Monday, April 5, 2010

கிங்ஃபிஷர் விமானத்தில் வெடிக்குண்டு: ஆர்.எஸ்.எஸ் தொடர்பு அம்பலம்


கிங்ஃபிஷர் விமானத்தில் வெடிக்குண்டு: ஆர்.எஸ்.எஸ் தொடர்பு அம்பலம்


திருவனந்தபுரம்:கிங்ஃபிஷர் விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்குண்டுத் தொடர்பான விசாரணையில் கைதான ராஜசேகரன் நாயர் என்பவர் ஹிந்துத்துவா அமைப்பான ஹரித்துவார் மித்ரா மண்டலின் உறுப்பினராவார்.
இந்த அமைப்பிற்கும் பாசிச ஹிந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ் க்குமிடையே தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. மித்ரா மண்டலின் கொள்கைப் பிரச்சாரத்திற்காக வெளியிட்டுள்ள காலண்டரில் ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர்களான ஹெட்கோவர், கோல்வால்கர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.


கேரளாவைச் சார்ந்த தொழிலதிபர் ஒருவரின் தயவில் குஜராத்தில் செயல்படும் தொழில் நிறுவனமான உமா எஞ்சினியரிங் என்ற நிறுவனம்தான் இக்காலண்டரை தயார்செய்து வெளியிட்டுள்ளது. உமா எஞ்சினியரிங் என்ற நிறுவனத்தின் தலைமையகம் ஹரித்துவாராகும்.
வெடிக்குண்டு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள ராஜசேகரன் நாயர் சி.ஐ.எஸ்.எஃபில் சேருவதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுமிக்க(active) உறுப்பினராக இருந்துள்ளார் என்பதற்கான விவரமும் புலனாய்வில் கிடைத்துள்ளது.


குஜராத்தில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவரின் உதவியினால்தான் ராஜசேகரன் நாயர் சி.ஐ.எஸ்.எஃப் என்ற central industrial security force என்ற பாரா மிலிட்டரி படையில் சேர்ந்துள்ளார். இப்பகுதியிலிருந்து ஏராளமான நபர்களை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புடைய குஜராத்தில் வசிக்கும் கேரள தொழில் அதிபர் பல்வேறு மத்திய அரசு பாதுகாப்புப் படைகளில் பணிகளுக்கு சேர்க்க உதவி புரிந்துள்ளார்.


ராஜசேகரன் நாயர் சி.ஐ.எஸ்.எஃப்பில் சேர்ந்தவுடன் ஆர்.எஸ்.எஸ் தொடர்பை அடக்கி வாசித்தார். 20 ஆண்டுகள் சி.ஐ.எஸ்.எஃபில் கான்ஸ்டபிள், ஹவில்தார் பதவிகளில் பணியாற்றிய ராஜசேகரன் நாயர் பின்னர் சுயமாக ஓய்வுப் பெற்று 2003 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஆர்.ஓ, எஃப்.எ.சி.டி, நேசனல் போலீஸ் அகாடமி போன்ற நிறுவனங்களிலும் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.


இதன் பிறகுதான் ஹரித்துவார் மித்ரா மண்டல் என்ற ஹிந்துத்துவா அமைப்புடன் ராஜசேகரன் நாயருக்கு தொடர்பு ஏற்பட்டது.
-தேஜஸ்

No comments: