் சென்று சித்திரவதை செய்தனர். இக்கடத்தலுக்கான காரணம் எளிமையானது. இந்துப் பெண்ணான சுருதி, இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் பழகியதை மதவெறியர்களால் ஜீரணிக்க முடியவில்லை.ஸ்ரீராம் சேனையினரின் இந்த அடாவடித் தனங்களை மாநில அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது. இதற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி கர்னாடகாவில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகக் கடுமையாகச் சாடினார். அங்கு ஆளும் பா.ஜ., ஆட்சி தாலிபான்களின் ஆட்சியைப் போல் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.கர்னாடகாவில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சிலரின் அடாவடித்தனத்தால் பதினைந்து வயது இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மங்களூர் அருகே ஒரு ஊரில் அப்துல் சலீம் எனும் முஸ்லீம் இளைஞருடன் பேசிக்கொண்டிருந்த இரண்டு இளம் பெண்களை பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சிலர் பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்களுடைய பெற்றோர் அப்துல் சலீம் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அப்பெண்கள் அந்த இளைஞர் மீது எந்த வித குற்றச்சாட்டும் அளிக்க வில்லை. அவர்களில் ஒரு பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து இறந்து போனார்.


காவிமயமாகும் கர்னாடகா:
இந்து மதப் பேரினவாதம் வடமாநிலங்களைத் தொடர்ந்து தென்மாநிலங்களை நெருங்கத் துடிக்கிறது. குஜராத், ஒரிசாவைத் தொடர்ந்து கர்னாடகாவை இந்து மதப் பேரினவாதப் பரவலுக்கான சோதனைக் களமாக உருவாக்கிக் கொண்டு வருகின்றனர். மங்களூர் சம்பவங்கள் இந்து மதப் பேரினவாத அரசியல் எனும் மிகப் பெரிய பனிப்பாறையின் வெளியே தெரியும் சிறிய முனை மட்டுமே. கர்னாடகாவில் மாநில அரசின் உதவியுடன் அவர்கள் அடையும் வெற்றிகள் அடுத்தடுத்த மாநிலங்களிலும் கால்பதிக்கத் தேவையான உந்துதல்களை அவர்களுக்கு அளிக்கும். இது மிகவும் ஆபத்தானது. தென்மாநிலங்கள் காவிமயமாவதைத் தடுக்க மதச்சார்பற்ற மற்றும் முற்போக்குச் சக்திகள் விழிப்புடன் போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மதவாத பாசிஸ அமைப்புகள் குறித்து மக்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும்.


ஸ்ரீராம் சேனை போன்ற சட்ட விரோத நடவடிக்கைளில் ஈடுபடும் அமைப்புகளை தென் மாநில அரசுகள் உடனடியாகத் தடை செய்ய வேண்டும். கர்னாடகாவில் ஆளும் பா.ஜ., அரசிடம் இதை எதிர்பார்க்க முடியாதுதான். ‘அந்த அமைப்பைத் தடை செய்வதில் தங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை’ என்று சங் பரிவாரங்களே கழற்றி விட்டுள்ளன. ஒரு இணைய தளம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான பொது மக்களும் ஸ்ரீராமசேனை போன்ற அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்து மத அமைப்புகளிடம் மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். இல்லையென்றால் தென்மாநிலங்களையும் குஜராத்தைப் போன்று மாற்றுவதற்கு அவர்கள் புதிய வெறியுடன் களமிறங்குவார்கள். அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது திராவிடர்களின் உண்மைப் பண்பல்ல.-

கணேஷ் எபி
நன்றி.கீற்று.காம்

Friday, March 27, 2009

மதவாதத்திற்கு விழுந்த மரண அடி!




சஞ்சய் காந்தி, மேனகா காந்தி தம்பதியினரின் ஒரே மகன் வருண்காந்தி. நேரு குடும்பத்தில் இருந்து மதவாதத்திற்கு தனி பாதை போட்டு வந்திருக்கிறார். உ.பி. பிலிபிட் தொகுதியில் பாஜகவின் வேட்பாளர். மேனகா காந்தி தன் மகனுக்காக விட்டுக் கொடுத்த அந்த தொகுதியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் என்று முஸ்லிம்களுக்கு எதிராக பேசியிருக்கிறார். சீக்கியர்களுக்கு எதிராகவும் பேசியிருக்கிறார். அவரது பேச்சு பதியப்பட்ட ஒலிப்பதிவை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளது. அதே கையோடு, வருணுக்கு கட்சியில் டிக்கெட் தரவேண்டாம் என்று பாஜகவுக்கு அறிவிக்கையும் அனுப்பியிருக்கிறது.


இதன்மூலம், அரசியல் ஆடுகளத்தில் பாஜகவுக்கு களமிறங்கிய நேரு குடும்பத்து விக்கெட்டை தேர்தல் ஆணையம் வீழ்த்தியுள்ளது. சீக்கிய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் மேனகா. இந்து மதவெறியராக வருணை வளர்த்திருப்பதில் ஒரு தாயாக மேனகா தோல்வி கண்டுள்ளார். மிருகங்கள் வதைபடுவதைக் கண்டு பதை பதைக்கும் மேனகா காந்தி தன் மகனின் வெட்டு பேச்சு பற்றி மௌனம் காப்பது இரக்க உணர்ச்சி பற்றிய அவரது மதிப்பீட்டை ஆய்வு செய்கிறது.

வருணின் தந்தையான சஞ்சய் காந்தி (இந்திரா காந்தியின் இளைய மகன்) அவசர நிலை காலத்தில் மேற்கொண்ட மனிதவிரோத செயல்களை இன்றைய தினத்தில் வரலாற்றுப் பக்கங்களே அறியும். சஞ்சய் காந்தியின் கோர மரணத்திற்குப் பின் மாமியாருடன் (இந்திரா காந்தி) நேர்ந்த மோதலால் குடும்பத்தை விட்டும், காங்கிரஸை விட்டும் வெளியேறினார் மேனகா. 90களுக்குப் பிறகு பாஜகவில் சீட் வாங்கி எம்.பி.யானார். அந்த தொடுதலில் இருந்து மதவெறி அரசியல் வருணுக்கும் தொற்றியிருக்கிறது. மோத்திலால், ஜவஹர்லால், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்று மிதவாதப் பாரம்பரியத்தில் இருந்து திசைமாறி இன்று பாஜகவின் மதப்பசிக்கு வருண் பலியாகி இருக்கிறார். வம்பில் மாட்டிக் கொண்டார் வருண் என்று தெரிந்ததும் அவரது பேச்சுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று முத­ல் நழுவிக்கொண்டது பாஜக. பாஜக சொல் கேட்டு சொந்த கட்சிக்குள் தடுக்கி விழுந்தவர்கள் பலர் உண்டு. உதாரணம் அன்று கல்யாண் சிங், இன்று வருண் காந்தி.


வருண் காந்தி அரசியல் அரிச்சுவடியின் அறிமுகப் பக்கத்தையே இன்னும் படிக்கத் தொடங்கவில்லை. அதிரடியாகப் பேசி தடாலடியாக பிரபலப்பட அவர் விரும்பியிருக்கலாம். ஏற்கனவே விரித்துவைத்த வலையில் வருண் லாவகமாக வந்து சிக்கிக் கொண்டார் என்றும் சொல்லலாம்.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு பலருக்கும் எச்சரிக்கையாகவும் உள்ளது. முன்னர், மதவெறியைத் தூண்டி பேசினார் என்று 6 ஆண்டுகள் தேர்தல் பிரச்சாரம் செய்ய பால்தாக்கரேவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது

.
மதவெறி பேச்சாளர்கள் ஒரு கட்சிக்கோ, இயக்கத்துக்கோ தலைவராக, பொறுப்பாளராக நீடிக்கக் கூடாது என்றும் அவ்வாறு நீடிக்கும் கட்சி தடை செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் துணிச்சலுடன் அறிவிக்க வேண்டும்.ஒரு கட்சி அறிவிக்கும் வேட்பாளர் குறித்து கருத்துச் சொல்ல தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று பாஜக கூறியிருக்கிறது. இதில், வருணை காப்பாற்றுவதைவிட, இத்தகைய மதவெறிப் பேச்சுக்களைக் காப்பாற்றுவது பாஜகவுக்கு அவசியப்படுகிறது.


எடுத்துரைப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கும் கூட உரிமை இல்லை என்றால் பின்னர் இவர்களை யார்தான் இடித்துரைப்பது? 2000 உயிர்களை பலி கொண்ட நரேந்திர மோடி மீண்டும் முதல்வராவதைத் தடுக்க இந்த நாட்டின் நாடாளுமன்றத்திற்கோ, நீதித்துறைக்கோ அதிகாரம் இருந்ததாகத் தெரியவில்லை. பாபர் பள்ளியை இடித்துவிட்டு ஆரத்தழுவி ஆழிங்கணம் செய்யும் அத்வானி, உமாபாரதியின் ஆனந்த தாண்டவத்தை, பளிங்கு திரைகளில் பார்த்த பிறகும் அவர்கள் தேர்தலில் நிற்பதைத் தடுக்க இந்திய ஜனநாயகத்தின் தூண்களுக்கு வலுவில்லை. இப்போது தேர்தல் ஆணையத்துக்கும் அனுமதி இல்லை என்றால் மதவெறியிடம் இருந்து மக்களாட்சியை யார், எப்படிக் காப்பாற்றுவது?


Thanks to TMMK

Thursday, March 26, 2009

பாஸிஸ காவல்துறையும் இரட்டைவேட ஊடகங்களும்!






பொதுவாகவே இந்தியக் காவல்துறையும் உளவுத்துறையும் காவிமயமாக்கப்பட்டுள்ளது என்றதொரு குற்றச்சாட்டு நீண்டகாலமாக உண்டு. முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதார, அரசியல் நிலைகளைக் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சச்சார் கமிட்டியின் அறிக்கையும் கிட்டத்தட்ட இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் மும்பைக் காவல்துறையின் செயல்பாடுகளை எடுத்துக் கூறமுடியும். அந்த அளவிற்கு மும்பைக் காவல்துறையின் பாஸிஸ, காவி முகம் 1992 பாபரி மஸூதி குண்டுவெடிப்பின்போது மும்பையில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரத்தில் வெளிப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு தருணங்களில் மும்பைக் காவல்துறையின் முஸ்லிம் விரோதச் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருந்தாலும் அவை ஊடகத்துறையில் ஊடுருவியுள்ள பாஸிஸக் கூட்டாளிகளின் கைங்கர்யத்தால் மக்களிடையே வெளிப்படாமலேயே மறைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அதிலும் குண்டுவெடிப்பாக இருந்து விட்டால் உடனடியாகச் சில முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து, முஸ்லிம் சமுதாயத்தைக் கூண்டில் நிறுத்துவது இப்பாஸிஸக் காவல்துறையின் வாடிக்கையான செயல். அவ்வேளைகளில் காவல்துறைக்குப் போட்டியாக ஊடகங்களும் நான் முந்தி, நீ முந்தி என இல்லாத "இஸ்லாமியத் தீவிரவாதத்தை" முஸ்லிம் பெயர்களில் சந்தைப் படுத்துவது வழக்கம்.

மாறிவரும் வேக உலக நடப்புகளில் மாய்ந்து போகும் குண்டுவெடிப்புகளின் வடுக்களோடு, அதில் தொடர்புடையவர்களாகக் கைது செய்யப்பட்டு "தீவிரவாதிகளாக்கப்பட்ட" முஸ்லிம் இளைஞர்களின் கதையையும் மக்கள் மறந்து விடுகின்றனர். மறந்து விட்ட மக்களுக்கு எதற்காக வீணாக நினைவுபடுத்த வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ, பல வழக்குகளிலும் 'அவசரமாக'க் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விசாரணைகள் மூலம் அதிர்ஷ்டவசமாக நிரபராதிகள் எனத் தெளிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும்போது, ஆரம்பத்தில் "முஸ்லிம் தீவிரவாதிகள்" எனவும் புதிய-புதிய பெயர்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லாத தீவிரவாத இயக்கங்களையும் காவிக் கூட்டணி அமைத்துள்ள பாஸிஸ ஊடகங்களும் மறைத்து விடுகின்றன.

இதற்குச் சரியான எடுத்துக்காட்டு, மும்பைத் தாக்குதலின்போது ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட சிமியின் புதிய தென்னகப் பதிப்பு என்று சொல்லப் பட்ட, "டெக்கான் முஜாஹிதீன்!". ஒவ்வொரு குண்டுவெடிப்புகளின் பின்னணியிலும் செயல்பட்ட/படும் உண்மையான தீவிரவாதிகளால் உருவாக்கப்படும் இந்தப் புதுப்புது தீவிரவாத இயக்கங்களின் பெயர்கள், பிந்தைய காலங்களில் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடுவதற்கு வசதியாக உளவுத்துறையின் தலைமையகங்களில் பதியப்பட்டு விடுவது வழக்கம்.

ஆனால், டெக்கான் முஜாஹிதீன் விவகாரத்தில் மட்டும் "மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் நாங்கள்தான்" என ரஷ்ய/கனடாவிலிருந்து டெக்கான் முஜாஹிதீன் பெயரில் மின்னஞ்சல் அனுப்பிய ஆசான்கள் தயவால் பிழைத்துக் கொண்டது. ஆரம்பத்தில் "டெக்கான் முஜாஹிதீன்" பெயரில் ரஷ்யாவிலிருந்து வந்த மின்னஞ்சலை மையப்படுத்தி விழாக் கொண்டாடிய பெரு ஊடகப் பணமுதலைகள், இப்பொழுது அதனைக் குறித்து வாயைத் திறப்பதே இல்லை.

அதனைப் போன்ற மற்றொரு பெயர்தான், மும்பைத் தாக்குதலுக்கு முன்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின்போது அறிமுகப்படுத்தப்பட்ட சிமியின் இல்லாத "இந்தியன் முஜாஹிதீன்" கிளை அமைப்பும். அத்தகையதொரு இல்லாத நிழல் இயக்கம் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அந்தக் குண்டுவெடிப்புகளின்போது குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலரை, அவ்வியக்கங்களின் நிறுவனர்களாகவும் துணை நிறுவனர்களாகவும் காவல்துறையும் ஊடகங்களும் அறிமுகப்படுத்தின. அவர்களைக் "கண்டு பிடித்த"க் காவலர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் அறிவிக்கப் பட்டன.

அதில் ஒருவர்தான் சாதிக் ஷேக் என்பவர். இரயில் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்ட இவரை, "இந்தியன் முஜாஹித்தீன் (IM) அமைப்பின் துணை நிறுவனராக" மும்பைக் காவல்துறை அறிமுகம் செய்தது. அப்போது இவரைக் குறித்துப் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிடாத ஊடகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இறுதியாக, இந்த சாதிக் ஷேக் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் அவர்தான் இந்தியன் முஜாஹிதீனின் துணை நிறுவனர் என அவர் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் இத்தகைய செயலுக்கு அவர் வருந்துவதாக அவர் வாக்குமூலம் அளித்ததாகவும் பாஸிஸ ஊடகங்கள் பொய்களைக் கடைபரப்பின.

தற்பொழுது, குற்றங்களை 'ஒப்புக் கொண்ட' அதே சாதிக் ஷேக் நிரபராதி எனவும் அவருக்கும் இரயில் குண்டுவெடிப்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் அப்பாவியான அவரை மும்பைக் காவல்துறை பொய்க் குற்றம் சுமத்தி குற்றவாளியாக்கியதாகவும் கூறி, மும்பைத் தீவிரவாதத் தடுப்புத் துறை (ATS) அவரை விடுதலை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அவரது விஷயத்தில் மும்பைக் காவல்துறை செய்த அநியாயத்தைக் குறித்துத் தீவிரவாதத் தடுப்புத் துறை கூறும் தகவல் இதோ:கடந்த 2006ஆம் வருடம் ஜூலை 11ந் தேதி நிகழ்ந்த இரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என சந்தேகிப்பட்டு, மும்பைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் சாதிக் ஷேக். அதன் பின் தொடர்ச்சியாக நடந்த விசாரணைக்குப் பிறகு தற்போது "குண்டு வெடிப்பிற்கும் இவருக்கும் தொடர்புள்ள எந்தவோர் ஆதாரமும் கிடைக்காத காரணத்தினால் குற்றமற்றவர்" என்று நிருபணமாகியுள்ளதாக ATS அறிவித்துள்ளது.

ATS விசாரணையின் ஒரு பகுதி!
"குற்றத்தை சாதிக் ஒப்புக் கொண்டார்!" என மும்பை குற்றப்பிரிவு இதுநாள்வரை கூறிவந்த தகவல் பொய்யானது என்பது வேறு வகையில் நிரூபணம் ஆகியுள்ளது.மும்பையின்
forensic science laboratory ஏ.டி.எஸ் இடம் சமர்ப்பித்துள்ள ஆய்வுகளான மூளையில் பதிவாகும் விஷயங்களைக் கண்டறியும் (brain mapping) மற்றும் பாலிகிராஃப் (polygraph) ஆகிய சோதனைகளின் மூலம் சாதிக், குற்றமற்றவர் என்று நிருபணம் ஆகியிருப்பதோடு, குற்றத்தினை ஒப்புக் கொள்ள வற்புறுத்தப் பட்டுள்ளார் என்பதையும் காட்டிக் கொடுத்திருக்கிறது.

இந்தத் திடுக்கிடும் தகவல், இவ்வழக்கில் பெரும் திருப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அப்பாவி சாதிக்கைக் குண்டு வெடிப்பில் தொடர்பு படுத்திய மும்பை குற்றப்பிரிவு, அஹமதாபாத் காவல்துறையினர் மற்றும் டெல்லி காவல்துறையினர் ஆகியோரின் கூற்று ஒட்டுமொத்தமான பொய் மூட்டைகள் என்று நிருபணம் ஆகியுள்ளது.




ATS இன் இந்த அறிவிப்பு மும்பையின் குற்றப்பிரிவுக் காவல்துறைக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2008 செப்டம்பர் மற்றும் அக்டோபரில் மும்பைக் குற்றப்பிரிவு (Mumbai crime branch) காவல்துறையினர், 21 பேரைக் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியன் முஜாஹித்தீன் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என்றும், விசாரணையின்போது குண்டு வெடிப்பிற்கும் தனக்கும் தொடர்பிருப்பதாக சாதிக் ஒப்புக் கொண்டதாகவும் மும்பைக் குற்றப்பிரிவு தகவல் வெளியிட்டது.மும்பைக் குற்றப்பிரிவு வெளியிட்ட அந்தத் தகவல் ATSக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனெனில், இதே சம்பவம் தொடர்பாக ATS ஏற்கனவே தனது விசாரணையின் கீழ் பதிமூன்று பேரைக் கைது செய்திருந்தது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் சிமி உறுப்பினர்கள் என்ற சந்தேகக் கண்ணோடு பதினோரு ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை ATS தயாரித்திருந்தது.
இச்சூழலில், மும்பைக் குற்றப்பிரிவின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமது விசாரணையை சாதிக் பக்கம் திருப்பிய ATS, இரண்டு வாரங்கள் கடும் விசாரணையை அவரிடம் மேற்கொண்டது. விசாரணையின் இறுதியில், மும்பைக் குற்றப்பிரிவின் அறிவிப்பு தமக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ATS அறிவித்துள்ளது. "முப்பத்தியொரு வயதான சாதிக்கைக் கடந்த பிப்ரவரி 28ம் தேதி கைது செய்து நாங்கள் விசாரணையைத் துவக்கினோம். இருவாரத் தொடர் விசாரணையில் ரெயில் குண்டுவெடிப்பிற்கும் சாதிக்கிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவானது. மேலும் தொடர்புடைய ஆதாரங்கள் ஏதும் கிடைக்க வில்லை!" என்றார் ATS அதிகாரி ஒருவர். ATS தற்போது செய்வதறியாமல், நீதிமன்றத்தில் தனது தரப்பிலான புகாரைச் சமர்ப்பிக்க உள்ளது. இதன் மூலம் சாதிக் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படுவார் என்று ATS அறிவித்துள்ளது.அதே சமயத்தில், தான் தவறு இழைத்துவிட்டதாகவும் அதற்காக வருந்துவதாகவும் சாதிக் கூறியதாக, ஒரு செய்தி ஊடகம் திரித்து வெளிட்ட சிடி வெளியீட்டினை ATS கடுமையாகக் கண்டித்துள்ளது.

குண்டுவெடிப்புகளும் அசம்பாவிதங்களும் நிகழும் வேளைகளில் காவிமயமாக்கப்பட்டுள்ள காவல்துறையும் ஊடகங்களும் போட்டியிட்டுக் கொண்டு முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதிகள் எனக்கூறி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் அதே வேளையில், தொடர் விசாரணைகளின்போது அதிர்ஷ்டவசமாக யாரையாவது நிரபராதி எனக் கண்டறியப்பட்டால், அவர் தொடர்பாக அவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதக் கட்டுக்கதைகளைக் குறித்தோ அவரது வாழ்க்கை சீரழிந்துள்ளதைக் குறித்தோ எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி, அச்செய்திகளைக் கண்டுகொள்வதையே இந்த ஊடகங்கள் தவிர்த்து விடுகின்றன. ஊடகத்துறையின் நம்பகத்தன்மைக்கு வேட்டு வைக்கும் விதத்தில் காவித்துவம் ஆணிவேராக ஆகிவிட்ட ஊடகங்களிடமிருந்து நியாயங்களை எதிர்பார்ப்பதில் இனியும் எவ்வித அர்த்தமுமிருப்பதாகத் தெரியவில்லை.



Thanks to satyamargam

Wednesday, March 18, 2009

வக்கிரப் பேச்சை திரித்த தமிழ் நாளிதழ்கள்


"காந்தியிடம் இருந்த மரியாதையால் தன் மகள் இந்திராவை 'காந்தி' ஆக்கினார் நேரு. சரி, ஒத்துக்கலாம்; அந்தம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டு ஃபார்ஸி ஃபெரோஸும் 'காந்தி' ஆனாரு. சரின்னு அதையும் ஒத்துக்கிட்டோம். ரெண்டு பேருக்கும் ரெண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். பேரு ராஜீவ் 'காந்தி'; சஞ்சய் 'காந்தி'. அதையும் ஒத்துக்கிட்டோம். இத்தாலிக்கார சோனியா ... எப்படிய்யா 'காந்தி' ஆனா(ரு)? சொல்லு...
நீண்டகாலம் திமுகவின் பிரச்சார பீரங்கியாகத் திகழ்ந்த 'தீப்பொறி' ஆறுமுகம், ஒருகாலத்தில் திமுக-பாஜக கூட்டணியின்போது காங்கிரசைத் தாக்குவதற்காகப் பயன்படுத்திய மேற்காணும் கேள்விகள்தாம் நினைவுக்கு வருகின்றன - "சீக்கிய மேனகா ... எப்படி காந்தி ஆனாரு? சொல்லு; அந்தம்மாவுக்குப் பொறந்த வருண் எப்படி காந்தி ஆனாரு? சொல்லு ..." என்ற நீட்சியுடன்.
எனவே, சஞ்சய்-மேனகாவுக்குப் பிறந்த வருணோடு, 'காந்தி' என்ற பெயரைச் சேர்த்து காந்திஜியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்பதால் வருணை இங்கு வெறும் 'வருண்' என்றே குறிப்பிடுவோம்.

ஜனநாயகக் கேலிக்கூத்தின் உச்சபட்ச கோமாளித்தனமான மற்றொரு தேர்தல் திருவிழா ஆரம்பமாகி விட்டது. மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் இன்னொருமுறை மக்கள் முன்னிலையில் கோமாளி வித்தைக் காட்ட தயாராகி விட்டனர்.
மக்களின் அடிப்படை வாழ்வு, பொருளாதார மேம்பாடு, தொழில் வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற மக்களையும் நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குத் தாங்கள் என்னென்ன செய்யப்போகிறோம் என்றும் என்னென்ன செய்துள்ளோம் என்பதையும் பட்டியலிட்டு மக்களைக் கவர்வதே உண்மையான ஜனநாயத்தின் அடையாளங்களாகும்.
ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக ஏட்டளவில் பீற்றிக் கொள்ளும் இந்தியாவில் மட்டும் இதற்கு நேர் முரணான காட்சிகளே எப்போதும் அரங்கேறுகின்றன. இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. அதிலும் பிரிவினைவாதத்தையும் அடக்குமுறையையும் அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாகக் கொண்ட பாரதீய ஜனதா கட்சியைப் பொருத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்.

மக்களிடையே வெறுப்பையும் காவிச் சிந்தனையையும் விதைத்து, நாட்டில் வாழும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத அனைவரையும் "இந்துக்கள்" என்ற மாய்மாலத்தில் ஒருங்கிணைக்க தொடர் முயற்சி செய்து வருகிறது பாஜக. அதற்கான ஆரம்ப ஆயுதமாக அது கையில் எடுத்துக் கொண்டதுதான் பாபர் மசூதி!

அரசியலில் அன்றிலிருந்து ஆரம்பித்த காவி வக்கிரச் சிந்தனைகள், இன்று வேர் விட்டு விருட்சமாகப் பரவி நிற்கிறது. நாட்டின் குடிமக்களில் ஒரு சாராரைக் கொன்றொழிப்பதையும் அதற்காக அறைகூவல் விடுவதையும் சிறுபான்மையினரையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் அடித்தட்டிலிருந்து மேலெழும்ப விடாமல் அழித்தொழிப்பதையும் மட்டுமே இலட்சியங்களாகக் கொண்டு ஒரு நாட்டில் ஒரு கட்சி வெளிப்படையாக இயங்க முடியுமா?.

இந்தியாவில் மட்டும் அது முடியும்! ஒன்றல்ல, ஆர்.எஸ்.எஸ் என்ற விஷ விருட்சத்தின் விழுதுகளாகவும் எச்சங்களாகவும் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பல பிரிவுகளாகப் பிரிந்து விரிந்த உபவிஷங்களாக!
ஆர்.எஸ்.எஸ்ஸின் கூடாரத்தில் ஐக்கியமாகி விட்டால் அடுத்த விநாடியே 'அகோரி'ப் பித்துத் தலைக்கு ஏறிவிடும் என்பது அதன் அரசியல் பிரிவான பிஜேபி மூலம் இன்னொரு முறை தெளிவாகி இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் பிஜேபியின் நாடாளுமன்ற வேட்பாளாராகப் போட்டியிடும் வருண், கடந்த 6.3.2009இல் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது,


"இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்".
"இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்".
"ஓர் இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது சத்தியமாக அவனது கையை இந்த வருண் வெட்டுவான்"

என்றெல்லாம் முழங்கித் தள்ளியிருக்கிறார். யாருக்காவது காவிப் பித்துத் தலைக்கேறி விட்டால் அவர், பைத்தியங்கள் உளறுவதை விடக் கீழ்த்தரமாக அர்த்தமின்றி உளறுவார் என்பதற்கு வருண் நல்ல உதாரணம்!

"இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்" என்றால், முதலில் இந்துக்கள் என்றால் யாவர் என்பதை ஆர்.எஸ்.எஸின் கண்ணோட்டத்தில் தெளிவாக்கினால், "முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், தாழ்த்தப்பட்டோர், பகுத்தறிவுவாதிகள் என 2.5% பார்ப்பனர்களைத் தவிர அனைவருமே பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும். பாகிஸ்தான் தாங்குமா? பாகிஸ்தானில் இவர்களுக்கெல்லாம் இடம் கிடைக்குமா?" என்ற கேள்வியை ஆர்.எஸ்.எஸ், தன் சகாவான ஐ.எஸ்.ஐயுடன் கலந்துபேசி இந்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

"தாமரையின் சக்தி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும்" என்றும் "இந்துக்களைத் தவிர மற்ற அனைவரும் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்" எனவும் இவ்வளவு வெளிப்படையாக ஒருவர் பேசுகிறாரே?. இது சட்ட விரோதம் இல்லையா?. இவர் மீது சட்டம் பாயாதா? என்று வெகுளித்தனமாக யாராவது கேள்வி கேட்கக் கூடும்.

ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாக ஏற்றுக் கொள்வதற்கு அடிப்படைத் தகுதியே சட்டத்தை மதிக்கக் கூடாது என்பதுதான். அப்படியே தேர்தல் கமிஷனோ, உணர்வில்லாத ஏதோ ஒரு கமிஷனோ, பத்து நாட்கள் கழித்து, கேட்க வேண்டுமே என்பதற்கு ஈனஸ்வரத்தில் முனகினால், இருக்கவே இருக்கிறது "நான் பேசியதைத் திரித்து விட்டார்கள்" என்ற காவி சாணக்கியத்தனம். அத்தகைய பயிற்சிகளைக் கொடுத்தல்லவா ஆர்.எஸ்.எஸ் அகோரிகளைத் தயாராக்குகின்றது!

அதுதான் நடந்திருக்கிறது. வருணின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்குப் பாதுகாப்பு அளித்து அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த உத்தரப்பிரதேசக் காவல்துறை, பத்து நாட்களுக்குப் பிறகு வருணுக்கு எதிராகக் குற்றவியல் பிரிவு 153ஏயின்படி (by words, either spoken or written or by signs or by visible representations or otherwise promotes or attempts to promote on ground of religion, race, place of birth, residence, language, caste or community or any other ground whatsoever disharmony or feelings of enmity, hatred or illwill between different religious, racial, language or regional groups or castes or communities shall be punished with imprisonment) முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது.


"இந்திய இறையாண்மைக்குச் சவால் விடுவதாகவும் மதவிரோதத்தை விதைத்து வன்முறையைத் தூண்டி விடுவதாகவும்" வருணுக்கு எதிராகப் பிணையில் வரமுடியாத குற்றவியல் சட்டப்படியும் மக்கள் பிரதிநிதுத்துவப் பிரிவுச் சட்டப்படியும் ஒரு வழக்கை நேற்றுத் தேர்தல் கமிஷன் தொடுத்திருப்பதாக PTI செய்திக் குறிப்புக் கூறுகின்றது.

ஆனால், "நாளைக்கு நான் தெளிவாக்கி விடுவேன். ஒன்றும் ஆகாது, கவலையில்லை" என்று வருண் பேட்டி கொடுக்கிறார்.
மேலும், "வருண் பேசியதில் தவறொன்றுமில்லை" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் தருண் விஜய் விளக்கம் சொல்லி விட்டார்.
"வருண் புயல் மாதிரி; அடுத்த சஞ்சய் வருண்தான்" என்று தாய் மேனகா பெருமை பேசுகிறார்.
நியாயந்தான்! அவசரநிலை காலகட்டத்தில் முஸ்லிம்களின் டெல்லிக் குடியிருப்புகளை மட்டும் குறிவைத்து புல்டோசரால் அழித்தொழித்து, புகழ்பெற்ற டெல்லி ஜாமியா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு நடத்தி, டெல்லி முஸ்லிம்களின் மனங்களில் அழியா வடுவை ஏற்படுத்திய பழம்புயல் சஞ்சயின் மகனல்லவா வருண்?
நம் நாட்டில் பேசுவதற்கு ஒரு மேடையும் கேட்பதற்கு சிலநூறு தலையாட்டிக் கூட்டமும் ஒரு மைக்கும் கிடைத்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முறைச் சித்தாந்தத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டது.

"நம்நாடு ஒரு ஜனநாயக நாடு; நமது அரசு ஜனநாயக அரசு" எனப் பெருமையாகக் கூறிக் கொண்டிருப்பதில் மட்டும் அர்த்தம் இல்லை. நாட்டின் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்துவதற்கும் அனைவரும் பாதுகாப்பாக வாழ்வதற்கு உத்தரவாதம் வழங்க வேண்டியதும் ஜனநாயக அரசின் தலையாய கடமைகளாகும்.

வெறும் கண்துடைப்பு விளக்க நோட்டீஸ்களும் கமிஷன்களும் அமைப்பதை விடுத்து, வன்முறை வித்துகளை விதைக்கும் பேச்சுகளைப் பேசுவோர் எவராக இருப்பினும் உடனே கைது செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும். "வருணுக்குத் இந்தத் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லை" என்ற குறைந்தபட்ச அறிவிப்பையாவது தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும்.
இல்லையெனில் இதேமாதிரிப் பேச்சுகள் நீளுவதைத் தடுக்க முடியாது - எதிர்ப் பேச்சையும்தான்!

இனி.. வருணின் வக்கிரப் பேச்சை வெட்கமின்றி திரித்து அரவணைத்துச் சென்ற தமிழ் ஊடகங்களின் பாரபட்சத்தை பார்ப்போம்.


//'இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்'.'இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்'.'ஓர் இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது சத்தியமாக அவனது கையை இந்த வருண் வெட்டுவான்'//
இது செய்தி

திரிக்கப்பட்ட விதத்தைப் பார்ப்போம்.


தினத்தந்தி மார்ச் 18, 2009http://dailythanthi.com/article.asp?NewsID=475709&disdate=3/18/2009//''
இந்துகளுக்கு எதிராக யாரவது விரலை நீட்டினாலோ, அல்லது இந்துக்கள் பலவீனம் அடைந்துவிட்டதாக, தலைமை இல்லாமல் போய்விட்டதாக நினைத்தாலோ, ஓட்டுக்காக இந்து தலைவர்கள் தங்களது காலடியில் விழுவார்கள் என்று நினைத்தாலோ, பகவத் கீதை சத்தியமாக அத்தகைவர்களின் கையை வெட்டுவேன்'

'//மறைக்கப்பட்ட உண்மை தினத்தந்தி நாளிதளில்//இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்.இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்'.//மேல் உள்ள வாசகம் தினத்தந்தியில் நீக்கபட்டு விட்டது

Dinamanai மார்ச் 18,2009..
//இது எனது கை(அவர் கை உயர்த்திய படி) ஆனால் காங்கிரஸ் சின்னமான கை அல்ல. இது தாமரையின் சக்தி. இது தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம் யாரவது இந்துக்களை நோக்கி விரல் நீட்டினால், இந்துக்கள் பலவினமானார்கள் என்று நினைத்தாலோ , இந்துகள் தலைமையற்றவர்கள் என்று என்று கருதினால் அவர்களின் தலையை வெட்டுவேன் என கீதையின் மீது ஆணையாக கூறுகிறேன் .///

மறைக்கப்பட்ட உண்மை தினமனி நாளிதளில்.. முஸ்லிம் என்று குறிப்படவில்லை அதை மட்டும் நீக்கி வீட்டு // இது தலைகளை வெட்டி எறியும்// என்று மொட்டையாக பதிக்கப்பட்டுள்ளது//இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்.இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்'.//மேல் உள்ள வாசகம் தினமனியில் நீக்கபட்டு விட்டதுhttp://
dinamani.com/NewsItems.asp?ID=DNH20090317114103&Title=Headlines&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0&ndate=3/18/2009&dName=No+Title&Dist=




மதவெறி பைத்தியம் பிடித்த தினமலர் மார்ச் 18, 2009,
/இது எனது கை, ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் சின்னம் அல்ல. பாரதி ஜனதாவின் பலம், யாரவது இந்துகள் நோக்கி கை நீட்டினால், இந்துகள் பலவினமானவர்கள் என யாரவது நினைத்தால் அவர்கள் கை வெட்டுவேன் என்று கீதை பேரில் உறுதி கூறுகிறேன்.//மறைக்கப்பட்ட உண்மை தினமலர் நாளிதளில்தினமலர் பற்றி சொன்னாலும் ஒன்று தான் சொல்லாமாலும் இருப்பதும் ஒன்று... ஏனெனில் இது ஒரு பொய்மலர்...தினமலரில் பதிந்த கருத்துகள் அனைத்தும் பொய்கள்.தொடர்புடைய வீடியோவுக்கு சம்மந்தம் இல்லாதவை.http://dinamalar.com/Topnewsdetail.asp?News_id=977http://dinamalar.com/fpnnews.asp?News_id=3269&cls=row4




Thanks to Satyamargam.com

Tuesday, March 17, 2009

பாதிரியார்களால் வஞ்சிக்கப்பட்ட ஸிஸ்டர் ஜெஸ்மி

சிஸ்டர் ஜெஸ்மி! சில மாதங்களுக்கு முன்பு வரை கேரள மாநிலம் திருச்சூரின் புகழ் பெற்ற விமலா கல்லூரியின் முதல்வராக இருந்தவர். கருணையின் உருவமான கன்னியஸ்திரி... ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற புத்திசாலி. அண்மையில் அவர் எழுதி மலையாளத்தில் வெளியான புத்தகம் "ஆமென்"!

'அப்படியே நடக்கக் கடவது' என்ற அந்தப் புத்தகத்தில் "இப்படியும் நடக்குமா?" என்றளவிற்கு அதிர்ச்சிகள். கடவுளுக்கு ஊழியம் செய்ய தன் வாழ் நாளை அர்ப்பணித்து கன்னியாஸ்திரியானவர் சிஸ்டர் ஜெஸ்மி. தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளையும் பாதிரியார்களின் வக்கிரங்களையும் அதற்கு உடந்தையாக இருந்த மதர் சுப்பீரியர்களின் மவுனத்தையும்,உதிரம் சொட்டும் வார்த்தைகளாய்க் கோர்த்து உலகத்தையே உலுக்கிவிட்டார்.

பிரம்மாண்டமான பங்களாபோல் இருந்த அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மொத்தம் மூன்று வீடுகள். அதில் ஒன்றில் தான் வாடகைக்கு வசித்து வருகிறார் சிஸ்டர் ஜெஸ்மி... ஆடம்பரப் பொருட்கள் எதுவுமில்லாத அந்த அழகான வீட்டில் ஏசுவின் படத்திற்கு முன்னால் சில நிமிடம் மவுனமாக இருந்து விட்டு நம்மிடம் பேசத் துவங்கினார்.

"என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்த முதல் முத்தம் தான்.. மதிப்பிற்குரிய அந்த பாதிரியார் 'பிரார்த்தனை' என்று கன்னியாஸ்திரிகளை அழைத்து அவர்களில் சிலரை மட்டும் 'சிறப்புப் ப்ரார்த்தனை' என்று தனியே அணைத்து முத்தமிட்டு மகிழ்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

என்னையும் ஒரு நாள் அவர் முத்தமிட முயன்றபோது தான் அதிர்ச்சியில் எதிர்ப்பைக் காட்டிவிட்டு அறைக்குள் ஓடிவந்து அழுதேன். எனக்கு ஆறுதல் சொன்ன பலரும் இந்தக் கொடுமையை நீண்ட நாள் அனுபவித்து வரும் உண்மை அப்பொழுது தான் எனக்குத் தெரிந்தது. மதரிடம் சொன்ன போது, 'பெரிது படுத்தாதே' என்று சொல்லிவிட்டார்.. ஆனால் அந்த பாதிரியாரோ, 'நீங்கள் புனித முத்தங்களால் ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள் என்று வேதகமத்திலேயே சொல்லியிருக்கிறது!' என்று தன் வக்கிரத்துக்கு கர்த்தரை துணைக்கு அழைத்த போது துடித்துப் போனேன்.

இன்று என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி, 'முதன் முதலில் தன் ஆசைக்கு இணங்க வைத்த பாதிரியாரை அப்பொழுதே தோலுரித்துக் காட்டியிருக்கலாமே என்பது தான்'. இங்கே பல விஷயங்கள் வன்முறையாக நடப்பதில்லை.. வழிக்குக் கொண்டுவந்து நடத்தப்படுவதால் எதிர்ப்புக்கு இடமில்லாமல் போகிறது

என்னை முதன்முதலில் திட்டம் போட்டு நாசமாக்க‌ நினைத்த பாதிரியார் அதற்கு தேர்ந்தெடுத்த இடம் பெங்களூர். அங்குள்ள பூங்காக்களில் ஆணும் பெண்ணும் உல்லாசமாக சல்லாபித்துக் கொண்டிருப்பதை அருகில் சென்று என்னைப் பார்க்க வைத்து 'உடலின் தேவைகள் மனதால் கட்டுப்படுத்த முடியாதது!' என தத்துவமாகப் பேசி என்னைத் தடுமாற வைத்தார்.
அசிங்கமான அந்தக் காட்சிகளைப் பார்க்க விரும்பாத நானே சில நிமிடங்களில் அதைப் பார்க்கும் ஆவலுக்கு உள்ளானேன். அப்படியே துணைக்கு யாருமே இல்லாத அறைக்கு என்னை அழைத்து வந்தவர் துன்புறுத்தவில்லை.. ஆதரவாகப் பேசினார். மெல்ல தொட்டார். இன்றாவது ஒரு ஆணை முழுமையாகப் பார் என தன்னை நிர்வாணப்படுத்த, தடுமாறிப்போனேன். நான் எதிர்த்து செய்ய ஏதுமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அன்று என்னை அவர் ஆக்கிரமிக்க, வழியே இல்லாமல் அடங்கிப்போனவள், இதற்குப் பின் அழுத நாட்கள் பல..

ஆனாலும் உணர்வுகள் தூண்டப்பட்டால் வேறுவிதமான தொந்தரவுகள்.. லெஸ்பியன், சுய இன்பம் என நாம் விரும்பாமலே பல விபரீதங்கள் நம்மை வந்து சேர்ந்து விடும்.

முக்கிய‌மாக‌ மூத்த‌ க‌ன்னியாஸ்திரிக‌ள் ஓரின‌ச்சேர்க்கைக்கு உட‌ன்ப‌ட‌ வ‌ற்புறுத்தும் பொழுது புதிய‌வ‌ர்க‌ள் என்ன‌ செய்வ‌து என்று த‌டுமாறும் வேளையில், த‌ங்க‌ளின் வ‌லைக்குள் விழ‌ வைத்து விடுவார்க‌ள். சிஸ்ட‌ர் விமியிட‌ம் என‌க்கேற்ப‌ட்ட‌ உற‌வும் அப்ப‌டித்தான்.

சிஸ்ட‌ர் விமி ச‌பையில் செல்வாக்கான‌வ‌ர். அவ‌ருக்கு ப‌ல‌ருட‌ன் லெஸ்பிய‌ன் உற‌வு உண்டு. அவ‌ரை த‌டுக்க‌வோ த‌விர்க்க‌வோ முடியாம‌ல் அவ‌ருட‌ன் உற‌வை நானும் தொட‌ர‌ வேண்டியிருந்த‌து..
விமிக்கும்கூட‌ குற்ற‌வுண‌ர்வு உண்டு.. 'நான் எந்த‌ ஆண்க‌ளிட‌மும் செக்ஸ் வைத்துக் கொள்வ‌தில்லை. அதைத் த‌விர்க்க‌வே பெண்க‌ளிட‌ம் இப்ப‌டி ந‌ட‌ந்து கொள்கிறேன். இதை வைத்து என்னை த‌ப்பாக‌ நினைக்காதே!' என்று த‌த்துவ‌ம் பேசுவார்.'ச‌ரியான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ர‌ட்டும், இந்த‌ ச‌பையின் ச‌ங்க‌திக‌ளை அம்ப‌ல‌மாக்குவேன்' என்று நானும் ம‌ன‌திற்குள் நினைத்துக் கொள்வேன், ச‌ரியான‌ நேர‌த்தில் தைரிய‌த்தைக் கொடும் க‌ர்த்த‌ரே' என்று வேண்டிக்கொள்வேன்.

ஒருமுறை ம‌த‌ர் ம‌ற்றொரு சிஸ்ட‌ரிட‌ம், 'நீ பாதிரியாரிட‌ம் உற‌வு கொள்வ‌தைப் பற்றி ப‌ய‌ப்ப‌டாதே. ஒன்றும் ஆகாது. க‌ர்ப்ப‌மானாலும் அபார்ஷ‌ன் செய்து கொள்ள‌லாம்!' என்று வ‌ற்புறுத்தி அனுப்பியுள்ளார். இவ‌ரைப் போல‌ அனுப்ப‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ருட‌ன் நானும் ச‌த்த‌மில்லாது அழுது எங்க‌ள‌து துன்ப‌த்தைக் குறைத்துக் கொள்வோம்.

தாங்க‌வே முடியாத‌ பொழுது ம‌த‌ர் சுப்பீரிய‌ரிட‌ம் சொல்வோம். அவ‌ரோ எங்க‌ள் க‌ற்பைவிட‌, 'ச‌பையின் க‌ண்ணிய‌ம் தான் முக்கிய‌ம்!' என்று எங்க‌ள் வாயை அடைத்துவிடுவார்.
மீறி சில‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் நான் பேச‌ ஆர‌ம்பித்த‌பொழுது என‌க்கு பைத்திய‌க்காரி ப‌ட்ட‌ம் க‌ட்டி பேச‌விடாம‌ல் செய்யும் முய‌ற்சியும் ந‌ட‌ந்த‌து... என‌க்கு மூன்று அண்ண‌ன்க‌ள் உண்டு. ஒருவ‌ர் வெளி நாட்டில் இருக்கிறார். ஒருவ‌ர் பெரிய‌ பிஸின‌ஸ்மேன், இன்னொருவ‌ர் ந‌ல்ல‌ வேலையில் இருக்கிறார். அவ‌ர்க‌ள் மூல‌மும் என்னை மிர‌ட்டிப் பார்த்த‌ன‌ர்.

ஒரு த‌ங்கைக்கு நேர்ந்த‌ அவ‌மான‌த்தைத் த‌ட்டிக் கேட்க‌ வேண்டிய‌ அண்ண‌னே என்னிட‌ம், 'நீ ஏன் வெளியில் வ‌ந்தாய். இயேசுவிற்கு வ‌ராத‌ க‌ஷ்ட‌ங்க‌ளா? ஒரு க‌ன்னியாஸ்திரியிட‌ம் எவ்வ‌ள‌வு பொறுமை இருக்க‌ வேண்டும்?' என‌ வெட்க‌மில்லாம‌ல் புத்தி சொல்கிறார்.
நான் தின‌மும் பிரார்த்திப்ப‌து ஜான் தி பாப்டிட்ஸின் புனித‌ வார்த்தைக‌ளைத்தான். அவ‌ர், ' நான் ஏசுவின் குர‌லாக‌ உள்ளேன்' என்பார்! அதுபோல் ஏசு என்னையும் அவ‌ர‌து குர‌லாக்கியுள்ளார். இதுவ‌ரை ஊமையாக இருந்த‌ என‌க்கு தைரிய‌த்தைக் கொடுத்த‌து இயேசு தான்.

திருச்ச‌பைக‌ளின் புனித‌த்தைப் பாதுகாக்க‌, போலிப் பாதிரிக‌ளின் வேஷ‌த்தைக் க‌லைக்க‌ இயேசு என்னை ஒரு க‌ருவியாக்கியுள்ளார். அவ‌ரின் துணையுட‌ன் என் போராட்ட‌ம் தொட‌ரும்.." என்ற‌வ‌ர், 'ஆமென்' என‌ த‌ன் புத்த‌க‌த்தைத் த‌ந்து விடைகொடுத்தார்.

இன்று சிஸ்ட‌ர் ஜெஸ்மிக்கு ஆத‌ர‌வாக‌ ப‌ல‌ க‌ன்னியாஸ்திரி அமைப்பின‌ர் ச‌பையை விட்டு ஒட்டுமொத்த‌மாக‌ வெளியேற‌வும் முடிவு செய்துள்ள‌ன‌றாம்... அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் சொல்வ‌தெல்லாம், 'ஒர்ஸ்ஸாவில் க‌ன்னியாஸ்திரியொருவ‌ர் பாலிய‌ல் கொடுமைக்குள்ளான‌த‌ற்கு எவ்வ‌ள‌வோ எதிர்க்குர‌ல்க‌ள் எழுந்த‌ன‌. ஆனால், இன்று ப‌ல‌ நூறு க‌ன்னியாஸ்திரிக‌ள் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சோக‌ம் வெளிச்ச‌த்திற்கு வந்தும், இது ஒரு த‌னிப்ப‌ட்ட‌ க‌ன்னியாஸ்திரியின் பிர‌ச்சினையாக‌ ம‌ட்டுமே பார்க்க‌ப்ப‌ட்டு க‌வ‌னிக்க‌ப்ப‌டாம‌ல் இருக்கிற‌து" என்ப‌து தான்!.

Source Kumudam 18.3.2009