Tuesday, July 31, 2012

கேரளாவில் குண்டு வெடிப்பு: ஆர்.எஸ்.எஸ். ஊழியர் கைது.

ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள் ஆங்காங்கே குண்டு வெடிப்பை நிகழ்த்தி அந்த பழியையும் முஸ்லிம்கள் மேல்  போட்டு வருகிறார்கள் என்றால் அந்த செய்தியை வெளியிட கூட   ஊடகங்களுக்கு மனம் வருவதில்லை.  ஊடகங்களின் இந்த கரிசன போக்கு தான்  இந்து தீவிரவாதிகளுக்கு  வசதியாக இருக்கிறது.

ஹேமந்த் கார்கரே மட்டும் இந்து தீவிரவாதத்தின் குண்டு வெடிப்பு எபிசொட்டை வெளிக்கொணராமல் இருந்த்திருந்தால்  இவர்கள் வைக்கும் குண்டு வெடிப்பின் பழியையும் முஸ்லிம்களே சுமந்திருக்க வேண்டும்.  தங்களுக்கு தடையாக இருந்த அவரையும்  போட்டு தள்ளி விட்டனர்.  இனி.. இவர்கள்  போடப்போகும் ஆட்டத்திற்கு எத்தனை பழிகளையும் முஸ்லிம்கள் சுமக்க வேண்டுமோ? எத்தனை பலிகளை மனித இனம் இழக்க நேரிடுமோ?

"சிமி" மீது வைக்கப்படும் அத்தனை குற்றச்சாட்டுக்களும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் பொருந்தும் என்று திக் விஜய் சிங் ஒரு முறை சொன்னார் . ஆனால் "சிமி" க்கு மட்டும் தடை.

நேற்று முன் தினம் கேரளா மாநிலத்தின் கோழிகோடு மாவட்டத்தில் ஒரு குண்டு ஒன்று  வெடித்தது . இது தொடர்பாக  ஜோஷிராம் என்ற ஆர்.எஸ்.எஸ் .காரனை  கைது செய்துள்ளனர்.

கோயிலாண்டி  என்ற ஊருக்கருகில்  அவனது  வாடகை வீட்டில் வைத்து  இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் அவனது தாயாரே காயமடைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிட தகுந்தது. எதற்காக ஒத்திகை பார்த்து கொண்டு இருந்தானோ ? அதுவே  விபத்தாகி  அவனை வெளியுலகிற்கு காட்டி கொடுத்துள்ளது.

வழக்கம் போல் ஆர்.எஸ்.எஸ் , அவன் எங்களை சார்ந்தவனே இல்லை என்று சாதிக்கும்.


http://www.mathrubhumi.com/english/story.php?id=126586

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article3698903.ece


No comments: