Wednesday, December 10, 2008

பாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன?

யூ ட்யூபில் பாபர் மசூதி பற்றி மேய்ந்துக் கொண்டிருந்த போது கிடைத்த விடியோ தான் இது. கேள்வியும் பதிலும் சுவாரஸ்யமாக இருந்ததால் பதிவிட்டுள்ளேன்.


இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் விஸ்வரூபம் எடுத்தது பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் தான், ஆனால் அதனை இடித்தவர்கள் இன்னும் உலா வந்து கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே மிகப் பழமையான வழக்கும் இது தான். தீர்ப்பு தான் வந்தபாடில்லை. ராமஜென்மபூமி பிரச்சினையை கையில் எடுத்தவுடன் தான் பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது. மதச்சார்பற்ற இந்தியா மதப்பூசல்களால் சிதறாமல் இருக்க வகுப்புவாதிகளை அடையாளம் காண வேண்டும்.

வஞ்சிக்கப்பட்டு, அபகரிக்கப்பட்டு, இடிக்கப்பட்ட அந்த நிகழ்வுக்குப் பின் தான் இந்தியாவில் பயங்கரவாதத்தின் துன்பப் பயணம் தொடருகிறது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படுவதற்கு சமமே. சிறுபான்மை சமூகத்திற்கு அனீதம் இழைப்பது ஒரு ஜன நாயக நாட்டிற்கு அழகல்ல.

No comments: