Wednesday, July 7, 2010

கேள்விக்குறியாகும் பத்திரிகைகளின் நேர்மை!



தாமதிக்கும் நீதி மறுக்கப்படும் நீதி' என்பது வழக்காடு மன்றங்களில் வழக்கமாக ஒலிக்கும் பிரபலமான சொலவடை.

ஆனால், அனேக நிகழ்வுகளில் முஸ்லிம்களுக்கான நீதி தாமதப்படுத்தப்பட்டே வந்துள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் முஸ்லிம்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வந்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் ஏன் உலகம் முழுவதிலும் இதுதான் வழமையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சுமார் 300 ஈரானிய பயணிகளுடன் வானில் பறந்த பயணிகள் விமானத்தை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் சுட்டு வீழ்த்தி கடலில் மூழ்கடித்ததை 22 வருடங்களுக்குப் பிறகு சாவகாசமாக தற்பொழுது அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழகத்திலும் கூட 13 ஆண்டுகளுக்கு முன் எவ்வித ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டு, 13 வருடங்களாக பிணையும் மறுக்கப்பட்ட குணங்குடி ஹனீபா சென்ற மாதம் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

ஆக முஸ்லிம்களை கைது செய்து சிறையில் தள்ளுவதில் காட்டப்படும் வேகம், அவ்வழக்கை நடத்துவதிலோ, முறையான ஆதாரங்கள் இல்லையென்பதனை ஒப்புக் கொள்வதிலோ, அவர்களை விடுதலை செய்வதிலோ காட்டப்படுவதில்லை.

காவல்துறையினரின் இத்தகைய அதிகார துஷ்பிரயோகங்களை தட்டிக் கேட்க வேண்டிய பத்திரிக்கையாளர்களின் செயல்பாடு அனைத்தையும் விட மோசமானதாக உள்ளது.

ஒரு சம்பவம் நடைபெறும் பொழுது, அது குறித்த முதற்கட்ட விசாரணை கூட முடிவு பெறாத நிலையில் காவல் துறையினரின் கற்பனையில் உதித்கும் இயக்கத்தோடு முடிச்சுப் போட்டு முழுக் கதையையும் எழுதி முடிவுரையையும் எமுதத் துணிந்து விடுகின்றனர்.

இவ்வாறு தான் உருவாக்கிய கருத்துருவாக்கத்திற்கு மாற்றமான செய்தியோ, தீர்ப்போ வெளியானால், தான் வெளியிட்ட முந்தய செய்திக்கு மறுப்போ, வறுத்தமோ தெரிவிக்கவும் முன்வருவதில்லை.

"இந்துத்துவா' சார்பு பத்திரிக்கைகள் மட்டுமல்ல, 'த ஹிந்து' பத்திரிக்கையும் கூட இந்த நடைமுறையைத் தான் கடைப்பிடிக்கிறது.

பொதுவாக 'த ஹிந்து' பத்திரிக்கை குறித்து அவர்களுடைய நேர்மை குறித்து – 'அவர்கள் மரண அறிவிப்பு விளம்பரம் கொடுத்தால் கூட மரணச் சான்றிதழ் காட்டினால் தான் பிரசுரிப்பார்கள்' - என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அங்கும் சில காவியாடுகள் நுழைந்து விட்டன போலும்.

மாவீரன் ஹேமந்த் கர்கரேவின் தீவிர புலனாய்விற்குப் பின்னர், நாட்டில் நடைபெற்ற ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பின்னணியிலும் ஹிந்துத்துவ சக்திகள் செயல்படுவதை நாட்டு மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். அந்த வகையில் 2007 மே மாதம் நடைபெற்ற ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிலும் ஆர்எஸ்எஸ் குண்டர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகி தற்சமயம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஆனால், 2007 அக்டோபர் 15 இல் வெளியான ஹிந்து பத்திரிக்கை 'இஸ்லாமிய தீவிரவாதத்தின் சவால்' என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியது. அதில் 'அஜ்மீரிலுள்ள ஹாஜா மொய்னுத்தீன் சிஸ்தி தர்ஹா தீவிரவாத தாக்குதலைப் போலவே ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் ஹர்க்கத் அல் ஜிஹாத் என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் சுட்டிக் காட்டப்படுகிறது.
கடவுளின் படைப்பினங்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த பிரச்சாரம் மேற்கொண்ட துறவிகளின் மடங்களையே தகர்க்கத் துணிந்தவர்கள், மனித குலத்தையே வெறுப்பவர்கள் எத்துணை அபாயகரமானவர்கள். இத்தகைய கொடூர தாக்குதலை நடத்துபவர்கள் இஸ்லாமிய தீவிரவாத குழுக்களான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷி முஹம்மது மற்றும் ஹக்கத் அல் ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் என விசாரணை அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்'.
ஒரு பத்திரிக்கையின் தலையங்கம் என்பது அப்பத்திரிக்கையின் தரத்தை நிறுவக்கூடியதாகும். இத்தலையங்கம் அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்ஜித் சம்பவங்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள் தான் காரணம் என அறுதியிட்டுக் கூறியுள்ளது.

விசாரணையின் நோக்கத்தை திசை திருப்பி விடும் பாசிச ஹிந்துத்துவ சக்திகளின் உத்தி. இதற்காகவே பயிற்சியளிக்கப்பட்ட பலரை பத்திரிக்கை உலகில் இந்துத்துவாவாதிகள் ஊடுருவ விட்டுள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் 'த ஹிந்து' பத்திரிக்கையின் தீவிரவாத சிறப்பு செய்தியாளர் திரு.ப்ரவீன் ஸ்வாமி.




இந்த பிரவீன் ஸ்வாமி தான், மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிற்கு 5 நாள் கழித்து 'மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பின் பின்னணியில்' என்று எழுதிய செய்திக் கட்டுரையில் இதற்கு முழு காரணமும் யார் என்று தீர்மானமாக முடிவெடுத்து உறுதியாக எழுதுகிறார்'" மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தெளிவாக நாட்டுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், பம்பாய் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னும், இந்திய நகரங்களை தாக்குவதென்ற இஸ்லாமிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை என்பது தான்'.
மீண்டும் 2007 அக்டோபர் 14 ஆம் தேதிய நாளேட்டின் முதல் பக்கத்தில் 'அஜ்மீர் குண்டு வெடிப்பில் ஹர்க்கத் அல் ஜிஹாதின் பங்கு – புதிய தகவல்கள்' என்ற தலைப்பில் ஹுஜி அமைப்பைச் சேர்ந்த இரு பங்காளிகள் டெ;டனேட்டர்களை செல்போனுடன் இணைத்து அதனை மக்கா மஸ்ஜிதில் வைத்து விட்டு தப்பியோடி விட்டனர்' என்று எழுதினார்.

இவ்வாறு காவல் துறையின் ஊதுகுழலாக தனது கட்டுரைகளை எழுதுவது மட்டுமல்லாமல், ஆசிரியர் குழுவில் தனக்குள்ள செல்வாக்கினால் தலையங்கங்களை கூட தனது விருப்பத்திற்கிணங்க வெளியிட காரணமாகியுள்ளார்.

இன்று அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்ஜித் சம்பவங்களின் பின்னணியில் அபினவ் பாரத் என்ற தீவிர ஹிந்துத்துவ அமைப்பும், ஆர்எஸ்எஸ் குண்டர்களும் சம்பந்தப்பட்டுள்ள உண்மை வெட்ட வெளிச்சமான பின்பு – 2007 தலையங்கம் மற்றும் செய்தி வெளியீட்டிற்காக 'தஹிந்து' மறுப்போ, வருத்தமோ தெரிவிக்க முன்வருமா?

பத்திரிக்கையின் தரத்தை கேள்விக்குறியாக்கிய பிரவின் ஸ்வாமியை ஓரம் கட்டுமா?

ஈரானிய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை அமெரிக்கா தற்சமயம் ஒப்புக் கொண்டதும், அமெரிக்கா வருத்தம் தெரிவிக்க வேண்டும், நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறன்றது.

அதுபோல் ஹிந்துவும் வருத்தம் தெரிவிக்க வேண்டும், நஷ்ட ஈடு வழங்கவேண்டுமென நாமும் போராட ஆரம்பித்தால் தான் முஸ்லிம்களின் மீதான பத்திரிக்கை தீவிரவாதம் சற்று மட்டுப்படும்.

No comments: