Tuesday, August 28, 2012

குர்-ஆனை பொய்யாக்க அவன் ஏன் முஸ்லிமாகவில்லை?

சமீபத்தில் எனக்கு மின்மடலில் அனுப்பப்பட்ட ஒரு செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஆக்கத்தை எழுதியவருக்கு (யாரென்று குறிப்பிடபடவில்லை) நன்றி. இதற்கு பொருத்தமாக மில்லரின் இணைய முகவரி சுட்டி மட்டுமே நான் இட்டது.

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதிய
ாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம் குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின்துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாததுமட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்

நபி ஈசா (அலை) JESUS அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது. குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப் போட்டது

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82)

என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.

இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்:" இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில், சிந்தனைகளில் தவறு இருக்கும்; தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை. உலகில் எந்தப் படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது; இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது." டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்


இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)

1973 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு’ (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம்என்கிறது இக்கொள்கை

‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்ஃபத்க்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!)

நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும். இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார் மில்லர்


“இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல;அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211)


என்று கூறும் குர்ஆன், ”(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!” (16:98) என்று கட்டளையிடுகின்றது.

ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?

டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவற்றை அற்புதங்கள்’ என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல நடத்திய அவர்.

அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் மரணிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.

அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக்கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை- பொய்யாக்கியிருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை.



லண்டன் பி.பி.ஸியில் தமிழக முஸ்லிம்களைப் பற்றிய ஒரு ஆய்வு தொடர்.



உலகப் புகழ் பெற்ற ஊடகமான பி.பி.ஸி. யின் தமிழ் பிரிவில், நெடுங்காலமாகவே "தமிழோசை" என்ற பெயரில் தமிழ் வானொலி ஒலிபரப்பப்பட்டு வருவது நாமெல்லாம் அறிந்ததே. அதில் கடந்த நான்கு வாரகாலமாக "தமிழக முஸ்லிம்களைப் பற்றிய ஒரு ஆய்வு தொடர்" ஒலிபரப்பாகி வருகிறது. தமிழக முஸ்லிம்களின் சமூக, அரசியல் மற்றும் வாழ்வியல் அம்சங்களை பல்வேறு கோணத்தில் ஆய்வு செய்து பதியப்பட்ட கருத்துக்களை, பி.பி.ஸி.யின் தமிழக நிருபர் கோபாலன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பட்ட முஸ்லிம் அன்பர்களை சந்தித்து எடுக்கப்பட்ட பேட்டியும், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் கருத்துக்களும்
இடம் பெற்று வருகிறது.

இன்றைய இந்தியச் சூழ்நிலைகளில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டியும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையும் துல்லியமாக எடுத்துரைத்த நிலையில் மத்தியரசு அவ்விரு நீதிபதிகளின் பரிந்துரைகளின் மேல் என்ன நடவடிக்கை எடுத்தது?

மதசார்பற்ற இந்திய அரசின், அரசியல் சாசன அமைப்பு சட்டம் முஸ்லிம்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியிருந்தாலும் யதார்த்த நிலையில், உரிமைகளுக்கு போராடும் பரிதாப சமூகமாகவே முஸ்லிம்கள் இருக்கிறார்கள் அல்லது இருக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதி பதவியோ அல்லது துணை ஜனாதிபதி பதவியோ அல்லது இது போன்ற அதிகாரமற்ற அலங்கார பதவிகளில் முஸ்லிம்களை அமர்த்தி விட்டு அவர்களின் ஓட்டுக்களை வேட்டையாடும் அரசியல் நடந்து வருகிறது. முஸ்லிம்களுக்கு அரசியலில் உரிய இடம் கிடைக்கவில்லை என்ற குற்றசாட்டு வைக்கப்படும் போது, கவனமாக முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட ஜனாதிபதி பதவிகள் சுட்டிக்காட்டப்பட்டு அந்த வாதத்தை முறியடிக்கும் செயல் நடைபெறுகிறது.

வறுமைக்கு வாக்கப்பட்டவர்களாக இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள் என்றால், அசிம் பிரேம்ஜி என்ற பணக்காரரை கை காட்டுகிறார்கள். அவர் முசல்மானா இல்லையா என்பதே பலருக்கு தெரியாது. முஸ்லிம்களுக்கு எவ்வித உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு விட கூடாது என்றே ஒரு வகுப்புவாத கூட்டம் தொடை தட்டி தடையாக இருக்கிறது.

மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த பிரபல ஆலிம் பி.ஜெயினுல் ஆபிதீன், மனித நேய மக்கள் கட்சியின் முனைவர்.ஜவாஹிருல்லா, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனர் பாக்கர், முஸ்லிம் லீக்கின் பாத்திமா முசாபர் போன்றோர்களும் தங்களது கருத்துகளை சொல்லி வருகின்றனர். பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாமான்ய முஸ்லிம்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பாகி வருகிறது.


கீழேயுள்ள சுட்டியில் சுட்டுங்கள்.